சென்னை:
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான கட்சிகள், தவெக இந்தத் தேர்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறி வரும் நிலையில், வைகோவின் பேச்சு அதற்கு மாறாக அமைந்துள்ளது.
ஏஎன்ஐ (ANI) செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “தமிழகத்தில் தவெக ஒரு முக்கியமான சக்தியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக மாணவர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவு அக்கட்சிக்கு அதிகமாக உள்ளது. எனவே, தேர்தல் முடிவுகளில் விஜய்யின் தவெக பெரிய ஆச்சரியங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளார். அதேசமயம், தியாகத்தால் உருவான திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது என்றும், மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது திமுக மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்பதே தனது தனிப்பட்ட கணிப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆக்ஸிஸ் – மை இந்தியா போன்ற சில கருத்துக்கணிப்புகள் தவெகவிற்குப் பெரும்பான்மை கிடைக்கும் எனத் தெரிவித்துள்ள சூழலில், திமுக கூட்டணியில் இருந்துகொண்டே தவெகவை ஒரு முக்கிய சக்தியாக வைகோ அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
#Vaiko #MDMK #TVK #ThalapathyVijay #TNElection2026 #ExitPolls #ElectionResults #May4 #DMKAlliance #StalinAgain #TamilNaduPolitics #BreakingNews #VijayForCM #FirstTimeVoters #PoliticalAnalysis #May2 #CountingDay #VoterVerdict #DravidianIdeology #TamilNaduPolls_