சிறை படத்தின் 75 ஆவது நிறைவு நாள் கொண்டாட்டம்

‘புதுமுக நடிகருக்கு ரசிகர்கள் எம்மை ஏற்றுக் கொள்வார்களா!? என்ற பயம் எப்போதும் இருக்கும். ஆனால் எம்முடைய முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை ரசிகர்கள் மற்றும் ஊடகத்தினர் வழங்கினர். இதற்கு நன்றி’ என சிறை படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் எல் கே அக்ஷய் குமார் தெரிவித்திருக்கிறார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு ,எல் கே அக்ஷய் குமார், அனிஷ்மா அனில் குமார் உள்ளிட்ட பலர் முதன்மையான வேடங்களில் நடித்து வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்ற சிறை படத்தின் 75 ஆவது நிறைவு நாள் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களும் பிரபலங்களும் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி படக்குழுவினருக்கு விருது அளித்து கௌரவித்தனர்.

இந்நிகழ்வில் விக்ரம் பிரபு பேசுகையில், ” ஒரு நடிகரின் மகன்- பேரன் -என்ற அடையாளத்துடன் வளர்ந்தேன். பாடசாலை நாட்களிலேயே சில தருணங்கள் அந்த அடையாளத்தின் காரணமாக தனிமையையும் உணர்ந்திருக்கிறேன். அதன் காரணமாக பல விடயங்களில் இருந்து ஓடிக்கொண்டே இருந்தேன். பிறகு அமெரிக்காவிற்கு சென்றபோதுதான் எம்மை நான் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன்.

அதன் பிறகு சென்னைக்கு திரும்பி சினிமாவில் எமக்கான பாதையை உருவாக்க வேண்டும் என தீர்மானித்தேன். எம்முடைய முதல் படம் ‘கும்கி’. பெரிய வெற்றியை பெற்றது. அந்த வெற்றிக்குப் பிறகு அழுத்தமும் வந்தது.

சினிமா என்பது திறமை- நேரம்- அதிர்ஷ்டம் -வாய்ப்பு- ஆகியவை சேர்ந்த ஒரு துறை. அதில் பல சவால்களும் இருக்கும். இப்படத்தின் வெற்றி எனக்கு புதிய ஆரம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இனி தொடர்ந்து நல்ல கதைகளை தெரிவு செய்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் படைப்புகளில் பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதே எம்முடைய விருப்பம்” என்றார்.

Chami

விமல் வீரவன்ச போன்ற போலித் தலைவர்களை மக்கள் ஒதுக்கி விட்டார்கள்

March 15, 2026

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சிக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புவதாக ஐக்கிய மக்கள்

arr

சட்டவிரோத பொருட்களுடன் சுன்னாகத்தில் மூவர் கைது

March 15, 2026

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவன் முனியப்பர் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வைத்து மூவர் சட்டவிரோத பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம்

Ele

பழைய முறையிலாவது மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசுக்குக் கடும் அழுத்தம்

March 15, 2026

இலங்கையில் நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை இனியும் தாமதப்படுத்தாமல், தேவையேற்படின் பழைய தேர்தல் முறையிலாவது உடனடியாக நடத்துவதற்கு அரசு

4

புதிய வாகனங்களுக்கான QR பதிவு ஆரம்பம்

March 15, 2026

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமையின் கீழ், புதிய வாகனங்கள், உரிமையாளர் மாற்றம் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் இதுவரை

Harini-amarasooriya

ஊடகங்கள் வழங்கும் தகவல்கள் மீதான நம்பிக்கை பலவீனமடைகின்றமை சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது – ஹரிணி

March 15, 2026

ஊடகங்கள் வாயிலாக வழங்கப்படும் தகவல்கள் மீதான நம்பிக்கை பலவீனமடைவது ஒரு சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது என்றும், சமூக ஊடகங்களில் தகவல்களைப்

gov

2026 ஆம் ஆண்டுக்காக அரச ஊழியர்களின் வருடாந்த இடமாற்றங்கள்!

March 15, 2026

2026 ஆம் ஆண்டுக்காக அரச சேவை ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்ட அனைத்து இடமாற்றங்களும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி முதல்

ir ban

அமெரிக்க வங்கிகளுக்கு எச்சரிக்கை!

March 15, 2026

அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்தும் ஈரானின் வங்கி உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல்களை நடத்தினால், வளைகுடா பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்க வங்கி

an

அத்தியாவசிய சேவைகளை முறையாகப் பேணுவது குறித்த கலந்துரையாடல்

March 15, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உருவாகியுள்ள நிலைமையை முன்கூட்டியே கணிக்க முடியாது எனவும், வளர்ந்து வரும் புதிய சவால்களைத்

bee

பெருமளவிலான பீடி இலைகள் பொலிஸாரால் கைப்பற்றல்!

March 15, 2026

துங்கல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெப்பும்கொட கடற்கரைப் பகுதியில், சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. துங்கல்பிட்டிய

566

யாத்திரை சென்ற கார் விபத்து: சாரதி போதைப்பொருள் உட்கொண்டமை உறுதி!

March 15, 2026

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றுவிட்டு நுவரெலியா நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போது, நோர்வூட் – ரோக்வுட் பகுதியில் 15 அடி பள்ளத்தில்

dea

மோட்டார் சைக்கிள் மோதி பெண் பாதசாரி உயிரிழப்பு!

March 15, 2026

கம்பஹா – தொம்பே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொம்பே – பூகொட வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று சனிக்கிழமை

i

தகுதிகாண் போட்டி: மெக்சிகோ பயணத்தைத் தள்ளிப்போடுமாறு ஈராக் கோரிக்கை

March 15, 2026

உலகக் கிண்ணக் கால்பந்து தொடருக்கான தகுதிகாண் போட்டியில் விளையாடுவதற்காக, ஈராக் தேசிய கால்பந்து அணி தனிப்பட்ட விமானம் மூலம் மெக்சிகோவிற்குப்