சுரேஷ் சலேநிர்வாணமாக்கப்பட்டு, அத்துமீறிய உடல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதை ஒப்புக் கொண்டது சி.ஐ.டி-மனைவி மனோரி

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே, சிறைச்சாலையில் நிர்வாணமாக்கப்பட்டு அத்துமீறிய உடல் சோதனைக்கு (Deep Invasive Search) உட்படுத்தப்பட்டதை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) முதன்முறையாக உத்தியோகபூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளதாக அவரது மனைவி மனோரி சலே குற்றஞ்சாட்டியுள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நடைபெற்ற விசாரணை ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட மனோரி சலே, தனது கணவரை சிறை அறையிலிருந்து வெளியே அழைத்து வந்து, பிறர் முன்னிலையில் அவரது ஆடைகளைக் களைந்து, விலங்கிடப்பட்ட நிலையில் மலக்குடல் பரிசோதனை உள்ளிட்ட அத்துமீறிய ஆழமான உடல் சோதனைக்கு உட்படுத்தியதை சி.ஐ.டி உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

கடந்த மார்ச் 8ஆம் திகதி இச்சம்பவம் நடந்ததிலிருந்து சி.ஐ.டி இந்த உத்தியோகபூர்வக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வந்தது. எனினும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அண்மைய அமர்வில் கலந்துகொண்ட சி.ஐ.டி அதிகாரிகள், இந்த நடைமுறையை உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளனர். இதனையடுத்து, குறித்த தேடுதலுடன் தொடர்புடைய கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகள், சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் இதற்கான உத்தியோகபூர்வ சுற்றுநிருபங்கள் ஆகியவற்றைச் சமர்ப்பிக்குமாறு சி.ஐ.டிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

“சுரேஷ் சலே ஆரம்பத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, சட்டவைத்திய அதிகாரி (JMO) மூலம் பரிசோதிக்கப்பட்ட போது அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார். அவர் ஒரு விசேட ‘தண்டனை அறைக்கு’ மாற்றப்பட்ட பின்னரே, இத்தகைய கடுமையான சோதனைகளும் சித்திரவதைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன” என மனோரி சல்லே தெரிவித்தார்.

அவரது தற்போதைய தடுப்புக்காவல் நிலைமைகள் குறித்து விவரித்த அவர், தனது கணவர் எவ்வித காற்றோட்டமும் இல்லாத 6×4 அடி அளவுடைய மிகச் சிறிய அறையொன்றில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். ஒரு வகையான உளவியல் சித்திரவதையாக 24 மணி நேரமும் அந்த அறையில் மின்விளக்கு எரியவிடப்பட்டுள்ளதுடன், முதல் 40 நாட்களுக்கு அவர் வெற்று சிமெந்து தரையிலேயே தூங்கக் கட்டாயப்படுத்தப்பட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.

அவ் வளாகம் எலிகள் தொல்லை மிகுந்ததாகக் காணப்படும் அதேவேளை, அதே தளத்தில் இருந்த வேறு சில கைதிகள் எலி கடித்ததால் அவசர மருத்துவ ஊசிகளைப் பெற வேண்டியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், மலசலகூடத்திற்கு மிக அருகில் இந்தச் சிறை அறை அமைந்துள்ளதால், அங்கிருந்து வரும் கடுமையான துர்நாற்றம் காரணமாகத் தனது கணவரின் நாள்பட்ட ஒற்றைத்தலைவலி (Migraine) நோய் மேலும் தீவிரமடைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

தற்போதைய நிலையில் சுரேஷ் சலே உணவு மற்றும் திரவ உணவுகளை உட்கொள்ள மறுத்து வருவதால், ஊசி மூலம் உட்செலுத்தப்படும் (Intravenous) குறைந்தபட்ச திரவங்கள் மூலமே மருத்துவப் பணியாளர்கள் அவரது உயிரைத் தக்கவைத்துள்ளனர். அவர் மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதாகவும், பேசுவதற்குக் கடுமையான சிரமத்தை எதிர்கொள்வதுடன், நீண்ட நேரம் நிமிர்ந்து உட்கார முடியாமலும், கைகளில் நீண்ட நாட்களாக ஊசிக்குழாய் (Cannula) பொருத்தப்பட்டிருப்பதால் கைகளில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரது மனைவி விவரித்தார்.

இவ் மனித உரிமை மீறல்கள் குறித்து விவரித்து, இதில் தலையிடுமாறு கோரி ஜனாதிபதிக்கு தான் இரண்டு முறை கடிதம் எழுதியுள்ள போதிலும், இதுவரை அரசாங்கத் தரப்பிலிருந்து தமக்கு எந்தவொரு உத்தியோகபூர்வ பதிலும் அல்லது கடிதம் கிடைத்ததற்கான அங்கீகாரமோ கிடைக்கவில்லை என்றும் மனோரி சல்லே மேலும் தெரிவித்தார்.

726717948_1315682237340097_3613316531790611472_n

செம்மணி ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை

June 19, 2026

செம்மணி ஆர்ப்பாட்டத்திற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் தடை விதித்து கட்டளையிட்டுள்ளது

court-judge-hammer-gavel-696x398

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் கிருஷாந்திக்கு எதிராக பொய்ப் பிரசாரம் செய்த டாக்டர் அர்ச்சுனா! வீடியோக்களை உடனே தூக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

June 19, 2026

ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் பரப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா இராமநாதனுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் இன்று கடுமையான சாட்டையடி

728195759_27644703031792012_903873584557734534_n

நெடுந்தீவில் மக்களின் காணியைக் சிறீலங்கா கடற்படைக்கு வழங்க வேண்டுமென ஒற்றைக் காலில் நிற்கும்அமைச்சர் சந்திரசேகர்

June 19, 2026

நெடுந்தீவில் பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணி கடற்படைக்கு வழங்கப்பட்டமைக்குத் தமிழ்த்தேசியப் பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று

728195759_27644703031792012_903873584557734534_n

நெடுந்தீவில் மக்களின் காணியைக் சிறீலங்கா கடற்படைக்கு வழங்க வேண்டுமென ஒற்றைக் காலில் நிற்கும்அமைச்சர் சந்திரசேகர்

June 19, 2026

நெடுந்தீவில் பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணி கடற்படைக்கு வழங்கப்பட்டமைக்குத் தமிழ்த்தேசியப் பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று

725147385_963435430006083_3681308214476639100_n

அரச படைகளுக்கு கணி வழங்க முயற்சி – எதிர்த்து குரல் கொடுத்தவர்கள் குரலை ஒடுக்க அழைக்கப்பட்ட பொலிசார் – யாழ் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பரபரப்பு!

June 19, 2026

அரச படையினருக்கு காணி வழங்க யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தீர்மானம் நிறைவேற்ற முற்பட்டதால் ஏற்பட்ட பெரும் குழப்பத்தைத் தடுக்க

acci main

கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் வீதி விபத்துகளால் 1,297 பேர் பலி

June 19, 2026

2026ஆம் ஆண்டின் கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் மாத்திரம் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் 1,297 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம்

d

36வது தியாகிகள் தின நினைவேந்தல்!

June 19, 2026

ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னனியின் செயலாளர் பத்மநாபா மற்றும் போராளிகளின் 36வது தியாகிகள் தினம் வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை (19) காலை

chemmani

செம்மணி புதைகுழியில் 387 என்புக்கூடுகள் நேற்று வரை அடையாளம்

June 19, 2026

செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்று 18ஆம் திகதி வியாழக்கிழமை ஒரு குழந்தையின் என்புக்கூடு உட்பட 5 என்புக்கூடுகள் அகழ்ந்து

us

அமெரிக்கா – ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை திடீர் இரத்து

June 19, 2026

பிராந்தியத்தில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட ஆரம்பகட்ட உடன்படிக்கையைச் செயல்படுத்துவது தொடர்பாக, சுவிட்சர்லாந்தின்

Cont

புதிய இறக்குமதி ஒழுங்குமுறை – வௌியானது வர்த்தமானி

June 19, 2026

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக் கண்காணிப்பதற்காக, அரசாங்கம் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தி வர்த்தமானி

ca

உலக கிண்ண கால்பந்தாட்டம்; கனடா ஆதிக்கம்

June 19, 2026

உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் ‘பி’ பிரிவு போட்டியில், கட்டார் அணியை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கனடா

727322968_2861356607530672_2715840258650210241_n

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்டேன் (LANTERN – Land and Trust-Building Engagement) செயற்றிட்டம் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் வரப்பிரசாதம்-ஆளுநர் நா.வேதநாயகன்

June 19, 2026

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்டேன் (LANTERN – Land