நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு தரப்பினடமிருந்து மேன்முறையீடு மற்றும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதால் நிவாரண கொடுப்பனவு மற்றும் இழப்பீட்டுத் தொகையை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) நடைபெற்ற அமர்வில் பிரதமருடனான கேள்வி வேளையின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

தித்வா புயல்தாக்கத்தால் ஏற்பட்ட பேரிடர்களால் நாடளாவிய ரீதியில் 24 இலட்சத்து 87114 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 2026.01.15 ஆம் திகதியளவில் 4 இலட்சத்து 26963 பேருக்கு 25 ஆயிரம் ரூபா முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 1 இலட்சத்து 44377 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக 50 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

அனர்த்தத்தால் 6088 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ள நிலையில், 210 வீட்டு பயனாளர்களுக்கு ஆரம்பக்கட்ட கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. 1 இலட்சத்து 18889 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ள நிலையில் 2992 வீட்டு பயனாளர்களுக்கு முதற்கட்ட கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

அனர்த்தங்களால் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு 98.07 சதவீதமானோருக்கும், 50 ஆயிரம் ரூபா 86 சதவீதமானோருக்கும் வழங்கப்பட்டுள்ளது. மிகுதியாகவுள்ள தரப்பினருக்குரிய நிதி மாவட்ட செயலகம் ஊடாக பிரதேச செயலக பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு தரப்பினடமிருந்து மேன்முறையீடு மற்றும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதால் நிவாரண கொடுப்பனவு மற்றும் இழப்பீட்டுத் தொகையை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது.

அனர்த்தங்களால் 2 இலட்சத்து 07312 பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கமைய ஒரு மாணவருக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஊடாக 15 ஆயிரம் ரூபாவும், ஜனாதிபதி நிதியம் ஊடாக 10 ஆயிரம் ரூபாவும் என்ற அடிப்படையில் 25 ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது என்றார்.

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

new

2026 ஐசிசி ஆண்கள் டி20; நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

March 5, 2026

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால்

Sarath Savendra

அனுர அரசினால் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவி ரத்து?

March 5, 2026

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் ரத்து

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது