கொலம்பியாவில் குண்டுவெடிப்பு: சிறுவர்கள் உட்பட 14 பேர் உயிரிழப்பு

கொலம்பியாவின் தெற்கு கௌகா பிராந்தியத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற பயங்கர குண்டுவெடிப்பில், சிறுவர்கள் உட்பட குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்னன.

இந்தத் தாக்குதலுக்கு லத்தீன் அமெரிக்காவின் பழமையான கிளர்ச்சிக் குழுவான ‘பார்க்’ அமைப்பிலிருந்து பிரிந்த தீவிரவாதக் குழுக்களே காரணம் என கொலம்பிய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

“இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் பயங்கரவாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள். அவர்களை எமது சிறந்த வீரர்கள் எதிர்கொள்வார்கள்” என கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது ஒரு கண்மூடித்தனமான காட்டுமிராண்டித்தனம் என்றும், இந்தப் பயங்கரவாதத்தை கௌகா தனித்து எதிர்கொள்ள முடியாது என கௌகா பிராந்திய ஆளுநர் ஆக்டேவியோ குஸ்மான், தெரிவித்துள்ளார்.

கொலம்பியாவில் எதிர்வரும் மே 31-ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

2016-ஆம் ஆண்டு எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தம் சிதைந்ததைத் தொடர்ந்து, சமீபகாலமாக அந்நாட்டில் அரசியல் வன்முறைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.

கடந்த வருடம் ஜூன் மாதம் ஒரு பேரணியில் வலதுசாரி வேட்பாளர் மிகுயல் யூரிப் துர்பே மீது சிறுவன் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு அவர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது நிலவும் சூழலில், ஆயுதக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட இடதுசாரி செனட்டர் ஐவன் செபெடா தேர்தல் கருத்துக்கணிப்புகளில் முன்னிலையில் உள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து கௌகா மற்றும் காலி ஆகிய நகரங்களில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட பஸ் ஒன்று வெடிக்கத் தவறிய நிலையில் மீட்கப்பட்டதாகவும், இது ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பலின் சதி எனவும் பாதுகாப்புத் அமைச்சர் பெட்ரோ அர்னால்போ சான்செஸ் தெரிவித்துள்ளார்.

Screenshot 2026-05-14 115508

அதிமுகவில் உச்சகட்ட மோதல்! ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு; ரத்தத்தின் ரத்தங்கள் அதிர்ச்சி!

May 14, 2026

சென்னை: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரத்தில் அதிமுக இரண்டாக உடைந்துள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள

p-sanmugam

“100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஜூன் 30-ல் சமாதி!” – பாஜக அரசின் புதிய திட்டத்தை சாடிய பெ. சண்முகம்!

May 14, 2026

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) வரும் ஜூன் 30-ஆம்

3

“தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி

May 14, 2026

சென்னை: “தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” எனத் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக அரசு

collage-down-1714447028

சிறார்கள் கையில் மதுவா? – 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை! டாஸ்மாக் எச்சரிக்கை!

May 14, 2026

சென்னை: தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல் டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

1778468918-6452

“லட்சக்கணக்கான மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது!” – நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி முதல்வர் விஜய் அதிரடி அறிக்கை!

May 14, 2026

சென்னை: நாடு முழுவதும் 2026-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு

1500x900_834373-kb-munusami

“பதவி எனும் துண்டுக்காக கழகம் எனும் வேட்டியைக் கழற்றாதீர்கள்!” – சி.வி.சண்முகம் தரப்பிற்கு கே.பி. முனுசாமி கடும் கண்டனம்!

May 14, 2026

சென்னை: அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் மற்றும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சி.வி. சண்முகம் தரப்பினரின் செயல்பாடுகள் குறித்து,

free

“சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்; அரசு வேலை வழங்கு!” – சுடப்பட்ட மணிகண்டன் மனைவி தூத்துக்குடியில் ஆவேசப் பேட்டி!

May 14, 2026

தூத்துக்குடி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரால் சுடப்பட்ட மணிகண்டனுக்கு நீதி கேட்டு, அவரது மனைவி பொன்மணி தூத்துக்குடியில்

Screenshot 2026-05-13 143435

“திமுக-வின் வாக்குகளைக் காட்டித்தான் நீங்கள் முதல்வர்!” – விஜய் அறிக்கைக்கு உதயநிதி ஸ்டாலின் அதிரடி பதிலடி!

May 14, 2026

சென்னை: “திராவிட மாடல் ஆட்சியின் நலத்திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எங்களது வெற்றி” என முதலமைச்சர்

1200-675-26672389-thumbnail-16x9-shan

“எங்களை நீக்க எடப்பாடிக்கு அதிகாரம் இல்லை!” – அதிமுக பிளவு குறித்து சி.வி.சண்முகம் அனல் பறக்கும் பேட்டி!

May 14, 2026

சென்னை: தவெக-வுக்கு ஆதரவு அளித்ததற்காகத் தங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையாகக் கட்சிப் பதவிகளைப் பறித்த எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர்

keerthana-4-2026-05-14-06-26-38

“நானும் ஒரு மாற்றுத்திறனாளியின் மகள்தான்!” – சர்ச்சைப் பேச்சுக்கு தவெக அமைச்சர் கீர்த்தனா உருக்கமான மன்னிப்பு!

May 14, 2026

சென்னை: மாற்றுத்திறனாளிகள் குறித்துத் தான் பேசிய சர்ச்சைக்குரிய கருத்திற்கு, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ்

amulmilkhike-1778683475

அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு! இன்று முதல் புதிய விலை அமல்; பொதுமக்கள் அதிர்ச்சி!

May 14, 2026

சென்னை: நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அமுல் பால் பாக்கெட்டுகளின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி குஜராத் கூட்டுறவு பால்

arrest-1

நீதிமன்ற வளாகப் படுகொலை: ஆயுதங்களை வழங்கிய சந்தேகநபர் கம்பஹாவில் கைது

May 14, 2026

பாதாள உலகக் குழுத் தலைவர் சஞ்சீவ குமார் சமரரத்ன (Ganemulla Sanjeewa) படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குத் தேவையான ஆயுதங்களை வழங்கியதாகக்