கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி காலமானார்

தாய்லாந்து மன்னர் வஜிராலோங்கோர்னின் மூத்த மகளும், அந்நாட்டு அரச குடும்பத்தின் மிக முக்கியமான ஆளுமையுமான இளவரசி பஜ்ரகிதியாபா தனது 47ஆவது வயதில் காலமானார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தாய்லாந்து அரச மாளிகை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது நாய்களுக்குப் பயிற்சியளித்துக் கொண்டிருந்த போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரது இதயத்தில் ஏற்பட்ட ‘மைகோபிளாஸ்மா’ தொற்றினால் கடும் இதயத் துடிப்பு சீர்குலைவு ஏற்பட்டதே இதற்குக் காரணம் என வைத்தியர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

சுமார் மூன்றரை ஆண்டுகள் பாங்கொக்கில் உள்ள சுலாலோங்கோர்ன் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், வியாழக்கிழமை அந்நாட்டு நேரப்படி இரவு 07:48 மணிக்கு காலமானதாக இன்று (12) வெள்ளிக்கிழமை காலை வெளியிடப்பட்ட அரண்மனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து அரச குடும்பத்திலேயே மிகவும் படித்த, திறமையான ஒருவராக இளவரசி பஜ்ரகிதியாபா மதிக்கப்பட்டார்.

சட்டத்துறையில் பயிற்சி பெற்ற அவர், அமெரிக்காவின் புகழ்பெற்ற கோர்னெல் பல்கலைக்கழகத்தில் இரண்டு முதுகலை பட்டங்களைப் பெற்றவர்.

நியூயோர்க்கில் உள்ள ஐநாவுக்கான தாய்லாந்து தூதரகத்தில் பணியாற்றிய அவர், பின்னர் தாய்லாந்தின் சட்டமா அதிபர் அலுவலகத்தில் சிரேஷ்ட அதிகாரியாகப் பணியாற்றினார்.

2012 முதல் 2014 வரை ஆஸ்திரியாவுக்கான தாய்லாந்து தூதுவராகப் பணியாற்றினார். அத்துடன், தென்கிழக்கு ஆசியாவிற்கான ஐநா போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகத்தின் (UNODC) சட்டத்தின் ஆட்சிக்கான நல்லெண்ண தூதுவராகவும் செயல்பட்டார்.

தாய்லாந்து சிறைகளில் உள்ள பெண் கைதிகளின் உரிமைகள் மற்றும் சிறைச்சாலை சீர்திருத்தங்களுக்காக சர்வதேச அளவில் குரல் கொடுத்தார்.

கடந்த 2021ஆம் ஆண்டு, அவரது தந்தை மன்னர் வஜிராலோங்கோர்ன், இளவரசிக்கு ‘ஜெனரல்’ அந்தஸ்து வழங்கி, தனது தனிப்பட்ட பாதுகாப்புப் படையின் பணியாளர் தலைவராகவும் நியமித்திருந்தார்.

இளவரசி பஜ்ரகிதியாபாவின் மறைவு, தாய்லாந்து அரச வாரிசுரிமையில் பெரும் கேள்விக்குறியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய மன்னர் வஜிராலோங்கோர்னுக்கு 73 வயதாகியும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அடுத்த வாரிசை அவர் அறிவிக்கவில்லை.

தாய்லாந்து பாரம்பரியப்படி ஆண் வாரிசுகளுக்கே முன்னுரிமை என்றாலும், 1974ஆம் ஆண்டு அரசியலமைப்புத் திருத்தத்தின்படி பெண் வாரிசுகளும் அரியணை ஏற முடியும்.

மன்னருக்கு 5 மகன்கள் இருந்தாலும், அவரது இரண்டாவது மனைவியின் 4 மகன்கள் 1996 இல் அரச குடும்பத்திலிருந்து நீக்கப்பட்டு அமெரிக்காவில் வாழ்கின்றனர். மூன்றாவது மனைவியின் மகனான இளவரசர் தீபாங்கோர்ன் அடுத்த வாரிசாகக் கருதப்பட்டாலும், மன்னராகச் செயல்படுவதற்கான அவரது ஆளுமை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

இதனால், பல தாய்லாந்து மக்கள் இளவரசி பஜ்ரகிதியாபாவே அடுத்த மகாராணியாகவோ அல்லது இளவரசருக்கு உதவியாக நாட்டை வழிநடத்தும் பொறுப்பையோ ஏற்பார் என நம்பியிருந்தனர். அவரது திடீர் மறைவு வாரிசுரிமை விவாதங்களை முடக்கியுள்ளது. அத்துடன், தாய்லாந்தின் கடுமையான ‘அரச நிந்தனைச் சட்டம்’ காரணமாக இது குறித்து பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

s

முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு யாழ்.பல்கலைக்கழகத்தில்…

June 13, 2026

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம்(13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இன்றைய

Legents

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 13, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

arrestt

சிறுவர் துஷ்பிரயோகம்-வான்கூவரில் பெண் ஒருவர் போலீஸாரால் கைது!

June 13, 2026

குழந்தை சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் (Child Exploitation Offences) தொடர்பான விரிவான விசாரணைக்குப் பின்னர், பெண் ஒருவரை போலீஸார்

723904451_1420449476781494_4012668450373987547_n

மிசிசாகா பாலியல் வன்கொடுமை: சந்தேக நபரைக் கண்டுபிடிக்க போலீஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

June 13, 2026

மிசிசாகா (Mississauga) பகுதியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் சந்தேக நபரின் புதிய புகைப்படம் ஒன்றை

namal raja

தமிழ் கலைஞர் ‘’ விடுதலை: நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

June 13, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட 24 வயதான தமிழ் ஹிப்ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார்

7HUTJBLLLJCM3JECARQGPUSJAY

வஸாகா பீச் கொடூரத் தாக்குதல்: டொராண்டோ இளைஞருக்கு ஆயுள் தண்டைனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

June 13, 2026

பாரி (ஒன்டாரியோ), ஜூன் 12: கடந்த 2022-ஆம் ஆண்டு வஸாகா பீச் (Wasaga Beach) பகுதியில் நபர் ஒருவரைத் திட்டமிட்டு

fifa

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: ‘மக்களை ஏமாற்ற மோசடி கும்பல் தீவிரம்’ – சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 13: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் (FIFA World Cup 2026) தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைனில்

37KGPQJU55HWFGHEKUHQ7243K4

டொராண்டோவில் 6 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து: 3 பேர் காயம், ஒருவர் கைது!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 14: கனடாவின் டொராண்டோ நகரில் திருடப்பட்ட வாகனம் உட்பட 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட பயங்கர விபத்தில்

8

“மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே வில்லன்; கர்நாடகாவுக்கு மறைமுக ஆதரவு!” – வைகோ அசுர வேக உக்கிரம் நிறைந்த குற்றச்சாட்டு!

June 13, 2026

சென்னை: “மேகதாது அணை விவகாரத்தில் மத்திய பாஜ அரசே ஒட்டுமொத்த வில்லனாகச் செயல்படுகிறது; வெளிப்படையாக அனுமதி வழங்க மாட்டோம் என்று

7

“தவெக அரசு பாஜகவின் ஜெராக்ஸ் காப்பி; அடுத்த முறை எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்றுவது உறுதி!” – முதல்வர் விஜயை அசுர வேகத்தில் கிழித்தெடுத்த மு.க.ஸ்டாலின்!

June 13, 2026

சென்னை: “மாநிலத்தில் தற்பொழுது நடந்து வரும் முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசு என்பது அப்பட்டமாக மத்திய பாஜக அரசின் ஒரு

719519754_1698479904786137_2526426679292084547_n

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம்

June 13, 2026

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது மாந்தை கிழக்கு மற்றும்

i

கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி காலமானார்

June 13, 2026

தாய்லாந்து மன்னர் வஜிராலோங்கோர்னின் மூத்த மகளும், அந்நாட்டு அரச குடும்பத்தின் மிக முக்கியமான ஆளுமையுமான இளவரசி பஜ்ரகிதியாபா தனது 47ஆவது