கனடியதமிழர் பேரவைக்கும் முல்லைத்தீவு அங்கயற்கண்ணி உணவகத்திற்கும் எந்த தொடர்புமில்லை-கனடிய தமிழர் பேரவை

கனடியத்தமிழர் பேரவைக்கும் முல்லைத்தீவு அங்கயற்கண்ணி உணவகத்திற்கும் எந்த தொடர்புமில்லை என தெரிவித்துள்ள கனடிய தமிழர் பேரவை இலங்கையில் தமிழ் மக்களுக்கு மேற்கொள்ளப்படும் பொருளாதார முயற்சிகள் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களை நிராகரித்துள்ளது.
கனடிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது
இலங்கையில் “பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக” மேற்கொள்ளப்பட்டுவரும் பொருளாதார முயற்சிகள் குறித்துப் பரப்பப்படும் தவறான ஆதாரமற்ற தகவல்களைக் கனடியத் தமிழர் பேரவை முற்றிலும் மறுக்கிறது
கனடியத் தமிழர் பேரவை (CTC) இந்த அறிக்கையை வெளியிடுவதன் மூலம், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் எங்களது பொருளாதார அபிவிருத்தி முயற்சிகள் தொடர்பாகச் சமூக ஊடகங்களில் பரவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் தீங்கிழைக்கும் தவறான தகவல்களை முற்றிலுமாக மறுக்கிறது.
வடக்கு கிழக்கு பொருளாதார அபிவிருத்தி மையத்துடன் (NEED Centre) இணைந்து, கனடியத் தமிழர் பேரவை பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிலையான பொருளாதாரத்தை உருவாக்கும் தனது பணியில் உறுதியாக நிற்கிறது.
இந்த முயற்சியின் முக்கிய அங்கமாகக், கனடியத் தமிழர் பேரவையின் நிதியுதவியில் வடக்கு கிழக்கு அபிவிருத்தி மையம் நடைமுறைப்படுத்தும் “முல்லைத்தீவில் தயாரானது” (Made in Mullaitivu) என்ற திட்டம், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள உள்ளூர் உற்பத்தியாளர்கள் பொருளாதார சுதந்திரத்தைப் பெறவும், தங்கள் உற்பத்திகளை மேம்படுத்தவும் உதவும் ஒரு அர்ப்பணிப்பான தளமாகச் செயற்படுகிறது.
இதன் அடிப்படையில், “முல்லைத்தீவில் தயாரானது” (Made in Mullaitivu) என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாக இரண்டு விற்பனை நிலையங்கள் மட்டுமே உள்ளன என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
ஒரு விற்பனை நிலையம் முல்லைத்தீவு நகரத்தில் புதிய பேருந்து நிலைய வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
இரண்டாவது முறிகண்டியில் (A9 வீதி) அமைந்துள்ள உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான காட்சிசாலை மற்றும் விற்பனை நிலையம் ஆகும்.
சமீபத்தில் பரவும் வதந்திகள், கனடியத் தமிழர் பேரவை “அங்கயற்கண்ணி” என்ற உணவகத்தைக் கையகப்படுத்தியதாகப் பொய்களைக் கூறுகின்றன.
“அங்கயற்கண்ணி உணவகம்” என்பது முல்லைத்தீவு மாவட்டத்தில் வேறோர் இடத்தில் அமைந்துள்ள முற்றிலும் வேறுபட்ட உணவகமாகும். கனடியத் தமிழர் பேரவைக்கும் இந்த “அங்கயற்கண்ணி” உணவகத்திற்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை.
முறிகண்டி என்ற இடத்தில், உள்ள “முல்லைத்தீவில் தயாரானது (Made in Mullaitivu)” காட்சிசாலை, அரியாத்தை சைவ உணவகத்துடன் இடத்தைப் பகிர்ந்துகொள்கிறது. மற்றும் A9 வீதியில் சுத்தமான “கழிப்பிட வசதிகள்” சேவையை இயக்குகிறது. எனினும், இந்த “அரியாத்தை உணவகம்” சுயாதீனமாக இயங்குகிறது.
கனடியத் தமிழர் பேரவையும், வடக்கு கிழக்கு அபிவிருத்தி மையமும், “Made in Mullaitivu” என்ற உள்ளூர் உற்பத்தியாளர்களின் காட்சிசாலை உள்ளடங்கிய விற்பனை நிலையத்துக்கு மட்டுமே பொறுப்பு. அந்த இடத்தில் இயங்கும் அரியாத்தை உணவகத்துடன் அவற்றுக்கு எவ்வித உரிமையும் இல்லை.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அங்கயற்கண்ணி உணவகம் உட்பட அனைத்து அரியாத்தை உணவகங்களும், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தால் நிர்வகிக்கப்படுகின்றன அல்லது ஒருங்கிணைக்கப்படுகின்றன.
பல வருட மூலோபாய திட்டமிடலாலும், நமது தாயகத்தில் உண்மையாக அக்கறை கொண்டவர்களின் கடும் உழைப்பினாலும் இந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
சிலர் திரைக்குப் பின்னால் ஒளிந்திருந்துகொண்டு இத்தகைய மக்கள் நலன்புரித் திட்டங்களை அழிக்கும் சொகுசுப் பாதையைத் தேர்ந்தெடுக்கும்போது, மற்றவர்கள் தரையில் இறங்கி கடின உழைப்புடன் மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களைக் கட்டமைக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.
பொய்களைப் புனைந்து, உணர்ச்சி ஆட்ட உசுப்பேற்றலைப் பரப்புபவர்கள் எதையும் உருவாக்கும் பார்வையோ திறனோ இல்லாதவர்கள் என்பது தெளிவு.
அவர்களின் செயல்கள், தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாகச் சீர்குலைக்கும் முயற்சியாகும்.
உள்ளூர் உற்பத்தியாளர்களுக்குச் சந்தை கிடைப்பது, வறிய குடும்பங்கள் நிலைத்தன்மை பெறுவது, போரால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதாரம் மேம்படுதல் போன்றவற்றால் துன்புறும் மக்களின் வாழ்க்கை மாற்றம் அடைவதை நேரில் காணும் தாக்கத்தால் நாங்கள் உந்தப்படுகிறோம்.
உரிய முடிவுகளே எங்களுக்குத் தேவையான ஒரே சான்று.
எமது சமூகத்தினர் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். இந்தப் பொய்யான கதைகள் உண்மையில் மக்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் முயற்சிகள் என்பதை அடையாளம் காணுமாறு பொதுமக்களுக்கு வலியுறுத்துகிறோம்.
கனடியத் தமிழர் பேரவை அழிப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது. உருவாக்குபவர்களுக்கு உறுதுணை புரிவதில் உறுதியாக நிற்கிறது. எமது மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான எமது அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது. நமது தாயகத்திற்கு நிலையான மற்றும் வளமான எதிர்காலத்தை உறுதி செய்யத் தொடர்ந்து அயராது உழைப்போம்
arrest

இலஞ்சம் பெற்ற வருமான வரி அலுவலக ஊழியர் கைது

May 14, 2026

காணி ஒன்றின் மதிப்பீட்டு அறிக்கையை குறைந்த பெறுமதியில் தயாரித்துக் கொடுப்பதற்காக 35,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலன்னறுவை மாகாண வருமான

Raj

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் அம்பமாகும் ராஜபக்சர்களின் ஊழல் விவகாரங்கள்…

May 14, 2026

தமிழர்கள் மீதான இனவழிப்பு நடைபெற்று 17 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று இலஞ்சம் ஒழிப்பு

Shani

குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் ஷாணி அபேசேகரவுக்கு பதவி உயர்வு

May 14, 2026

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி அபேசேகரவை, பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தரம்

Omalbe

பௌத்த பிக்கு ஒருவருக்கு மனித உரிமைகள் என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை – ஓமல்பே சோபித தேரர்

May 14, 2026

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு பிக்குவுக்கும் தனது துறவற ஆடையைக் களைந்துச் செல்லும் உரிமை உண்டு. அதற்கு எவராலும் தடைகளை விதிக்க

IJPMI3VQG5GVPFMLGZGLSHBJXA

ரெட் டீர் பகுதியில் 14 வயது சிறுமி மீது கொடூரத் தாக்குதல்: இருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது

May 14, 2026

கனடாவின் ரெட் டீர் (Red Deer) பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரை மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தொடர்பாக

weather

காற்றழுத்த தாழ்வு நிலை: இன்று முதல் படிப்படியாக குறையும்

May 14, 2026

மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்கு திசையில் காணப்படும் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு

QGKL6DBIBZEHBI2AL2ENAGP3SI

அல்பர்ட்டா பிரிவினை மனுவை இரத்து செய்த நீதிமன்றம்: முதற் தேச மக்களின் (First Nations) வெற்றி

May 14, 2026

அல்பர்ட்டா மாகாணத்தைப் பிரிப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய மனுவை (Separatist petition) செல்லாது என அறிவித்து நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. முதற்

mark

கனடாவின் புதிய தேசிய மின்சார மூலோபாயம்: பிரதமர் மார்க் கார்னி இன்று அறிவிக்கவுள்ளார்

May 14, 2026

கனடிய அரசாங்கத்தின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுத்தமான மின்சார மூலோபாயத்தை (Clean electricity strategy) பிரதமர் மார்க் கார்னி இன்று (வியாழக்கிழமை)

6ORIASPXUVDQTPFKTFQZZ5VA7U

ஸ்கார்பரோவில் சோகம்: இரண்டு வயதுக் குழந்தையைக் கொன்றதாகத் தாய் மீது கொலைக் குற்றம்

May 14, 2026

னடாவின் ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில், தனது இரண்டு வயது பூர்த்தியாவதற்கு இன்னும் ஒரு மாதமே இருந்த நிலையில், ஒரு பெண்

65ZVLLNBG5GHNHIV3BZUWPIZBM

கனடாவின் வான் (Vaughan) பகுதியில் துப்பாக்கிச் சூடு: இருவர் உயிரிழப்பு

May 14, 2026

கனடாவின் வான் (Vaughan) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் (York Regional

Mythri

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மீதும் நிதி மோசடி வழக்கு; அபராதம் தொடர்பில் அறிக்கை கோரல்

May 14, 2026

கந்தளாய் சீனி கைத்தொழிற்சாலை நிதி மோசடி வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிக்குழாம் பிரதானியாகப் பணியாற்றிய குசுமதாச மஹாநாமவுக்கு

canada courts

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களைப் பகிர்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை

May 14, 2026

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை (Child sexual abuse and exploitation material) கைவசம் வைத்திருந்தமை மற்றும் அவற்றைப் பரிமாற்றம்