கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல், தப்பிச் சென்றுள்ளது. அந்த வாகனத்தை துரத்திச் செல்லும் முயற்சியில், பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் வைத்து, வாகனம் மடக்கிப் பிடிக்கப்பட்டபோது 6600 மில்லி கிராம் ஹெரோயினுடன் வாகன சாரதி மற்றும் உதவியாளர் என இருவர் புதன்கிழமை (4) கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு 10.30 மணியளவில் கரடியனாறு கித்துள் பகுதியில் இருந்து செங்கலடி பகுதியை நோக்கி மண் ஏற்றிக்கொண்டு பயணித்த கனரக வாகனம் ஒன்றை கரடியனாறு கறுத்தபாலம் பகுதியில் உள்ள வீதியில் வைத்து நிறுத்துமாறு பொலிஸார் பணித்தனர்.

இதன்போது அதனை மீறி கனகர வாகனம் செங்கலடி பகுதியை நோக்கிச் சென்றதையடுத்து அவர்களை பின்தொடர்ந்து பொலிஸார் துரத்திச் சென்று பிடிக்க முயன்றுள்ளனர்.

இதன்போது பொலிஸார் தப்பிச் சென்ற வாகனம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்தியதையடுத்து, அவர்கள் அங்கு வீதி சோதனைத் தடையை அமைத்து, வாகனத்தை நிறுத்துமாறு பணித்தபோது அந்த தடையையும் மீறி கனரக வாகனம் மட்டக்களப்பு நகரை நோக்கிச் சென்றுள்ளது.

வாகனத்தை நிறுத்துவதற்காக ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த கனரக வாகனத்தை நோக்கி கைத்துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டுள்ளார்.

அதனையும் மீறி வாகனம் தப்பிச் சென்று மட்டக்களப்பு நகரை நோக்கிப் பயணித்துள்ளது.

இந்நிலையில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நகரின் திருகோணமலை வீதியில் சந்தி பகுதியில் வீதித் தடை விதித்து, குறித்த கனரக வாகனத்தை நிறுத்திப் பிடித்துள்ளனர்.

அதன் பின்னரே சாரதியும் உதவியாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 25 வயதுடைய கரடியனாறு கித்துல் பகுதியைச் சேர்ந்த சாரதியிடம் இருந்து 3180 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் 22 வயதுடைய ஏறாவூர் மீராகேணியைச் சேர்ந்த உதவியாளரிடம் இருந்து 3420 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டு ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

குறித்த சாரதி கரடியனாறு பகுதியில் 8 மாடுகளை திருடிய மற்றும் வீடு உடைத்து திருடிய சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பதும் அவர் சில காலமாக தலைமறைவாகி வந்துள்ளதும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

sama

இலங்கை தமிழரசுக் கட்சியின் மே தின நிகழ்வு

May 1, 2026

இலங்கை தமிழரசுக் கட்சியின் மே தின நிகழ்வு முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் இன்று நடைபெற்ற நிலையில், கட்சியின் சார்பில் 10

4EME22FUCUFXLKWCLCX26AJ45E

‘இன்னும் பல பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம்’: மழலையர் பள்ளி பாலியல் வன்கொடுமை விசாரணையில் மிசிசாகா நபர் மீது வழக்கு

May 1, 2026

நயாகரா பிராந்தியத்தில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் (Daycare) நடந்த பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் தொடர்பாக மிசிசாகாவைச் சேர்ந்த ஒரு

N4GRQRXYBFAE3OJP7ZBTM4PGXA

GTA யூத வழிபாட்டுத் தலங்களில் நடந்த தொடர் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபரின் புகைப்படங்களை வெளியிட்டது காவல்துறை

May 1, 2026

GTA (Greater Toronto Area) பகுதியில் உள்ள யூத வழிபாட்டுத் தலங்களை (Synagogues) இலக்கு வைத்து அடுத்தடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்

anura 2026

எரிபொருள் விலையில் சிறிய அதிகரிப்பு அவசியமாகலாம்: ஜனாதிபதி அறிவிப்பு

May 1, 2026

உலக சந்தையில் எரிபொருள் மற்றும் நிலக்கரி விலையேற்றம் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்து வருகின்றமை காரணமாக நாட்டின் எரிசக்தி துறையில்

1777567784-death-6

இணைய மோசடி தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட நிதி அமைச்சக அதிகாரி-மரணத்திற்கான காரணம் வெளியானது

May 1, 2026

ஒரு இணைய வழி கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் முறைகேடு தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த, நிதி

1200-675-24723167-thumbnail-16x9-velmurugan (1)

“கத்தி பட ரிலீஸின் போது விஜய் மேலாளர் பேரம் பேசினார்” – வேல்முருகன் கிளப்பிய அதிரடிப் புகார்!

May 1, 2026

சென்னை: எடிசன் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர்

PYHMKVVG7YLHLX7FSBZNJG3LPI

கனடாவில் அகதிகள் மருத்துவச் செலவுகளின் ஒரு பகுதியை ஏற்க வேண்டும்!

May 1, 2026

டொராண்டோ — மத்திய அரசின் திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து, அகதிகள் இனி தங்களின் மருந்துச் சீட்டுகள், மனநல

1200-675-25564142-thumbnail-16x9-tvk-aadhav-arjuna

“தோல்வி பயத்தால் தவெக அலுவலகத்தை எரித்துள்ளனர்” – ஆதவ் அர்ஜுனா அதிரடி குற்றச்சாட்டு!

May 1, 2026

திருச்சி: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அலுவலகம் இன்று அதிகாலை மர்ம நபர்களால்

bef4d650-71a3-11f0-a82a-7bee61c7c107.jpg

“நாட்டின் கட்டமைப்புக்குத் தொழிலாளர்களே அஸ்திவாரம்” – ஓ.பன்னீர்செல்வம் மே தின வாழ்த்து!

May 1, 2026

சென்னை: சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொழிலாளர் பெருமக்களுக்குத் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

l35720250915134907

“வாக்கு எண்ணிக்கையில் திமுக தில்லுமுல்லு செய்ய வாய்ப்பு; பாமக முகவர்கள் விழிப்புடன் இருங்கள்” – அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

May 1, 2026

சென்னை: மே 4-ம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, பாமக மற்றும் கூட்டணி கட்சிகளின்

y1-1744036252

“தேர்தல் முடிந்தவுடன் விலையை உயர்த்துவதா?” – சிலிண்டர் விலை உயர்வுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

May 1, 2026

சென்னை: மே மாதத்தின் முதல் நாளான இன்று, வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களிடையேயும் வணிகர்களிடையேயும் அதிர்ச்சியை

dailythanthi_2026-05-01_5pdthyju_Untitled-3

“அன்புச் சகோதரர் அஜித்குமாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” – எடப்பாடி பழனிசாமி நெகிழ்ச்சி!

May 1, 2026

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான நடிகர் அஜித்குமார் இன்று தனது 55-வது