ஜப்பானின் பேருந்துகள் கையளிப்பு

கிராம மனிதப் பாதுகாப்புத் திட்டத்தின் (GGP) கீழ் சுற்றுச்சூழலுக்கு உகந்த எட்டு (8) பெரிய தாங்கு தரைப் பேருந்துகளைக் (low-floor buses) கையளிக்கும் நிகழ்வு செப்டம்பர் 02 ஆம் திகதி நடைபெற்றது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் விமல் ரத்நாயக்கவின் பங்குபற்றுதலுடன் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அக்கியோ இசொமதா (H.E. Akio Isomata) இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

ஜப்பான் அரசாங்கத்தின் கிராம மனிதப் பாதுகாப்புத் திட்டத்தின் (GGP) கீழ் மொத்தம் 362,476 அமெரிக்க டொலர் (சுமார் 112 மில்லியன் ரூபாய்) நிதியுதவியுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் வேண்டுகோளுக்கு இணங்க, கொழும்பில் பொதுப் பேருந்துகளுக்கான செயற்பாட்டு முறைமையை உருவாக்குவதற்காக ஜப்பான் இந்தப் பெரிய தாங்கு தரைப் பேருந்துகளை வழங்கியுள்ளது. இது போக்குவரத்துச் சவால்களை எதிர்கொள்ளும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட குடியிருப்பாளர்களின் சுயாதீனமான நடமாடும் வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்குப் பங்களிப்புச் செய்யும். இப்பேருந்துகள் யூகொஹமா (Yokohama) நகரசபையால் நன்கொடையாக வழங்கப்பட்டவை என்பதுடன், யூரோ 4 (Euro 4) உமிழ்வு தரநிலைகளுக்கு இணங்க முழுமையாகப் புதுப்பிக்கப்பட்ட பாவிக்கப்பட்ட வாகனங்களாகும். இவற்றுள்ள சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்கள் இலங்கையின் “சுத்தமான இலங்கை” (Clean Sri Lanka) திட்டத்திற்கும் பங்களிப்புச் செய்யும்.

தூதுவர் இசொமதா தனது உரையில் குறிப்பிடுகையில், “இந்த முறை வழங்கப்பட்ட பேருந்துகள் எண்ணிக்கையில் குறைவானவை என்றாலும், ஆயுள் காலம், அணுக்கம், பாதுகாப்பு, சௌகரியம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைபேறு ஆகியன எவ்வாறு பொதுப் போக்குவரத்து அமைப்பில் ஒன்றிணைக்கப்படலாம் என்பதை நிரூபிப்பதன் மூலம், எதிர்காலத்தில் இலங்கை முழுவதும் குறைந்த தரைப் பேருந்துகளை விரிவுபடுத்துவதற்கும் இயக்குவதற்கும் இத்திட்டம் ஒரு முன்மாதிரியாக அமையும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்” என்றார். மேலும் அவர், “உள்ளடக்கிய, நம்பகமான மற்றும் நிலையான நகர்ப்புறப் போக்குவரத்துக்கான இலங்கையின் முயற்சிகளை ஆதரிப்பதில் ஜப்பான் தொடர்ந்தும் உறுதியுடன் உள்ளது. இப்பேருந்துகள் பயணிகளை மட்டும் ஏற்றிச் செல்லாமல், மிகவும் அணுகக்கூடிய மற்றும் தூய்மையான எதிர்காலத்திற்கான எமது பகிரப்பட்ட அபிலாசைகளையும் ஏற்றிச் செல்லட்டும்” எனத் தெரிவித்தார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் விமல் ரத்நாயக்க தெரிவிக்கையில், “இன்று இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நிலையான நட்புறவில் மற்றொரு மறக்க முடியாத அத்தியாயம் பதிவாகியுள்ளது. எமது நகரங்கள் வளர்ச்சியடையும் போது, நகர்ப்புறப் போக்குவரத்துச் சவாலும் அவசரமான ஒன்றாக மாறிவருகிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பயணிகள் போக்குவரத்து வலையமப்பை நம்பியுள்ளனர். திறமையான, சௌகரியமான மற்றும் அனைவருக்கும் அணுகக்கூடிய போக்குவரத்து அமைப்பை வழங்குவது இனி ஆடம்பரமாக இருக்க முடியாது; அதுவொரு அடிப்படைப் பொதுத் தேவையாகும்” என்றார். மேலும் அவர், “ஜப்பான் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களின் முயற்சியும் அர்ப்பணிப்புடன் கூடிய பின்தொடர்தலுமே இந்தப் பேருந்துகளைப் பெற்றுக்கொள்ள எங்களுக்கு உதவியது” என்றும் குறிப்பிட்டார்.

1200-675-27643102-thumbnail-16x9-anbil-mahesh

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை! – ரூ.100 கோடி மோசடி புகாரில் நடவடிக்கை

September 16, 2026

திருச்சி: முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தற்போதைய திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்குச் சொந்தமான இடங்களில்

1200-675-27310474-thumbnail-16x9-ntr

தமிழ்நாட்டில் மின்வெட்டு ஏன்? காரணங்களை அடுக்கிய அமைச்சர் நிர்மல் குமார்!

September 16, 2026

சென்னை: தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுப் பிரச்சனை குறித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனைக்

1200-675-27639571-428-27639571-1789480142339

மதுராந்தகம் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் வேட்புமனு தாக்கல்!

September 16, 2026

மதுராந்தகம்: மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் களமிறங்கும் வேட்பாளர் ஜானகிராமன், மதுராந்தகம் வருவாய்

shira1

24ம் திகதி கொழும்பில் விசாரணை-சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார் சிராந்தி-

September 16, 2026

முன்னாள் முதற்பெண்மணி சிராந்தி ராஜபக்ச மருத்துவசிகிச்சைக்காக புதன்கிழமை காலை சிங்கப்பூருக்கு பயணமானார். செவ்வாய்கிழமை உடல்நல பாதிப்பு காரணமாக கொழும்பு தனியார்

saudi-arabia-tourism-basics-intro

சவுதிஅரேபியாவின் மேற்கு பகுதியில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

September 16, 2026

சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் உள்ள இலங்கைப் பிரஜைகள், அப்பகுதியில் நிலவிவரும் பாதுகாப்புச் சூழலைக் கருத்திற் கொண்டு விழிப்புடன் இருக்குமாறும்,

easter

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்-முன்கூட்டியே தகவல் தெரிந்திருந்தும் இராணுவபுலனாய்வு பிரிவு மறைத்தது – மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்

September 16, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான தகவல்கள் இலங்கை இராணுவம் மற்றும் அரச உளவுத்துறையின் சில பிரிவுகளுக்கு முன்னரே தெரிந்திருந்தபோதிலும், அவை

mansari

மண்சரிவு எச்சரிக்கை

September 16, 2026

கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு விழிப்புணர்வு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,

ff

செயற்கை நுண்ணறிவின் AI ஆபத்தானது: எலான் மஸ்க் கடும் எச்சரிக்கை

September 16, 2026

செயற்கை நுண்ணறிவின் (AI) விரைவான வளர்ச்சி குறித்து எலான் மஸ்க் இதுவரை விடுத்துள்ள மிக வலுவான எச்சரிகைகளில் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

mas

சவூதி எரிபொருள் குழாய் முடக்கம்: மசகு எண்ணெய் விலை பீப்பாய் 108 டொலரைத் தாண்டியது

September 16, 2026

சவூதி அரேபியாவின் முக்கிய கிழக்கத்திய – மேற்கத்திய மசகு எண்ணெய் விநியோகக் குழாய்த் தொகுதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை அடுத்து,

Harini-amarasooriya

க.பொ.த. சாதாரண தரப் பாடங்களின் எண்ணிக்கை 7 ஆகக் குறைக்க திட்டம்?

September 16, 2026

எதிர்வரும் 2031ம் ஆண்டு தொடக்கம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை 7 ஆகக் குறைக்க கல்வி மறுசீரமைப்பு

acc

விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் பலி

September 16, 2026

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் இரவு இடம்பெற்ற மிக மோசமான விபத்தொன்றில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

parliment

2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம்

September 16, 2026

2027 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு