“நீலகாமம் பிரகடனம்” அரசியல் தலைவர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது

இரத்தினபுரி மாவட்டம், கஹவத்தை நீலகாமம் தோட்டத் தொழிலாளர் குடியிருப்பு மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலைக் கண்டித்தும், மலையக மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் நேற்று வெளியிடப்பட்ட “நீலகாமம் பிரகடனம்” அரசியல் தலைவர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

சமூக செயற்பாட்டுக்கான இளைஞர் குழு ஏற்பாட்டில் கஹவத்தை, நீலகாமம் முதலாம் இலக்கப் பிரிவுத் தோட்டத்தில் நேற்று இடம்பெற்ற திறந்தவெளி மக்கள் கலந்துரையாடல் நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், அரசியல் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தோட்ட தொழிலாலளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இப்பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த 2026 ஏப்ரல் 22ஆம் திகதி நீலகாமம் தோட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் குண்டர்களால் மேற்கொள்ளப்பட்ட மலேச்சத்தனமான தாக்குதலானது, நாட்டின் பிரஜைகள் என்ற ரீதியில் எமது இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ளதுடன் இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தோட்ட நிர்வாகங்களால் முன்னெடுக்கப்படும் இவ்வாறான தொழிலாளர் அடக்குமுறைகள் மற்றும் அராஜகங்களை இனிமேலும் தாங்கிக் கொள்ள முடியாது.தோட்டத் தொழிலாளர்களையோ அல்லது பெருந்தோட்டங்களைச் சார்ந்திருப்போரையோ அச்சுறுத்துதல் மற்றும் அடக்குமுறைக்கு உட்படுத்தும் செயற்பாடுகளைத் தோட்ட நிர்வாகங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்.

குறிப்பாகத் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் முன்னாள் பாதுகாப்புப் படையினரை அழைத்து வந்து தாக்குதல்கள் நடத்துவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு ஒவ்வொரு தோட்டத்திலும் தோட்டத் தலைவர்கள், நிர்வாக சபையினர், சட்டத்தரணிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கிய ‘தொழிலாளர் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு’ உருவாக்கப்பட வேண்டும்.

இக்குழுக்கள் பெருந்தோட்ட மற்றும் சமூக வசதிகள் அமைச்சின் கண்காணிப்புடன் மாவட்ட ரீதியில் செயற்படுத்தப்படுவது அவசியமாகும்.

மேலும், இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தேசத்திற்காக உழைக்கும் மக்களுக்கு முறையான முகவரியுடன் கூடிய காணி மற்றும் வீடமைப்புத் திட்டத்தை பாராளுமன்றமும் தற்போதைய அரசாங்கமும் பாரபட்சமின்றி முன்னுரிமை அடிப்படையில் முன்னெடுக்க வேண்டும்.

இதற்காகச் சுயாதீனமாக இயங்கும் குழுவொன்றைப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு உருவாக்க வேண்டும்.மலையகப் பகுதிகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் பட்சத்தில், கட்சி மற்றும் பிரதேச வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அனைத்துத் தமிழ் அரசியல் தலைமைகளும் ஓரிடத்தில் கூடி ஆராய்ந்து ஒற்றுமையாகத் தீர்க்கமான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

பெருமழைக் காடுகளை அழித்துத் தேயிலைத் தேசங்களை உருவாக்கிய நாம், எமது மண்ணில் வாழும் உரிமையைப் பறிக்க யாருக்கும் அனுமதி வழங்கப் போவதில்லை. எமது உரிமைக்காகவும் வெற்றிக்காகவும் தொடர்ந்து போராடுவோம் என இப்பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Screenshot 2026-05-14 115508

அதிமுகவில் உச்சகட்ட மோதல்! ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு; ரத்தத்தின் ரத்தங்கள் அதிர்ச்சி!

May 14, 2026

சென்னை: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரத்தில் அதிமுக இரண்டாக உடைந்துள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள

p-sanmugam

“100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஜூன் 30-ல் சமாதி!” – பாஜக அரசின் புதிய திட்டத்தை சாடிய பெ. சண்முகம்!

May 14, 2026

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) வரும் ஜூன் 30-ஆம்

3

“தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி

May 14, 2026

சென்னை: “தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” எனத் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக அரசு

collage-down-1714447028

சிறார்கள் கையில் மதுவா? – 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை! டாஸ்மாக் எச்சரிக்கை!

May 14, 2026

சென்னை: தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல் டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

1778468918-6452

“லட்சக்கணக்கான மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது!” – நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி முதல்வர் விஜய் அதிரடி அறிக்கை!

May 14, 2026

சென்னை: நாடு முழுவதும் 2026-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு

1500x900_834373-kb-munusami

“பதவி எனும் துண்டுக்காக கழகம் எனும் வேட்டியைக் கழற்றாதீர்கள்!” – சி.வி.சண்முகம் தரப்பிற்கு கே.பி. முனுசாமி கடும் கண்டனம்!

May 14, 2026

சென்னை: அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் மற்றும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சி.வி. சண்முகம் தரப்பினரின் செயல்பாடுகள் குறித்து,

free

“சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்; அரசு வேலை வழங்கு!” – சுடப்பட்ட மணிகண்டன் மனைவி தூத்துக்குடியில் ஆவேசப் பேட்டி!

May 14, 2026

தூத்துக்குடி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரால் சுடப்பட்ட மணிகண்டனுக்கு நீதி கேட்டு, அவரது மனைவி பொன்மணி தூத்துக்குடியில்

Screenshot 2026-05-13 143435

“திமுக-வின் வாக்குகளைக் காட்டித்தான் நீங்கள் முதல்வர்!” – விஜய் அறிக்கைக்கு உதயநிதி ஸ்டாலின் அதிரடி பதிலடி!

May 14, 2026

சென்னை: “திராவிட மாடல் ஆட்சியின் நலத்திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எங்களது வெற்றி” என முதலமைச்சர்

1200-675-26672389-thumbnail-16x9-shan

“எங்களை நீக்க எடப்பாடிக்கு அதிகாரம் இல்லை!” – அதிமுக பிளவு குறித்து சி.வி.சண்முகம் அனல் பறக்கும் பேட்டி!

May 14, 2026

சென்னை: தவெக-வுக்கு ஆதரவு அளித்ததற்காகத் தங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையாகக் கட்சிப் பதவிகளைப் பறித்த எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர்

keerthana-4-2026-05-14-06-26-38

“நானும் ஒரு மாற்றுத்திறனாளியின் மகள்தான்!” – சர்ச்சைப் பேச்சுக்கு தவெக அமைச்சர் கீர்த்தனா உருக்கமான மன்னிப்பு!

May 14, 2026

சென்னை: மாற்றுத்திறனாளிகள் குறித்துத் தான் பேசிய சர்ச்சைக்குரிய கருத்திற்கு, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ்

amulmilkhike-1778683475

அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு! இன்று முதல் புதிய விலை அமல்; பொதுமக்கள் அதிர்ச்சி!

May 14, 2026

சென்னை: நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அமுல் பால் பாக்கெட்டுகளின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி குஜராத் கூட்டுறவு பால்

arrest-1

நீதிமன்ற வளாகப் படுகொலை: ஆயுதங்களை வழங்கிய சந்தேகநபர் கம்பஹாவில் கைது

May 14, 2026

பாதாள உலகக் குழுத் தலைவர் சஞ்சீவ குமார் சமரரத்ன (Ganemulla Sanjeewa) படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குத் தேவையான ஆயுதங்களை வழங்கியதாகக்