நாட்டின் ஆரம்பப் பாடசாலைகளுக்கு பொதுவான மாதிரித் திட்டம்

மாணவர் பாதுகாப்பு, நலன்புரி மற்றும் செயல்வழிக் கல்வி ஆகிய முக்கிய துறைகளை உள்ளடக்கிய பொதுவான மாதிரி ஒன்றின் அடிப்படையில், நாட்டின் ஆரம்பப் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனைச் சபைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்வியைப் பெறுவதற்கான சம வாய்ப்பை உறுதிப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இக்கூட்டத்தின் போது, ஆரம்பப் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், ஒரு ஆரம்பப் பாடசாலையில் இருக்க வேண்டிய அடிப்படைத் தேவைகள் மற்றும் அளவுகோல்கள் அடங்கிய அறிக்கையொன்றும் அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்பட்டது.

வகுப்பறைகளில் இருக்க வேண்டிய நவீன உபகரணங்கள், மாணவர்களைக் கவரும் வகையில் பாடசாலை வளாகத்தை வடிவமைத்தல், வெளிக்களச் செயற்பாடுகளுக்கான விசேட வகுப்பறைகள் மற்றும் விளையாட்டு மைதானங்களை அமைத்தல் போன்ற விடயங்கள் இந்த அளவுகோல்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் காலங்களில் இவற்றை மேலும் மேம்படுத்தி, அனைத்து ஆரம்பப் பாடசாலைகளுக்கும் பயன்படுத்தக்கூடிய ஒரு பொதுவான மாதிரியாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

அத்துடன், இந்த அளவுகோல்களின் அடிப்படையில் ஒவ்வொரு மாகாணத்திலும் தெரிவு செய்யப்பட்ட சில பாடசாலைகளை மாதிரிப் பாடசாலைகளாக அபிவிருத்தி செய்வதற்கு அரசு திட்டமிட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நடப்பு 2026 ஆம் ஆண்டின் வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளின் பௌதிக வளங்களை மேம்படுத்தும் திட்டங்களுக்காகப் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், அத்திட்டங்களை விரைவாகப் பூர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்குப் பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

இத்தகைய அபிவிருத்தித் திட்டங்களை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்குக் கண்காணிப்பு நடவடிக்கைகளில், அந்தந்த மாகாணங்களுக்குப் பொறுப்பான கல்வி அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதனுடன், தொழில்சார் கல்வி நிலையங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வீதத்தை அதிகரித்தல் மற்றும் அதற்குத் தகுந்தாற்போல் அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் குறித்தும் இக்கூட்டத்தின் போது பிரதமரால் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இந்த நாடாளுமன்ற ஆலோசனைச் சபைக் கூட்டத்தில் கல்வி மற்றும் உயர்கல்விப் பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, தொழில்சார் கல்விப் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் மாகாணக் கல்வி அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

anu

‘சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்’ ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பி.க்கள் கடிதம்!

June 13, 2026

‘சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்’என்ற தலைப்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

Pain

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

June 13, 2026

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அடுத்த அரியமான் கடற்கரை பகுதியில் இருந்து நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக

death

புலோலியில் கிணற்றில் இருந்து சிறுவனின் சடலம் மீட்பு

June 13, 2026

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில் காணாமல் போயிருந்த சிறுவன் ஒருவனின் சடலம், வீட்டின் அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து

6

“சாத்தான்குளம் இரட்டைக் கொலை குற்றவாளிகளுக்குச் சிறையில் முதல் வகுப்பு வசதி கிடையாது!” – மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 முன்னாள் போலீசாரின் மனுவை அசுர வேகத்தில் தள்ளுபடி செய்தது மதுரை நீதிமன்றம்!

June 13, 2026

மதுரை: “உலகையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் கொடூரக் கொலை வழக்கில் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில்

5

“நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை முதல்வர் விஜய் விரைவில் வெளியிடுவார்!” – பட்ஜெட் மாஸாக இருக்கும் எனத் தூத்துக்குடியில் நிதியமைச்சர் மரிய வில்சன் அசுர வேக அறிவிப்பு!

June 13, 2026

தூத்துக்குடி: “தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த விரிவான வெள்ளை அறிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் விஜய் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்; தவெக அரசின்

4

“பாஜக-வை விட்டு விலகி தவெக-வில் இணைந்தார் விஜயதாரணி!” – பச்சைமால், பாலகங்கா உள்ளிட்ட அதிமுக, அமமுக முக்கியப் புள்ளிகளுடன் அசுர வேக அதிரடி!

June 13, 2026

சென்னை: “பாரதிய ஜனதா கட்சியின் மீது ஏற்பட்ட கடும் அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி, விளவங்கோடு தொகுதியின் முன்னாள்

suresh11

சுரேஷ் சலே விவகாரம்: சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுமாறு அதிபர் அநுரவிடம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை!

June 13, 2026

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) பணிப்பாளர் நாயகம், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே (Suresh Saleh) தற்போது

namal raja

பணம் மட்டுமல்ல, குற்றச்சாட்டுகளும் தவறான கணக்குகளுக்கே செல்கின்றன” – நாமல் ராஜபக்ஷ சாடல்!

June 13, 2026

கொழும்பு: தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பொதுப்பணம் மட்டுமன்றி, தோல்விகளுக்கான குற்றச்சாட்டுகளும் பொறுப்புகளும் கூட தவறான பக்கமே திசைதிருப்பப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன

3

“திமுக ஒரு நச்சுப்பாம்பு; தவெக-வுடன் கூட்டணி அமைக்கும் வரை தூரத்தில் இருந்து ரசிப்போம்!” – கூட்டணிக் கட்சியான மதிமுக-வின் அவைத்தலைவர் அர்ஜுன்ராஜ் அசுர வேக அதிரடி!

June 13, 2026

சென்னை: “பாம்புக்குப் பால் வார்த்தாலும் நஞ்சைத் தான் கக்கும், அதேபோலத் திமுக ஒரு கொடிய நச்சுப்பாம்பு; திமுகவினர் தில்லுமுல்லுக்கு முழுச்

2

“சினிமா பாணியில் சிறப்புப் படை; தனிமனித ஒழுக்கத்தை முதலில் உங்கள் கட்சியினருக்குச் சொல்லுங்கள்!” – ஆலந்தூர் தவெக பாலியல் விவகாரத்தில் முதல்வர் விஜயை அசுர வேகத்தில் வறுத்தெடுத்த கனிமொழி எம்.பி!

June 13, 2026

சென்னை: “சினிமா பாணியில் பெயரிட்ட சிறப்புப் படையை அண்மையில் தொடங்கி வைத்து, ‘தனிமனித ஒழுக்கம்’ குறித்துப் பொதுமக்களுக்கு மேடையில் அறிவுரை

1

“சென்னையின் மின்திறன் 3,500 மெகாவாட், ஆனால் பயன்பாடு 5,000 மெகாவாட்! திமுக ஆட்சியில் மின்கட்டமைப்பு சீரழிக்கப்பட்டது!” – வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் அசுர வேக குற்றச்சாட்டு!

June 13, 2026

கோயம்புத்தூர்: “தமிழ்நாட்டில் தற்போதைய மின்சாரப் பயன்பாட்டிற்கு ஏற்ப மின்கட்டமைப்பு வசதிகளைக் கடந்த கால திமுக ஆட்சி எவ்விதத்திலும் உருவாக்கவில்லை; அதிமுக

en

உலக கிண்ண மகளிர்; இலங்கையை வென்றது இங்கிலாந்து

June 13, 2026

உலக கிண்ண மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றிப் பெற்றுள்ளது.