பயங்கரவாத தடைச்சட்டம் மனித குலத்துக்கு எதிரானது ; விசாரணைகள் என்ற பெயரில் கொலை செய்ய கூடாது – விஜயதாஸ ராஜபக்ஷ

சுரேஸ் சலே தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் விசாரணை என்ற பெயரில் கொலை செய்ய கூடாது.

“பயங்கரவாத தடைச்சட்டம் மிகவும் மோசமானது. மனித குலத்துக்கு எதிரானது.யுத்தம் இல்லாத நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் எதற்கு, அந்தச் சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்ய வேண்டும் ”

என்று குறிப்பிட்ட மக்கள் விடுதலை முன்னணி இன்று பயங்கரவாத தடைச்சட்டத்தை முன்னிலைப்படுத்திச் செயற்படுகிறது என முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

கண்டியில் ஞாயிற்றுக்கிழமை(14) இடம்பெற்ற நிகழ்வில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.குண்டுத்தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். உண்மையை வெளிப்படுத்த வேண்டும். நீதியான விசாரணைகளுக்கு எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் தற்போது விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரிகள் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று 7 நாட்கள் முடிவடைந்த பிறகும் நீதவான் நீதிமன்றத்துக்கு ‘பி’ அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. நாட்டில் ஏதேனும் சிறு அசம்பாவிதம் இடம்பெற்றால் அது குறித்து 24 மணித்தியாலத்துக்குள் நீதவான் நீதிமன்றத்துக்கு ‘பி’ அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு உண்டு.

7 நாட்கள் கடந்தும் அறிக்கை சமர்ப்பிக்காத காரணத்தால் நான் முறைப்பாடளிக்குமாறு குறித்த பொலிஸ் நிலையங்களுக்கு எழுத்துமூலமாக அறிவுறுத்தினேன். குண்டுத்தாக்குதல் இடம்பெற்று 250 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக விஜயதாஸ ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார் அதனால் முறைப்பாடளிக்கிறோம் என கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு தற்போதைய விசாரணை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் எமது அரசாங்கத்தில் விசாரணைகளை சிறந்த முறையில் மேற்கொண்டு 80 குற்றவாளிகளை அடையாளப்படுத்தி 41 வழக்குகளை தாக்கல் செய்தோம்.

இவ்வாறான பின்னணியில் தான் அப்போதைய சட்டமா அதிபர் சேவையில் இருந்து ஓய்வுப்பெறுவதற்கு ஒருநாளைக்கு முன்னர் உறக்கத்தில் இருந்து எழுந்ததைப் போன்று ‘ குண்டுத்தாக்குதலின் பின்னணியில் பிரதான சூத்திரதாரி உள்ளார்’ என்று குறிப்பிட்டார்.இதன் பின்னர் பேராயர் கர்தினால் பிரதான சூத்திரதாரி யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அப்போதைய சட்டமா அதிபர் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் வாக்குமூலம் பெறுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் அதற்கு அப்போதைய சட்டமா அதிபர் இணக்கம் தெரிவிக்கவில்லை. வாக்குமூலம் பெறுவதை தடுப்பதற்காக நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றுக்கொண்டார்.

இந்த விடயம் குறித்து அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் வினவிய போது ‘சட்டமா அதிபர் தனது சேவை காலத்தை மேலும் ஒருவருடத்துக்கு நீட்டிக்குமாறு குறிப்பிட்டார்.அதற்கு நான் இணக்கம் தெரிவிக்கவில்லை. அதன் பின்னரே இவ்வாறு குறிப்பிடுகிறார்’ என்று என்னிடம் குறிப்பிட்டார்.

குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை பிடிப்பதாகவும், உண்மையை வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுக்கொண்டு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்குள் பிரதான சூத்திரதாரியை அறிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆனால் இன்றுவரை உண்மை வெளிப்படுத்தப்படவில்லை.

சுரேஸ் சலே தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் விசாரணை என்ற பெயரில் கொலை செய்ய கூடாது.பயங்கரவாத தடைச்சட்டம் மிகவும் மோசமானது. மனித குலத்துக்கு எதிரானது.

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய வகையில் புதிய சட்டமூலத்தை நாங்கள் சமர்ப்பித்தோம்.ஆனால் மக்கள் விடுதலை முன்னணியின் மூன்று உறுப்பினர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தை நாடினார்கள்.

யுத்தம் இல்லாத நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் எதற்கு, அந்தச் சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட மக்கள் விடுதலை முன்னணி இன்று பயங்கரவாத தடைச்சட்டத்தை முன்னிலைப்படுத்திச் செயற்படுகிறது.

75 ஆண்டுகாலத்தை சாபம் என்று விமர்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணியினர் கடந்த ஒன்றரை வருட கால ஆட்சியில் என்ன செய்தார்கள்.கடந்த கால ஆட்சியாளர்கள் நாட்டுக்கு ஏதாவதொன்றை செய்துள்ளார்கள். கடந்த காலங்களை விமர்சித்துக் கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க என்ன செய்வார் என்று நாங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.

7

6,000 கோடிக்கு பட்டாசு ஆர்டர்! – சிவகாசிக்கு விடியல் கொடுத்த அமைச்சர் கீர்த்தனா!

June 15, 2026

சிவகாசி: சிவகாசி பட்டாசுத் தொழிலை உலகளாவிய சந்தையில் நிலைநிறுத்தத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அசுர வேகத்தில் களமிறங்கியுள்ளார். சிவகாசியில் பட்டாசு

6

“நிதானத்தோடு பேசுங்கள்!” – ராகவா லாரன்ஸுக்கு வீரபாண்டியன் அதிரடி அறிவுரை!

June 15, 2026

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, தவெக-வில் இணைந்த 8 நாட்களிலேயே அரசியலில் இருந்தே

5

தவெக-வில் இணைந்த 8 நாட்களில் விலகல்! – அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் எம்எல்ஏ!

June 15, 2026

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, தவெக-வில் இணைந்த 8 நாட்களிலேயே அரசியலில் இருந்தே

Pillayan-733199

பிள்ளையானுக்குத் தொடர்புடை ஐந்து கொலைக் குற்றச்சாட்டுகள்: மட்டக்களப்பு நீதிமன்றில் CID அறிக்கை

June 15, 2026

மட்டக்களப்பு: கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் பிரதி அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு, ஐந்து

Screenshot_20260615_140707_YouTube

பரபரப்பான சூப்பர் ஓவர்: இந்திய ஏ அணியை வீழ்த்தி இலங்கை ஏ அணி மிரட்டல் வெற்றி!

June 15, 2026

தம்புள்ளை: தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முக்கோணத் தொடரின் (Tri-series) லீக் போட்டியில், இந்திய ஏ (India A)

Gnanasara-Thera

தனக்கு எதிரான அவதூறுகளுக்கு எதிராக ஞானசார தேரர் CID இல் முறைப்பாடு

June 15, 2026

கொழும்பு: பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச்செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர், சமூக ஊடகங்கள் வாயிலாக தனக்கு எதிராக

Gammanpila-Dilth-Wimal (1)

திலித், விமல் மற்றும் கம்மன்பிலவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு: CID விசாரணைகளை ஆரம்பித்துள்ளது!

June 15, 2026

கொழும்பு: நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்ட ஆறு பேருக்கு

Hemasiri-Pujith

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் வழக்கு: ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தரவின் தீர்ப்பு ஜூலை 31 இல்

June 15, 2026

கொழும்பு: கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்குத் தவறியமை மற்றும் கடுமையான குற்றவியல்

TEP25OGMQZAGDCXU2QBJOPMSJU

கனடா ஒஷாவாவில் குழு மோதல்: கத்திக் குத்துக்கு இலக்கான நபர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

June 15, 2026

கனடா: ஒஷாவா (Oshawa) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர குழு மோதலின் போது, பலமுறை கத்திக் குத்துக்கு இலக்கான

police toro

ரொறன்ரோவில் பரபரப்பு: துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார் மீது காரை மோதிவிட்டு தப்பிய சந்தேகநபர்

June 15, 2026

கனடா: ரொறன்ரோவின் கிழக்கு பகுதியில் திங்கள்கிழமை (ஜூன் 15, 2026) அதிகாலை திருடப்பட்ட வாகனம் ஒன்றை மடக்கிப் பிடிக்க பொலிஸார்

4

“அதிமுக – திமுக ஒன்றாகிவிட்டன!” – ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு!

June 15, 2026

செங்கல்பட்டு: தவெக-வில் மாற்றுக்கட்சியினர் இணையும் விழா செங்கல்பட்டில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக

3

“கேள்வி கேட்பது குற்றமா?” – ஈபிஎஸ்-ஐ மறைமுகமாகச் சாடிய சி.விஜயபாஸ்கர்!

June 15, 2026

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சி.வி.ஜயபாஸ்கர் உள்ளிட்டோர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தமிழக சட்டமன்றத்