பப்ஜி கேமிற்கு அடிமையான இளைஞன் பலி

பப்ஜி கேமிற்கு அடிமையான இளைஞன், விடிய விடிய விளையாடியதில் அவருக்கு எதிர்பாராத விதமாக இரத்த அழுத்தம் அதிகரித்த நிலையில், மூளையில் இரத்த நாளம் வெடித்துள்ளது. அவருக்கு உடனடியாகத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சைப் பலனில்லாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வேலைக்கு நடுவே சற்று நேரம் கேம் விளையாடுவது கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கும். ஆனால், இந்தக் காலத்தில் சிலர் வீடியோ கேம்களுக்கே அடிமையாகிவிடுகிறார்கள். இரவு முழுவதும் கூட கேம் விளையாடுகிறார்கள். அப்படி விளையாடும்போது அவர்களுக்கு மோசமான உடல்நிலை பாதிப்புகளும் கூட ஏற்படுகிறது.

அப்படியொரு சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதில் உயிரிழந்த நபர் கைர்நகரைச் சேர்ந்த முகமது கைஃப் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் வீட்டில் பிரபலமான பப்ஜி ஆன்லைன் விளையாட்டை எப்போதும் விளையாடுவாராம். ஹெட்போனை போட்டுக்கொண்டு விடிய விடிய கேம் விளையாடுவதை அவர் வாடிக்கையாக வைத்துள்ளார். இரவு நேரங்களில் இப்படிக் கண்விழித்து விளையாட வேண்டாம் என அவரது வீட்டில் பலரும் அறிவுறுத்திய போதிலும் இவர், அதையெல்லாம் கேட்பதாக இல்லை. தொடர்ந்து இரவு நேரங்களில் கண் விழித்து கேம் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார்.

குறித்த இளைஞன் சம்பவத்தினத்தன்று வழக்கம் போலவே காதுகளில் ஹெட்ஃபோன்களை அணிந்தபடி கைஃப் பப்ஜி கேமை உக்கிரமாக விளையாடிக் கொண்டு இருந்தார்.

அப்போது அவருக்குத் திடீரெனக் கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. தனக்குப் பயங்கரமாகத் தலை வலிப்பதாக அவர் சொல்லியுள்ளார். பிறகு ஓரிரு நொடிகளிலேயே அவர் அங்கேயே இருந்தபடியே மயங்கிச் சரிந்து விழுந்துள்ளார். அவரது நிலையைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், எந்தவொரு தாமதமும் இல்லாமல் அவரை உடனடியாக அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

கைஃபின் உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்த உள்ளூர் மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக அவரை டெல்லியில் உள்ள சிறப்புத் தனியார் மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ரியல் எஸ்டேட் தொழிலில் இருக்கும் இளைஞனின் தந்தை கூறியதாவது, தனது மகன் கடந்த பத்து ஆண்டுகளாக உயர் இரத்த அழுத்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்ததாகத் தெரிவித்தார்.
மேலும், இதற்காக கைஃப் தனியாகச் சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார். சிகிச்சையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்துள்ளது. ஆரோக்கியமாகவே காணப்பட்டார். இந்தச் சூழலில் தான் கேம் விளையாடும்போது அவருக்கு இரத்த அழுத்தம் அதிகரித்து அவர் உயிரிழந்துள்ளார். இதுபோல ஒரு சம்பவம் ஏற்படும் என அவரது குடும்பத்தினர் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்றார்.

sri

தியாகத் தாய் அன்னை பூபதி போன்று நாம் கொள்கை உறுதியோடு பயணிக்க வேண்டும் – சிறீதரன் எம்.பி

April 18, 2026

எமது விடுதலைப் போராட்ட வரலாறு என்பது வெறும் பதிவுகள் அல்ல; அது எமது அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்த வேண்டிய

su

தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர் பேச்சுவார்த்தை

April 18, 2026

முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

sta

தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழக மக்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்தது பாஜக – மு.க. ஸ்டாலின்

April 18, 2026

“தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழ்நாட்டு மக்களைச் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்த பாஜகவுக்கும், அவர்களுடைய ஏவல் அடிமைகளான அதிமுக-வுக்கும்

pi

பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட உதயநிதியை ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக மக்கள் ஏற்க மாட்டார்கள்

April 18, 2026

“தமிழக கலாசாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட உதயநிதியை தமிழக மக்கள் ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,”

po

முன்னாள் எம்.பி சம்பத் அத்துகோரள மீது தாக்குதல்

April 18, 2026

காலி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள, பிடிகல – பம்பரவான

abu

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பு: பொலிஸார் தீவிர விசாரணை

April 18, 2026

இலங்கையின் பல பகுதிகளில் பெண்கள் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாகப்

ka

கரந்தெனிய ராஜு” 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை

April 18, 2026

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட “கரந்தெனிய ராஜு” எனப்படும் பாதாள உலகக் குழு சந்தேக நபர், மேலதிக

v

திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்புவது உறுதி – விஜய்

April 18, 2026

அளவில்லாமல் அராஜகத்தையும் ஊழலையும் செய்து, அளவில்லாமல் பொய் வாக்குறுதிகள் தந்து மக்களை ஏமாற்றும் லிமிடெட் கம்பெனி திமுகவை இந்தத் தேர்தலில்

tru

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாவிடின் மீண்டும் குண்டுவீச்சு – ட்ரம்ப் எச்சரிக்கை

April 18, 2026

ஈரானுடன் எட்டப்பட்டுள்ள போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குள் நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக மீண்டும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும்

ele dea

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

April 18, 2026

ஹாலி-எல, உடுவர பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வயல் நிலத்திற்கு சட்டவிரோதமான முறையில்

hurm

ஹோமுஸ் நீரிணையை ஈரான் இராணுவம் மீண்டும் மூடியது

April 18, 2026

ஈரான் தனது இராணுவத்தின் மூலம் ஹோமுஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக அந்நாட்டு அரசு

lal

10 பில்லியன் ரூபாய் நட்டஈடு கோருகிறார் அமைச்சர் லால் காந்தா

April 18, 2026

தனது 2025-ஆம் ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான வெளிப்படுத்தலைத் தவறாகச் சித்தரித்து, அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்டதாகக்