காணிகளை விடுவிக்க வியுறுத்தி ஐந்தாவதுநாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள்; ரவிகரன் எம்.பி பங்கேற்பு

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கவலியுறுத்தி காணிகளுக்குரிய மக்கள்  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கேப்பாப்பிலவு மக்களின் குறித்த ஐந்தாம் நாள் போராட்டத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் பங்கேற்றிருந்தார்.
குறிப்பாக கேப்பாப்பிலவில் 55குடும்பங்களுக்குரிய 59.5ஏக்கர் பூர்வீக வாழ்விடக்காணிகளும், 4குடும்பங்களுக்குரிய 100ஏக்கர் மத்தியவகுப்புக் காணிகளும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளநிலையில், அந்த பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தியே காணிகளுக்குரிய மக்களால் தொடர் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
மேலும் இந்த ஐந்தாம் நாள் ஆர்ப்பாட்டத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சட்டத்தரணி குமாரசிங்கம் கம்சன், சூழல் மற்றும் சமூகத்தின் அபிவிருத்தியை வலுவூட்டும் நிறுவனத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் திருமதி.மாதுசனா திஷான் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்களின் பூர்வீக காணிகள் விடுவிக்கப்படவே வேண்டும் என வலியுறுத்திய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமது பூர்வீகக் காணி விடுவிப்பிற்காய் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கேப்பாப்பிலவு மக்களுக்காக எப்போதும் துணைநிற்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
,
கேப்பாப்புலவு மக்கள் ஆரம்பகாலத்தில் பிலக்குடியிருப்புக் காணி விடுவிப்பிற்காக 30நாட்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடாத்தி அந்த மக்களுடைய பிலக்குடியிருப்புப்பகுதியிலிருந்த பூர்வீகக் காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தது.
அதன்பின்பு கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக கேப்பாப்பிலவுப் பகுதியிலுள்ள தமது பூர்வீக வாழ்விடக்காணிகளை விடுவிக்க வலியுறுத்தி மக்களால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, அந்துமக்களுக்குரிய ஒருபகுதிக் காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கேப்பாப்பிலவு பகுதியைச்சேர்ந்த 55குடும்பங்களுடைய 59.5ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகளும், 04குடும்பங்களுடைய 100ஏக்கர் காணிகளுமாக மொத்தம் 59பேருக்குரிய 159.5ஏக்கர் காணிகளும் விடுவிக்கவேண்டியுள்ளன. இவ்வாறு விடுவிக்கப்படாமலுள்ள தமது பூர்வீகக் காணிகளைவிடுவிக்குமாறு வலியுறுத்தியே, தற்போது மக்கள் மீண்டும் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அந்த மக்கள் தங்களுடைய பூர்விகக் காணிகள் தங்களுக்கு வேண்டும் என்றுதான் அந்தமக்கள் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். வேறு இடங்களில் காணிகள் எனுஅந்தமக்கள் போராடவில்லை.
எனவே இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களின் இந்தப் பூர்வீக்காணிகள் விடுவிக்கப்படவேண்டும்.
கேப்பாப்பிலவு மக்களின் காணிவிடுவிப்பு விடயம் தொடர்பில் நான் ஏற்கனவே ஜனாதிபதியுடன் பேசியிருக்கின்றேன். குறிப்பாக பாராளுமன்ற குழு அறையில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சினுடைய அமைச்சுசார் ஆலோஙனைக்குழுக்கூட்டங்களில் இந்த கேப்பாப்பிலவு மக்களின் காணிவிடுவிப்பு விடயம் தொடர்பாக பலதடவைகள் வலியுறுத்தியிருக்கின்றேன்.
அந்தவகையில் ஜனதிபதியும் இந்துமக்களின் காணி விடுவிப்பு விடயத்தில் கூடுதல் கவனஞ்செலுத்தவேண்டும். கவனஞ்செலுத்துவார் என்றே நம்புகின்றோம்.
அந்த மக்களின் காணி இந்தமக்களுக்கே விடுவிக்கப்படவேண்டுமென்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.
கேப்பாப்பிலவு மக்களின் காணி விடுவிப்பிற்காக, எப்போதும் அந்த மக்களுடன் துணைநிற்பேன்
May be an image of text that says 'கேப்பாப்பிலவு மக்களின் பூர்வீகக் காணிகள் விடுவிக்கப்படவேண்டும்! காணி விடுவிப்பிற்காய் போராடும் மக்களோடு எப்போதும் துணைநிற்பேன் ரவிகரன் எம்.பி தெரிவிப்பு 55 குடும்பங்களுடைய 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகள் 生社 04 குடும்பங்களுடைய 100 ஏக்கர் மத்தியவகுப்பு காணிகள் மொத்தம் 59 பேருக்குரிய 159.5 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் டவேண்டும் துரைராசா ரவிகரன் பாராளுமன்ற உறுப்பினர் 0770657751 ravikaranmpoffice@gmail.com'
cham

சமிந்த விஜேசிறிக்கு பிணை

August 25, 2026

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள்

Parliame

22ஐ சவாலுக்கு உட்படுத்தி 21 மனுக்கள் தாக்கல்

August 25, 2026

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்தை சவால் செய்து இதுவரை உயர் நீதிமன்றத்தில் 21 மனுக்கள்

can

மாணவியின் மனிதநேயப் பண்பு!

August 25, 2026

அக்கரப்பத்தனை பகுதியில் ஏ.டி.எம். இயந்திரத்தில் விட்டுச் செல்லப்பட்டிருந்த 15,000 ரூபாய் பணத்தை கண்டெடுத்த உயர்தர மாணவி ஒருவர், அதனைத் தாமதிக்காமல்

dd

117ம் பிறந்தநாளைக் கொண்டாடிய உலகின் மிக வயதான பெண்!

August 25, 2026

உலகின் மிக வயதான வாழ்ந்துகொண்டிருக்கும் நபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரித்தானியப் பெண்மணி எதேல் கேட்டர்ஹாம், தனது 117-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

doug-ford-ontario-premiere-february-7-2023

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்

August 24, 2026

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்எதிர்வரும் புத்தாண்டு முதல் கனடாவின் அனைத்து

trump carney

வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை 50% ஆக உயர்த்த ட்ரம்ப் திட்டம்

August 24, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடாவுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்வரும் புத்தாண்டு முதல் “அனைத்து வகையான பெரிய

au

அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி

August 24, 2026

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட்

fif

பிஃபா தலைவரை சிறுவர் கால்பந்து தொடரில் பங்கேற்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

August 24, 2026

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை இந்த வார இறுதியில் டொமினிகன் குடியரசில் நடைபெறவுள்ள சிறுவர் கால்பந்து தொடரில்

jud

வவுனியாவில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை

August 24, 2026

2013 ஆம் ஆண்டு வவுனியாவில் தனது 14 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய

26-6a8afc6b4e102

மஞ்சள் காவிக்கு சிறப்பு சலுகை?

August 24, 2026

அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற

NAMAL

மக்கள் பிரச்சினைகளை விடுத்து அநுர தரப்பு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளில் தலையிடுகின்றது!

August 24, 2026

தற்போதைய அநுர அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை விடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை துரிதப்படுத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்புவதற்குமே விசேட கவனம்

dailythanthi_2026-08-24_vrhb80pa_protest

“பணி நிரந்தரம் கோரி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் மறியல்; 250 பேர் கைது!”

August 24, 2026

சென்னை சென்னை பாரிமுனையில் பணி நிரந்தரம் செய்யக் கோரித் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய திடீர் சாலை மறியலும், அதனைத்