கல்வி அமைச்சிடம் அவசர கோரிக்கை

எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ள போதிலும், 2026ஆம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்குப் பாடத்திட்டங்களை நிறைவு செய்வதற்கும் தயாராகுவதற்கும் போதிய கால அவகாசம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (16.06.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் என்ற மிகக் குறைந்த மட்டத்திலேயே உள்ளதால், க.பொ.த உயர்தரப் பரீட்சை என்பது கடுமையான போட்டித் தன்மையைக் கொண்ட ஒன்றாக மாறியுள்ளது. இம்முறை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பெரும் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, கல்வி அமைச்சு இந்த விவகாரத்தை மிகவும் மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும். கடந்த 2022 முதல் 2025 வரையான காலப்பகுதியில் பாடத்திட்டங்களை நிறைவு செய்ய 27 முதல் 31 மாதங்கள் வரை அவகாசம் இருந்த போதிலும், 2026 மாணவர்களுக்கு வெறும் 21 மாதங்களே கிடைத்துள்ளன. நாட்டின் பெரும்பாலான பாடசாலைகளில் இன்னும் பாடத்திட்டங்கள் முடிக்கப்படவில்லை.

பாடத்திட்டங்களை மாத்திரம் அவசரமாக முடிப்பதன் மூலம் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள்களுக்கு முகங்கொடுக்கவும் சுய கற்றலுக்கும் போதிய நேரம் தேவை. அத்துடன், ‘டித்வா’ சூறாவளிப் பேரழிவு காரணமாக மாணவர்கள் தமது பாடக்குறிப்புப் புத்தகங்களை இழந்துள்ளனர். முதல் முறை பரீட்சை எழுதுபவர்கள் மட்டுமன்றி, 2ஆம் மற்றும் 3ஆம் முறை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கும் இம்முறை முடிவுகள் வெளியானதில் இருந்து பரீட்சைக்கான கால இடைவெளி மிகக் குறைவாகவே உள்ளது.

எனவே, பரீட்சையை ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோருகின்றோம். இதனை நாம் அரசியல் லாபத்திற்காகக் கூறவில்லை. பெற்றோர் மற்றும் மாணவர்களின் கோரிக்கையையே முன்வைக்கின்றோம். ‘டித்வா’ சூறாவளியினால் முழுமையாகவும் பகுதியளவிலும் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான இழப்பீடுகள் இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை.

நாடு தழுவிய ரீதியில் 25 சதவீதமானோருக்கே இழப்பீடு கிடைத்துள்ளதுடன், பெருமளவு பாதிக்கப்பட்ட கண்டி மாவட்டத்தில் வெறும் 2 – 3 சதவீதமானோருக்கே உதவி கிடைத்துள்ளது. வீடுகளை இழந்து வாடகை வீடுகளில் இருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட 6 மாதக் கொடுப்பனவு முடிவடைந்துள்ள நிலையில், அவர்களின் அடுத்தகட்ட நகர்வு கேள்விக்குறியாகியுள்ளது. இது அரசின் பலவீனமான முகாமைத்துவத்தைக் காட்டுகின்றது.

மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலை உயர்வால் மக்கள் அவதியுறுகின்றனர். அத்தியாவசியப் பொருள்களுக்கான வற் வரியை நீக்குவதாகக் கூறிய அரசு அதனை இன்னும் செய்யவில்லை. பொக்கிஷம் நிரம்பியுள்ளதாகக் கூறும் அரசு மக்களுக்கு நிவாரணம் வழங்க மறுக்கின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். 2024 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இது தொடர்பாக 7 அம்சங்கள் அடங்கிய விசாரணை அறிக்கையைப் பேராயர் மற்றும் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பித்தார்.

அந்த வழிமுறைகளைப் பின்பற்றியிருந்தால் உண்மைகளைக் கண்டறிந்திருக்கலாம் என்பதால், இப்போதும் இது குறித்து நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும். எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளன. இரு கட்சிகளும் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதே உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பு என்பதால், இது குறித்த பேச்சுகள் இரு கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மாகாண சபைத் தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ள போதிலும், அதற்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டாலும் எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுக்க தமது கட்சி தயாராகவே உள்ளது என்றார்.

Gun-Site

திருகோணமலை கடற்படை முகாமில் இயங்கிய இகசிய வதை  முகாம் மூடப்பட்டது

June 17, 2026

திருகோணமலை கடற்படைத் தளத்திற்குள் அமைந்துள்ள “கன் சைட்” (Gun Site) என்று அழைக்கப்படும் நிலத்தடி இரகசிய வதை முகாமை

2EHAIAM3OVHVXNJYZBQRV2GTFI

அச்ச உணர்வை ஏற்படுத்த விரும்புகிறார்கள்’: குறுஞ்செய்தி செயலிகள் மூலம் இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கிச் சூடுகளுக்கு இளைஞர்கள் வாடகைக்கு அமர்த்தப்படுவதாக டொராண்டோ காவல்துறை தகவல்

June 17, 2026

யூத வழிபாட்டுத் தலங்கள் (Synagogues), யூதப் பள்ளிகள் மற்றும் அமெரிக்க தூதரக அலுவலகம் (U.S. Consulate) உள்ளிட்ட பல்வேறு இலக்குகள்

6A3YHS2D7NBNNJ4N52F4UWES7M

டொராண்டோவின் கிழக்கு பகுதியில் காரணமின்றி நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம்: சந்தேக நபரைக் தேடும் காவல்துறை

June 17, 2026

டொராண்டோவின் கிழக்கு பகுதியில் கடந்த வாரம் காரணமின்றி நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்

acc

விபத்தில் அளவெட்டி இளைஞன் பலி

June 17, 2026

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியானார். குறித்த இளைஞர் தொழிலுக்கு சென்று மீண்டும்

aga

சம்மாந்துறையில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் – தங்கத்தைத் தேடி அகழ்வுப் பணி

June 17, 2026

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிலுள்ள தொய்யும் வட்டை கீழ் கண்டம் பகுதியில் தனியார் வயல் காணியொன்றில் இன்று புதன்கிழமை(17) அகழ்வுப் பணி

Education

கல்வி அமைச்சிடம் அவசர கோரிக்கை

June 17, 2026

எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ள போதிலும், 2026ஆம் ஆண்டு பரீட்சைக்குத்

arre

பண மோசடி; இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் கைது

June 17, 2026

லங்கைக் குடியுரிமை பெற்ற இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடு ஒன்றில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி,

jaffna GH

யாழ். போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் தொடர்பில் முறைப்பாடு?

June 17, 2026

யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு பகுதியில் இயங்கும் சிற்றுண்டிச்சாலைக்கு உணவுப் பொருட்களை வழங்குவதற்காக சென்ற

saji

அரசு அனைவரையும் ஏமாற்றிவிட்டது – சஜித் சாடல்

June 17, 2026

பொய்களைக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு நாட்டின் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை முற்றிலும் ஏமாற்றிவிட்டது என்று

download (9)

எட்மன்டனில் முன்னாள் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சிறுவர் ஆபாசக் குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்துள்ளார்

June 17, 2026

எட்மன்டன் (Edmonton) நகரின் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளி ஒன்றின் முன்னாள் ஆசிரியர், கனடாவுக்குத் திரும்பிய பின்னர் கைது செய்யப்பட்டு, சிறுவர்

724287458_122297856890194641_3241864132645503016_n

உயிர்கொல்லி கூடாரத் தீ விபத்தைத் தொடர்ந்து கொலைக் குற்றச்சாட்டில் தேடப்படும் சந்தேகநபரை சட்பரி பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்

June 17, 2026

கிரேட்டர் சட்பரி (Greater Sudbury) பொலிஸார், ஒரு நபர் உயிரிழப்பதற்குக் காரணமான கூடாரத் தீ விபத்துச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு

724072972_122297785646194641_4151210961746668221_n

சஸ்காட்செவனில் கைதி ஒருவர் தவறுதலாக விடுவிப்பு: சந்தேகநபரை பொலிஸார் தேடி வருகின்றனர்

June 17, 2026

நிர்வாகக் குறைபாடு காரணமாக பிரின்ஸ் ஆல்பர்ட் சீர்திருத்த மையத்திலிருந்து (Prince Albert Correctional Centre) தவறுதலாக விடுவிக்கப்பட்ட 30 வயதுடைய