சர்வதேச மலேரியா தினம்: கைக்குழந்தைகளுக்கான மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்

சர்வதேச மலேரியா தினத்தை முன்னிட்டு, கைக்குழந்தைகளுக்காக விசேடமாக உருவாக்கப்பட்ட முதலாவது மலேரியா மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு வெள்ளிக்கிழமை (24) அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட இந்த மருந்து, 05 கிலோ கிராமிற்கும் குறைவான எடையுள்ள குழந்தைகளுக்குப் பாதுகாப்பான முதல் மலேரியா எதிர்ப்பு மருந்தாகும்.

குறித்த இந்த மருந்து ஆர்டிமெதர் மற்றும் லுமெஃபான்ட்ரின்ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரைகாலமும் வளர்ந்த குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட மருந்துகளே கைக்குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த மருந்தின் கண்டுபிடிப்பு ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.

புதிய இந்த மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளமை முழுமையான மருத்துவச் சோதனைகளை நடத்தும் வசதியற்ற நாடுகளும் இந்த மருந்தை உத்தியோகபூர்வமாக உபயோகிக்க அனுமதி கிடைத்துள்ளது.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிறுவனங்கள் இந்த மருந்தைக் கொள்வனவு செய்து, மலேரியா அதிகம் பரவியுள்ள பகுதிகளுக்கு விநியோகிக்கவும் வழிவகுத்துள்ளது.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளே மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினராக உள்ளனர். நுளம்புளால் பரவும் இந்த நோய் தொடர்பான மொத்த மரணங்களில் சுமார் 70 சதவீதம் இவர்களிடமே நிகழ்கின்றன.

கர்ப்ப காலத்தில் மலேரியா பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் இது சுமார் 10,000 தாய்மார்களின் மரணம், 200,000 கருச்சிதைவுகள் மற்றும் சுமார் 550,000 குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறப்பதற்கு மலேரியா ஒரு முக்கிய காரணமாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தரவுகள சுட்டிகாட்டியுள்ளன.

2000-ஆம் ஆண்டிலிருந்து, உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளன. இதன் மூலம் சுமார் 14 மில்லியன் இறப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும், மலேரியா ஒரு பெரிய உலகளாவிய சுகாதார சவாலாகவே நீடிக்கிறது. 2024-ஆம் ஆண்டில் சுமார் 282 மில்லியன் பாதிப்புகளும், அரை மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளும் பதிவாகியுள்ளன.

உலகளவில் ஏற்படும் மலேரியா பாதிப்புகள் மற்றும் இறப்புகளில் பத்தில் ஒன்பது ஆபிக்க கண்டத்தில் துணை சஹாரா ஆபிரிக்க பிராந்தியத்தில் பதிவாகின்றன.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்,

பல நூற்றாண்டுகளாக, மலேரியா பெற்றோரிடமிருந்து குழந்தைகளையும், சமூகங்களிடமிருந்து ஆரோக்கியம், செல்வம் மற்றும் நம்பிக்கையையும் பறித்து வந்துள்ளது. ஆனால் இன்று, நிலைமை மாறி வருகிறது. புதிய தடுப்பூசிகள், நோயறிதல் சோதனைகள், அடுத்த தலைமுறை நுளம்பு வலைகள் மற்றும் மிகச் சிறிய குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டவை உள்ளிட்ட செயல்திறன் மிக்க மருந்துகள், நிலைமையை மாற்ற உதவுகின்றன என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

மலேரியா ஒட்டுண்ணிகள் கண்டறிவதற்குக் கடினமாகும் வகையில் உருமாறியுள்ளதால், இந்த ஏப்ரல் மாத ஆரம்பத்தில் மூன்று புதிய விரைவுப் பரிசோதனைகளுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

‘ஆப்பிரிக்காவின் கொம்பு’ என்றழைக்கப்படும் சோமாலி தீபகற்பப் பகுதியில் உள்ள நாடுகளில், தவறான முடிவுகள் காரணமாக 80 சதவீத பாதிப்புகள் கண்டறியப்படாமல் போவதாகவும், இது சிகிச்சையைத் தாமதப்படுத்தி உயிரிழப்பு அபாயத்தை அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2021 ஆம் ஆண்டில் முதலாவது மலேரியா தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்திருந்ததுடன், அது ஆபிரிக்காவின் பல நாடுகளில் குழந்தைகளுக்குப் பரந்த அளவில் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Screenshot 2026-05-14 115508

அதிமுகவில் உச்சகட்ட மோதல்! ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு; ரத்தத்தின் ரத்தங்கள் அதிர்ச்சி!

May 14, 2026

சென்னை: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரத்தில் அதிமுக இரண்டாக உடைந்துள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள

p-sanmugam

“100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஜூன் 30-ல் சமாதி!” – பாஜக அரசின் புதிய திட்டத்தை சாடிய பெ. சண்முகம்!

May 14, 2026

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) வரும் ஜூன் 30-ஆம்

3

“தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி

May 14, 2026

சென்னை: “தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” எனத் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக அரசு

collage-down-1714447028

சிறார்கள் கையில் மதுவா? – 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை! டாஸ்மாக் எச்சரிக்கை!

May 14, 2026

சென்னை: தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல் டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

1778468918-6452

“லட்சக்கணக்கான மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது!” – நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி முதல்வர் விஜய் அதிரடி அறிக்கை!

May 14, 2026

சென்னை: நாடு முழுவதும் 2026-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு

1500x900_834373-kb-munusami

“பதவி எனும் துண்டுக்காக கழகம் எனும் வேட்டியைக் கழற்றாதீர்கள்!” – சி.வி.சண்முகம் தரப்பிற்கு கே.பி. முனுசாமி கடும் கண்டனம்!

May 14, 2026

சென்னை: அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் மற்றும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சி.வி. சண்முகம் தரப்பினரின் செயல்பாடுகள் குறித்து,

free

“சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்; அரசு வேலை வழங்கு!” – சுடப்பட்ட மணிகண்டன் மனைவி தூத்துக்குடியில் ஆவேசப் பேட்டி!

May 14, 2026

தூத்துக்குடி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரால் சுடப்பட்ட மணிகண்டனுக்கு நீதி கேட்டு, அவரது மனைவி பொன்மணி தூத்துக்குடியில்

Screenshot 2026-05-13 143435

“திமுக-வின் வாக்குகளைக் காட்டித்தான் நீங்கள் முதல்வர்!” – விஜய் அறிக்கைக்கு உதயநிதி ஸ்டாலின் அதிரடி பதிலடி!

May 14, 2026

சென்னை: “திராவிட மாடல் ஆட்சியின் நலத்திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எங்களது வெற்றி” என முதலமைச்சர்

1200-675-26672389-thumbnail-16x9-shan

“எங்களை நீக்க எடப்பாடிக்கு அதிகாரம் இல்லை!” – அதிமுக பிளவு குறித்து சி.வி.சண்முகம் அனல் பறக்கும் பேட்டி!

May 14, 2026

சென்னை: தவெக-வுக்கு ஆதரவு அளித்ததற்காகத் தங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையாகக் கட்சிப் பதவிகளைப் பறித்த எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர்

keerthana-4-2026-05-14-06-26-38

“நானும் ஒரு மாற்றுத்திறனாளியின் மகள்தான்!” – சர்ச்சைப் பேச்சுக்கு தவெக அமைச்சர் கீர்த்தனா உருக்கமான மன்னிப்பு!

May 14, 2026

சென்னை: மாற்றுத்திறனாளிகள் குறித்துத் தான் பேசிய சர்ச்சைக்குரிய கருத்திற்கு, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ்

amulmilkhike-1778683475

அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு! இன்று முதல் புதிய விலை அமல்; பொதுமக்கள் அதிர்ச்சி!

May 14, 2026

சென்னை: நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அமுல் பால் பாக்கெட்டுகளின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி குஜராத் கூட்டுறவு பால்

arrest-1

நீதிமன்ற வளாகப் படுகொலை: ஆயுதங்களை வழங்கிய சந்தேகநபர் கம்பஹாவில் கைது

May 14, 2026

பாதாள உலகக் குழுத் தலைவர் சஞ்சீவ குமார் சமரரத்ன (Ganemulla Sanjeewa) படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குத் தேவையான ஆயுதங்களை வழங்கியதாகக்