திறைசேரியின் உதவிப் பணிப்பாளர் ரங்கவின் உளவியல் மரணப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்

திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மூன்றாம் தரப்பினருக்குக் கைமாறிய சம்பவம் தொடர்பாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்த ராஜபக்சவின் மரணம் குறித்து உளவியல் ரீதியான மரணப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என ‘தினன தகுன’ அமைப்பின் உறுப்பினர் சட்டத்தரணி ஷிரால் லக்திலக கோரியுள்ளார்.

இந்த நிதி மோசடி குறித்து நிதி அமைச்சின் செயலாளர் 4 மாதங்களாகத் தகவல்களை மறைத்திருப்பது கடுமையான சந்தேகத்தைத் தோற்றுவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இது குறித்து ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோரிடம் உளவியல் ரீதியான மரணப் பரிசோதனையை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுப்பதாக ஷிரால் லக்திலக இதன்போது தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சின் அதிகாரியின் மரணம் ஒரு தற்கொலை என சட்ட வைத்திய அதிகாரிகள் குழு நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கையில் தற்கொலைகள் மற்றும் மரணங்கள் தொடர்பான வைத்திய அறிக்கைகள் குறித்த ஒரு மோசமான வரலாறு இருப்பதை நாம் அறிவோம்.

தாஜுதீனின் மரணம் தொடர்பிலும் இவ்வாறான உத்தியோகபூர்வ அறிக்கைகள் வந்தன, ஆனால் அவை சரியானவை அல்ல என்பது பின்னரே தெரியவந்தது.

எனவே, இந்த மரணப் பரிசோதனை அறிக்கை நல்லது, ஆனால் மருத்துவ அறிவியலில் இதற்கு அடுத்த கட்டமாக உளவியல் ரீதியான மரணப் பரிசோதனை ஒன்று உள்ளது. அதனை முன்னெடுக்குமாறே நாம் ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சரிடம் கோருகிறோம்.

உளவியல் ரீதியான மரணப் பரிசோதனை என்பது மூன்று விடயங்களை ஆராயும். தற்கொலைக்கான காரணம் என்ன? அவரது மனநிலை எவ்வாறு இருந்தது? அந்த மரணம் எவ்வாறு சம்பவித்தது? மரணத்திற்கு முன்னர் நடந்த சம்பவங்களை ஆராய வேண்டும்.

ஹர்ஷ டி சில்வா கூறுவது போல் இது ஒரு திருட்டு. நிதிச் செயலாளர் 4 மாதங்களாக இதனை மறைத்ததில் எமக்கு சந்தேகம் உள்ளது.

உயிரிழந்த அதிகாரியின் செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு செயல்பாடு இதன் பின்னணியில் இருந்திருக்கலாம்.

இது எனது தவறு அல்ல என்ற அடிப்படையிலேயே இந்தத் தற்கொலை நடந்திருக்க வேண்டும் என நாம் கருதுகிறோம்.

ஒன்பது தடவைகள் இது தவறுதலாக நடக்கவில்லை என்றால், அதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய வேண்டும். அவருக்கு அந்தச் சூழலை உருவாக்கியது யார்? என்பது தொடர்பில் வௌிப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

chemmany15

செம்மணியில் இன்றும் மூன்று என்பு கூட்டு தொகுதி முற்றாக அகழ்ந்து எடுப்பு

May 2, 2026

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் ஆறாம் நாளான இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு மனித என்பு

bimal

வடக்கில் பல அரசியல்வாதிகள் கைதாவார்கள் — யாழில் பிமல் ஆருடம்

May 2, 2026

வடக்கில் உள்ள ஊழல்வாதிகள், மோசடியாளர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் மாதங்களில் அவர்கள்

Velankanni-Vijay copy

வேளாங்கண்ணி தேவாலயத்தில் தவெக தொண்டர்கள் முழக்கம்: திருப்பலி 30 நிமிடம் நிறுத்தம் – பரபரப்பு வீடியோ!

May 2, 2026

நாகப்பட்டினம்: உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் எழுப்பிய முழக்கத்தால் திருப்பலிப்

1200-675-26460642-thumbnail-16x9-vijay

‘ஜனநாயகன்’ படம் லீக்: கைதான 9 பேரின் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

May 2, 2026

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி, தணிக்கை சிக்கல்களால் இன்னும் திரையரங்கிற்கு வராத ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளத்தில் சட்டவிரோதமாக கசிந்த

eps234-1578990766

வாக்கு எண்ணிக்கைக்கு முன்தினம் சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் திடீர் ஆலோசனை!

May 2, 2026

சேலம்: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

AzT1L4XXkYJgXDHPWx5M

“ஜாதி, மத பேதமின்றி கோவில் திருவிழாக்களை நடத்த வேண்டும்” – மதுரை ஐகோர்ட்டு கிளை அதிரடி உத்தரவு!

May 2, 2026

மதுரை: திருச்சி பீமாநகர் செடல் மாரியம்மன் கோவில் வைகாசி தேர்த்திருவிழாவிற்கு அனுமதி கோரிய வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை,

vikatan_2024-09-20_nr99f940_66ed59fb952d1 (1)

“வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றி 1 கி.மீ. தூரத்திற்கு யாரையும் அனுமதிக்கக் கூடாது” – தேர்தல் ஆணையத்தில் தவெக கோரிக்கை!

May 2, 2026

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா

26-69f0c3d1e1564

“மத்தியப் பிரதேச படகு விபத்தில் 5 தமிழர்கள் பலி; சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பை உறுதி செய்க!” – சீமான் வலியுறுத்தல்

May 2, 2026

சென்னை: மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பார்கி அணை நீர்த்தேக்கத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், தமிழகத்தைச் சேர்ந்த

dailythanthi_2026-04-02_pmy7icai_veerapandiyan copy

“வணிக சிலிண்டர் விலை ரூ.993 உயர்வு: சிறு, குறு வணிகர்களை நசுக்கும் செயல்” – இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டனம்!

May 2, 2026

சென்னை: வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை ஒரே அடியாக 993 ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பதற்குக் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு

108

ஓசூர் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் சல்யூட் அடிக்கும் நேர்மை; விபத்தில் சிக்கியவரின் ₹1.30 லட்சம் மீட்பு!

May 2, 2026

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய முதியவரின் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை நேர்மையுடன்

alagar

மண்டூக முனிவருக்குச் சாப விமோசனம் அளித்தார் கள்ளழகர்: மதுரை வைகையில் கோலாகலம்!

May 2, 2026

மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மண்டூக முனிவருக்குச் சாப விமோசனம் அளிக்கும் வைபவம் இன்று

Tamil_News_lrg_4213744

“தவெக 150 முதல் 200 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும்” – அதிமுக கூட்டணி குறித்து செங்கோட்டையன் ரியாக்‌ஷன்!

May 2, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வரும் 4-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை