சோமரத்ன ராஜபக்ஷ செம்மணி படுகொலை சாட்சியாளர் மாத்திரமேயன்றி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலையுடன் தொடர்பில்லாதவர் – சோமரத்னவின் மனைவி

டசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலையுடன் எனது கணவரான சோமரத்ன ராஜபக்ஷவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பது பற்றி இதற்கு முன்னர் அனுப்பிவைத்த கடிதம் மூலம் உங்களுக்கு அறியத்தந்து சுமார் ஒரு வருடம் கடந்திருக்கிறது. எனது கணவர் செம்மணி படுகொலையை வெளிப்படுத்திய ஒரு சாட்சியாளர் மாத்திரமேயாவார். எனவே இதுகுறித்து உங்களது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எனக்கு அறியத்தாருங்கள் என வலியுறுத்தி மரணதண்டனைக் கைதியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மீண்டும் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை குறித்தும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்தும் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளிடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவியான எஸ்.சி.விஜேவிக்ரம கடந்த ஆண்டு ஜுலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.

அதனையடுத்து இதுபற்றிய மேலதிக விபரங்களைக் கேட்டறியும் நோக்கில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி சோமரத்ன ராஜபக்ஷவை வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள், மீண்டும் இரண்டாம் கட்டமாக கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி சோமரத்ன ராஜபக்ஷவை சந்தித்தனர்.

அச்சந்திப்பினது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கான கடிதமொன்றை காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகளிடம் கையளித்த சோமரத்ன ராஜபக்ஷ, செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் தொடர்பில் தான் ஏற்கனவே அனுப்பிவைத்திருந்த கடிதத்தின் ஊடாகவும், அதன் பின்னரும் பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அவை குறித்து தற்போதுவரை எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும்,

இவ்விடயம் தொடர்பில் சுயாதீன குழுவொன்றை நியமித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அதில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி எஸ்.சி.விஜேவிக்ரமவினால் ஜுன் 4 ஆம் திகதியிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மீண்டும் மற்றுமொரு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

கிருஷாந்தி குமாரசுவாமி மற்றும் அவரது குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் எனது கணவர் உட்பட 5 இராணுவ வீரர்களுக்கு 1998 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டது.

இந்தக் குற்றத்துடன் எனது கணவரான சோமரத்ன ராஜபக்ஷவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பது பற்றி இதற்கு முன்னர் அனுப்பிவைத்த விரிவான கடிதத்தின் மூலம் உங்களுக்கு அறியத்தந்து சுமார் ஒரு வருடம் கடந்துள்ளது.

இதுகுறித்து உங்களது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எனக்கு அறியத்தருமாறும், எனது கணவர் செம்மணி படுகொலையை வெளிப்படுத்திய ஒரு சாட்சியாளர் மாத்திரமே என்பதுடன், அவர் 1996 இல் கைதுசெய்யப்பட்டு அன்று முதல் இன்று வரை தண்டனை அனுபவித்து வருவதனால், இதுகுறித்து ஆராய்ந்து நீதியை நிலைநாட்டுமாறும் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

nalinda-jayatissa_2025.01

முக்கிய பிரமுகர்களுக்கு விசேட பாதுகாப்பு

July 14, 2026

11 முக்கிய பிரமுகர்களுக்கு விசேட பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

jud

பிரசன்ன ரணதுங்கவின் வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்

July 14, 2026

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்குவதற்கு கொழும்பு

tru

கப்பல்களுக்கு விதிக்கப்படவிருந்த 20% கட்டண திட்டத்தைக் கைவிட்டார் டிரம்ப்!

July 14, 2026

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு விதிக்கப்படவிருந்த 20 சதவீதக் கட்டணத் திட்டத்தை அமெரிக்கா கைவிடுவதாக

exa

முக்கிய அறிவித்தல்!

July 14, 2026

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகளுக்கான மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களைக்

neddd

சிறை மோதலுக்குப் பின்னால் சதித்திட்டமா?

July 14, 2026

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டங்கள் அடங்கிய செயல்பாடுகள் காணப்பட்டதா என்பது குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு

e3961bd6498a57a0ecd957375dafe91e

79 வயதுடைய காணாமல் போன முதியவரைத் தேடிவரும் கியூபெக் மாகாண பொலிஸார்

July 14, 2026

செவ்வாய்க்கிழமை காணாமல் போன 79 வயதுடைய முதியவர் ஒருவரைக் கண்டறிய கியூபெக் மாகாண பொலிஸார் அவசரக் கால ‘சில்வர் அலர்ட்’

3efd6adafaa3b0343fd40456085ce23a

வடக்கு எட்மன்டன் அடுக்குமாடி குடியிருப்புத் தீ விபத்தில் ஒருவர் பலி, பலர் காயம்

July 14, 2026

வடக்கு எட்மன்டன் (Edmonton) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை காலையிலும்

73VXPJ53XZH37J567O52V3QDPU

எஸ்கசோனியில் ஐந்து பேர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு: நோவா ஸ்கோஷியா ஆர்.சி.எம்.பி

July 14, 2026

இந்த மாத தொடக்கத்தில் நோவா ஸ்கோஷியாவின் (N.S.) எஸ்கசோனி (Eskasoni) பகுதியில் இடம்பெற்ற கடுமையான தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஐந்து

745487959_1006299015619928_5107752489134674917_n

விட்பி நீர்க்கரை நடைபாதை அருகே நடந்த வன்முறை -பாலியல் தாக்குதலைத் தொடர்ந்து சந்தேகநபரை பொலிஸார் தேடி வருகின்றனர்

July 14, 2026

விட்பி (Whitby) பகுதியில் உள்ள ‘இரோகுவாஸ் பீச் பார்க்’ (Iroquois Beach Park) பூங்காவிற்கு அருகில், திங்கட்கிழமை இரவு பெண்

748593131_1051673127217505_1132822808804161962_n

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள “அரவணன்” நோய்த் தடுப்பு சிகிச்சை நிலையம் இன்று (14.07.2026) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

July 14, 2026

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள “அரவணன்” நோய்த் தடுப்பு சிகிச்சை நிலையம் இன்று (14.07.2026) உத்தியோகபூர்வமாக திறந்து

arrest1

புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவர்களை தாக்கிய சக மாணவர்கள் மூவர் விளக்கமறியலில்!

July 14, 2026

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியில் 13.07.2026 அன்று பாடசாலை நேரம் வகுப்பு ஒன்றுக்குள் புகுந்து சக மாணவரை இரும்புக் கம்பியால்

745885172_1779187646407243_2821693291413648739_n

வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – தொல்லியல் திணைக்களத்துடன் நடைபெற்ற சந்திப்பில் சாணக்கியன் வலியுறுத்தல்

July 14, 2026

வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – தொல்லியல் திணைக்களத்துடன் நடைபெற்ற சந்திப்பில் சாணக்கியன் வலியுறுத்தல் வடக்கு