குமார ஜயக்கொடி தொடர்பான வழக்கு தீர்ப்பினை முழு நாடும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது – தலதா அத்துகோரள

சட்டத்தின் ஆட்சி, நீதித்துறை சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டுமாயின், நீதித்துறைக்குத் தேவையான கௌரவத்தையும் மரியாதையையும் வழங்குவது மிகவும் அவசியமானதாகும். அந்த வகையில் அமைச்சர் குமார ஜயக்கொடி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பை முழு நாடும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அமாரி ஹோட்டலில் புதன்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இன்று நாட்டிற்குள் எவ்வாறானதொரு சந்தர்ப்பம் உருவாகியுள்ளது என்பது பற்றி பேச வேண்டியது அவசியமாகும். குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு பிரதானிகளை நியமித்து அந்த நியமனங்களை அரசியல் பகடைக்காயாகப் பயன்படுத்தி, தேவையற்ற விதத்தில் அனைவரிடமும் பழிவாங்கும் நடவடிக்கைகளே இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே, அரசியல் ரீதியாகத் தங்களது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே தற்போது இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கடந்த காலங்களில் 70 வருட சாபம் பற்றிப் பேசினார்கள். உலகச் சந்தையில் எரிபொருள் விலை உயரும் போது இங்கும் விலை உயர்த்தப்பட்டால் அரசாங்கம் எதற்கு என்று அன்று கேட்டார்கள். இது போன்ற பல விடயங்களை எம்மால் கூற முடியும்.

ஆனால், அந்த விடயங்களைப் பேசுவதற்கு முன்னதாக, இந்த நாட்டில் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த அரசியல் கருத்தைக் கொண்டிருந்தாலும், 60 வருடங்களுக்குப் பிறகு இன்றைய ஆட்சியாளர்கள் அதிகாரத்திற்கு வர முடிந்தமைக்குக் காரணம், கடந்த காலங்களில் ஜனநாயகத்தை மதித்து இந்த நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்புக்குள் நின்று அனைத்துத் தலைவர்களும் செயற்பட்டமையே ஆகும்.

சட்டத்தின் ஆட்சி, நீதித்துறை சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டுமாயின், நீதித்துறைக்குத் தேவையான கௌரவத்தையும் மரியாதையையும் வழங்குவது மிகவும் அவசியமானதாகும். ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் அரசாங்கத்தின் செயற்திட்டங்கள் எதையும் காணக் கூடியதாக இல்லை.

ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தலைப்பு கொண்டு வரப்பட்டு, நிலவுகின்ற பிரச்சினைகளை மூடிமறைப்பதற்கான நடவடிக்கைகளை மாத்திரம் மிகத் தெளிவாக திட்டமிட்டு அரசாங்கம் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது.

அண்மையில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. ஆனால் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு வருடத்திற்கும் மேலாகியும் ஒரு சுயாதீன பெண்கள் ஆணைக்குழுவை நியமிக்க முடியாமல் போயுள்ளது. நியமிக்கப்பட்ட தலைவர் சில நாட்களிலேயே பதவி விலகினார். இந்த விடயத்தைக்கூட இவர்களால் முறையாக முன்னெடுக்க முடியாமலுள்ளது.

நீதிமன்றம் பல பணிகளைச் செய்து வருகின்றது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவும் பல பணிகளை முன்னெடுத்து வருகின்றது. தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரான குமார ஜயக்கொடிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு அவரால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் தொடர்பிலேயே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் அமைச்சர் குமார ஜயகொடி தொடர்பாகக் கிடைக்கவுள்ள தீர்ப்பை இந்த நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏனெனில், நீதித்துறையின் மீதுள்ள முழுமையான கௌரவத்துடன், நீதித்துறையின் சுதந்திரம் அவ்வாறே பேணப்படும் என்ற நம்பிக்கையில், இந்த வழக்கு நடவடிக்கைகளும் சரியாக முன்னெடுக்கப்பட்டு சரியான தீர்ப்பு வழங்கப்படும் என நாம் நம்புகின்றோம்.

இந்த நாட்டுக்காக வரலாற்றில் இருந்து நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளுமே ஏதோ ஒரு வகையில் நாட்டுக்காக எதையாவது செய்த கட்சிகளாகும்.

எனவே, இந்த நாட்டில் ஜனநாயகம் நலிவடைந்து செல்லும் வேளையில், ஜனநாயகத்தைப் பாதுகாத்துச் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்குமாறு இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

Harshana-Suriyapperuma

நிதிச் செயலாளர் சமூகமளிக்கத் தவறினால் சட்ட நடவடிக்கை: சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு எச்சரிக்கை

April 30, 2026

நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, நாடாளுமன்றக் குழு முன்னிலையில் சமூகமளிக்கத் தவறினால், அவருக்கு எதிராக நாடாளுமன்ற பொறிமுறையூடாக

sund

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

April 30, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு நிச்சயமாகத் தண்டனை கிடைக்கும். அதற்கான விசாரணைகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஒரு நீதியான விசாரணைகள்

Kajen

இனப்பிரச்சினைத் தீர்வுக்காகத் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரத் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை எடுத்து வரும் முயற்சி குறித்து…

April 30, 2026

“ஈழத்தமிழர் அரசமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழுவின் செயற்பாடானது, தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை முன்னெடுத்து வரும் ஒற்றுமை முயற்சியை மேலும்

mann

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்: பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

April 30, 2026

மத்திய மற்றும் மாகாண அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அபிவிருத்தி திட்டங்களுக்கான அனுமதி வழங்குதல் மற்றும் மாவட்டத்தின் முக்கிய

soor

நிதிபற்றிய குழுவில் முன்னிலையாக முடியாது – திறைசேரி செயலாளர்

April 30, 2026

அரச நிதிப்பற்றியக் குழுவில் இன்று முன்னிலையாக முடியாதென திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார். அது

FB_IMG_1777466129432

விளையாட்டில் அரசியல் வேண்டாம்: எரானுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி அதிரடி

April 30, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ‘மாற்றத்திற்கான குழுவின்’ (Transformation Committee) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவை, கட்சியின்

684152693_122289994754194641_3108322150554372323_n

ஆள் கடத்தல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக விசாரணை: 47 வயது நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது

April 30, 2026

காணாமல் போன சிறுமி ஒருவர் மற்றும் பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, 47 வயதுடைய நபர் ஒருவர்

peel poli

மிசிசாகாவில் துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

April 30, 2026

மிசிசாகாவில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையின் போது, தோட்டாக்கள் நிரப்பப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு இளைஞர்கள் மீது

canada police251

கால்கரியில் தபால் பெட்டி உடைப்பு: இருவர் மீது 98 குற்றச்சாட்டுகள் பதிவு

April 30, 2026

நகரின் வடகிழக்குப் பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற தபால் பெட்டி (Mailbox) உடைப்புச் சம்பவங்கள் குறித்த விசாரணையைத் தொடர்ந்து, இரண்டு ஆண்கள்

683205215_122290010084194641_7110331960142875781_n

வின்னிபெக் மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் தீவைப்புச் சம்பவங்கள்: ஒன்டாரியோ இளைஞர் மீது குற்றம் சுமத்தப்பட்டது

April 30, 2026

வின்னிபெக் நகரில் உள்ள உள்ளூர் வணிக நிறுவனங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர்ச்சியான மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் தீவைப்புச்

682498274_122290014542194641_8190665495581400332_n

வட ஒன்டாரியோ சிறுவன் கடத்தல் விவகாரம்: சிறைத்தண்டனையைத் தொடர்ந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் குற்றவாளி

April 30, 2026

வட ஒன்டாரியோவில் (Northern Ontario) சிறுவன் ஒருவனைக் கடத்திய குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்ட பிராம்ப்டன் (Brampton) பகுதியைச் சேர்ந்த 37

687038414_122290016300194641_7422793790922838407_n

டொராண்டோ நகரில் நடந்த கொள்ளைச் சம்பவம்: மூன்று சந்தேக நபர்களைத் தேடும் காவல்துறை

April 30, 2026

டொராண்டோ நகரின் மையப்பகுதியில் (Downtown) நடந்த கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து, மூன்று சந்தேக நபர்களை அடையாளம் காண காவல்துறை பொதுமக்களின்