பயணிகள் மற்றும் வாடிக்கையாளர்களை இலக்கு வைத்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் போன்று ஆள்மாறாட்டம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் மற்றும் வாடிக்கையாளர்களை இலக்கு வைத்து அண்மைக்காலமாக பாரிய அளவிலான மோசடி நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மோசடி செய்பவர்கள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து, WhatsApp (வட்ஸ்அப்) அல்லது நேரடித் தொலைபேசி அழைப்புகள் மூலம் வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்வதை இந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இவ்வாறு தொடர்புகொண்டு உரையாடும் மோசடிக்காரர்கள், வாடிக்கையாளர்களிடம் சில மொபைல் செயலிகளை (Mobile Apps) பதிவிறக்கம் செய்யுமாறு கூறுவதும் கைபேசித் திரையை பகிருமாறு (Screen Share) கோருவதும், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய OTP கடவுச்சொற்கள், வங்கி இரகசிய இலக்கங்கள் (PIN), கடன் அட்டை விபரங்கள் அல்லது ஏனைய முக்கியமான நிதித் தகவல்களைத் தருமாறு கோருவதும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதில் மிகுந்த எச்சரிக்கையாக செயற்படவேண்டும் என்று நிறுவனம் அறிவுறுத்துகிறது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது விமானச் சீட்டு முன்பதிவு, சலுகைகள் அல்லது வேறு எந்த நோக்கத்துக்காகவும் வாடிக்கையாளர்களை WhatsApp மூலமாகவோ அல்லது தேவையற்ற தொலைபேசி அழைப்புகள் மூலமாகவோ தொடர்புகொள்வதில்லை எனத் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒருபோதும் வாடிக்கையாளரின் OTP, வங்கி PIN இலக்கங்கள், கடன் அட்டை விபரங்கள் அல்லது இரகசியத் தகவல்களைக் கோருவதில்லை. அது மட்டுமன்றி, வாடிக்கையாளரின் கைபேசித் திரையைப் பகிருமாறு (Screen share) அல்லது செயலிகளை பதிவிறக்கம் செய்யுமாறு ஒருபோதும் இவ்விமான போக்குவரத்து சேவை நிறுவன ஊழியர்கள் கேட்கமாட்டார்கள் என்பதையும் உறுதிபட தெரிவித்துள்ளது.

எனவே, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிக்காரர்கள் விடயத்தில் வாடிக்கையாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் இதுபோன்ற எந்தவொரு தகவல்தொடர்பையும் உடனடியாக புறக்கணித்துவிட்டு, உரிய அதிகாரிகளிடம் புகார் அளிக்குமாறும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கடுமையான அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

பயணிகளும் பொதுமக்களும் அனைத்து விளம்பரங்கள், சலுகைகள் மற்றும் தகவல்களை விமான நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.srilankan.com என்ற இணையத்தளம் அல்லது அதன் சரிபார்க்கப்பட்ட சமூக ஊடக சேனல்கள் மூலம் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

net

நெத்தலியாறு விவசாயிகள் ரவிகரன் எம்.பியிடம் கோரிக்கை

April 18, 2026

தமது சொந்தக் காணிகளிலேயே சிறுபோக நெற்செய்கையை மேற்கொள்வதற்கு அனுமதியைப் பெற்றுத்தருமாறு கல்மடுக்குளத்தின் சிறுபோக நீர்ப்பாசன பங்காளர்களான விசுவமடு மேற்கு கமக்கார

ds

வடக்கு, கிழக்கு சிகையலங்கார நிலைய சம்மேளனங்களை இணைப்பது குறித்து ஆய்வு

April 18, 2026

வடக்கு – கிழக்கு மாகாணத்தில் உள்ள அழகக சம்மேளனங்களை இணைத்து ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வருவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்

ind

இலங்கை விஜயத்தின் போது இந்திய துணை குடியரசு தலைவர் இந்திய வம்சாவளி தமிழர்களை நோக்கி நேசக்கரம் நீட்டுவார்- இந்திய தூதுவர்

April 18, 2026

பரந்த அளவிலான இராஜதந்திர மற்றும் மக்கள் நலன் சார்ந்த பயணமாக, இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள்

chaco

நிலக்கரி முறைகேடு; அடுத்த வாரம் விசாரணை ஆரம்பம்

April 18, 2026

இலங்கையில் நிலக்கரி இறக்குமதி மற்றும் மின் உற்பத்தி நடவடிக்கைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்

cana gu

கனடாவின் நோவா ஸ்கோடியா கிராமப்புற துப்பாக்கிச் சூடு: ஆறாம் ஆண்டு நினைவேந்தல்!

April 18, 2026

கனடாவின் நோவா ஸ்கோடியா கிராமப்புற பகுதியில், பொலிஸ் அதிகாரி வேடமணிந்த நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு இளைஞர்

her

லெபனானில் பிரெஞ்சு அமைதிப்படை சிப்பாய் பலி: ஹிஸ்புல்லா மீது மக்ரோன் குற்றச்சாட்டு

April 18, 2026

தெற்கு லெபனானில் இன்று காலை இடம்பெற்ற தாக்குதலில், சர்வதேச அமைதிப்படைப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர்

sea

பொலிஸாரிடமிருந்து தப்பிக்க கடலில் குதித்த நபர் உயிரிழப்பு

April 18, 2026

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், பொலிஸாரிடம் சிக்காமல் இருக்க கடலில் குதித்த நிலையில், நீரில்

Parl

இலங்கை அமைச்சரவையில் மாற்றங்கள்?

April 18, 2026

நிலக்கரி கொள்முதல் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் குமார ஜெயக்கொடி பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்த வெற்றிடத்திற்குத் துறைமுகங்கள் மற்றும் விமான

lan

லங்லியில் அடுத்தடுத்த நாட்களில் கத்திக்குத்து: இரு இளைஞர்கள் காயம்

April 18, 2026

லங்லி பகுதியில் இரண்டு நாட்களில் இரண்டு வெவ்வேறு கத்திக்குத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும், இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் எந்தத்

colo

மாணவர்களை இலக்கு வைக்கும் ‘கொலைப்பட்டியல்’: பதற்றத்தில் பிரிட்டிஷ் கொலம்பியா சமூகம்

April 18, 2026

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சிறிய நகரம் ஒன்றில் 16 மாணவர்களைக் குறிவைத்து “கொலைப்பட்டியல்” என்று அழைக்கப்படும் பட்டியல் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து,

hur

ஹோமுஸ் நீரிணையில் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

April 18, 2026

மான் கடற்கரையிலிருந்து சுமார் 20 கடல் மைல் (30 கி.மீ) தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்றைத்

pa

ராமநாதபுரத்தில் இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள் சிக்கின!

April 18, 2026

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் கடற்கரை ஊடாக இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 91 லட்சம் ரூபாய்