சென்னை:
சென்னை மெட்ரோ ரயில்களில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பழைய பயண அட்டைகள் (Travel Cards) முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டு, ‘சிங்கார சென்னை அட்டை’ (தேசிய பொதுப் போக்குவரத்து அட்டை – NCMC) முறை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, இந்தியா முழுவதும் உள்ள பொதுப் போக்குவரத்து சேவைகளில் ஒரே அட்டையைப் பயன்படுத்திப் பயணிக்கும் வசதியை உறுதி செய்ய இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி பழைய பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்ய முடியாது என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பயணிகள் தங்களது பழைய அட்டையில் மீதமுள்ள தொகையை மெட்ரோ மொபைல் செயலி மூலம் கியூ.ஆர். சேமிக்கப்பட்ட மதிப்பு பாஸ் (SVP) ஆகவோ அல்லது புதிய சிங்கார சென்னை அட்டைக்கோ மாற்றிக்கொள்ளலாம். தற்போது மெட்ரோவில் கியூ.ஆர். டிக்கெட், வாட்ஸ்-அப் டிக்கெட் மற்றும் பேடிஎம் போன்ற டிஜிட்டல் முறைகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், இந்த புதிய அட்டை முறை பயணத்தை இன்னும் எளிமையாக்கும். வாகன நிறுத்தங்களுக்கும் இந்த அட்டையையே பயன்படுத்தலாம். ஒரு நாளைக்குச் சராசரியாக 3 லட்சம் பயணிகள் பயணிக்கும் சூழலில், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. பயணிகளுக்கு ஏற்படும் தற்காலிகச் சிரமத்திற்கு மெட்ரோ நிர்வாகம் வருத்தம் தெரிவிப்பதோடு, பாதுகாப்பான பயண அனுபவத்திற்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
#ChennaiMetro #SingaraChennaiCard #NCMC #MetroTravel #DigitalIndia #PublicTransport #ChennaiNews #TravelCardUpdate #SmartTravel #MetroRail #BreakingNews #CashlessTravel #ChennaiLife #CommutersUpdate #NewRules #May1 #MetroUpdate