கிருஷ்ணகிரி:
ஓசூர் அருகே விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய முதியவரின் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை நேர்மையுடன் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் மத்திகிரி பகுதியைச் சேர்ந்த ராஜா (53), ராயக்கோட்டை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானார். இதில் தலையில் பலத்த காயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை, ராயக்கோட்டை அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நந்தினி (மருத்துவ உதவியாளர்) மற்றும் சிவராஜ் (ஓட்டுநர்) ஆகியோர் விரைந்து வந்து மீட்டனர்.
சிகிச்சைக்காக அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, ராஜா வைத்திருந்த பையில் ₹1,30,000 ரொக்கப்பணம் இருப்பதை ஊழியர்கள் கவனித்தனர். அந்தப் பணத்தைப் பத்திரமாகப் பாதுகாத்த ஊழியர்கள், மருத்துவமனைக்குச் சென்றடைந்ததும் ராஜாவின் மகனை வரவழைத்து அனைவர் முன்னிலையிலும் அப்பணத்தை அவரிடம் ஒப்படைத்தனர். விபத்தில் சிக்கியவர்களின் உடைமைகள் மற்றும் பணத்தைத் திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், உயிரைக் காப்பதோடு மனிதாபிமானத்தையும் காத்த இந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்குப் பொதுமக்களும் சமூக வலைதளவாசிகளும் தங்களது பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.
#Honesty #108Ambulance #HosurNews #Krishnagiri #Humanity #Inspiration #GoodSamaritans #AccidentRescue #TamilNaduGovernment #MedicalHeroes #BreakingNews #May2 #TamilNaduNews #SocialService #LifeSavers #Integrity #PublicPraise #ViralNews #SafetyFirst_