ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கையின் நிலைமையைச் சமநிலையுடனும், புறவயத் தன்மையுடனும் கணிப்பிட வேண்டும்: இலங்கை கோரிக்கை

நீதியான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான தனது நடப்பு முயற்சிகளுக்கு சர்வதேச ஆதரவைக் கோரியுள்ள இலங்கை, நாட்டின் மனித உரிமைச் சூழலைச் சமநிலையான, புறவயமான (Objective) மற்றும் ஆக்கபூர்வமான முறையில் மதிப்பீடு செய்யுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையைக் கேட்டுக்கொண்டுள்ளது.

ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது அமர்வில் உரையாற்றிய ஜெனிவாவிற்கான ஐ.நா அலுவலகத்தின் தூதுவரும் நிரந்தரப் பிரதிநிதியுமான சுமித் தசநாயக்க, ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அண்மைய எழுத்துப்பூர்வ அறிக்கை தொடர்பில் இலங்கை கவனத்திற் கொண்டுள்ளதாகத் தெரிவித்ததுடன், பேரவையுடனான அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

“பேரவையை நிர்வகிக்கும் கோட்பாடுகளுக்கு அமைவாக, இலங்கையின் நிலைமை சமநிலையான, புறவயமான மற்றும் ஆக்கபூர்வமான முறையில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும், நீதியான சமூகத்தை உருவாக்குவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் பேரவையை மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.

வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியிலும், நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதையும் நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதையும் நோக்கமாகக் கொண்ட நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் அதே வேளையில், நியாயமான மற்றும் நீதியான ஒரு நாட்டை உருவாக்க புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தூதுவர் தெரிவித்தார்.

வெளிப்புறச் சான்றுகளைச் சேகரிக்கும் பொறிமுறையின் (External evidence mechanism) அதிகார ஆணை நீடிப்பு உட்பட, தீர்மானம் 6/1 ஐ இலங்கை ஆதரிக்கவில்லை என்று அவர் கூறினார். தசநாயக்கவின் கூற்றுப்படி, இத்தகைய பொறிமுறையானது இலங்கையில் உள்ள சமூகங்களுக்கு இடையே பிளவுகளை உருவாக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளதுடன், நாட்டிற்குள் முன்னெடுக்கப்படும் உண்மையான நல்லிணக்கச் செயல்பாட்டையும் சீர்குலைக்கக்கூடும்.

தனது நல்லிணக்க முயற்சிகளின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டில் அரசாங்கம் ஐ.நா முகவர் நிறுவனங்களுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாக புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கான திட்டங்கள் உட்பட அரசாங்கத்தால் எடுக்கப்பட்டு வரும் பல நடவடிக்கைகளையும் தசநாயக்க சுட்டிக்காட்டினார். இணையவழி பாதுகாப்புச் சட்டத்தில் (Online Safety Act) முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகக் காணாமற்போன ஆள்கள் பற்றிய அலுவலகம் (OMP) மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் (OR) ஆகியவற்றின் ஊடாக மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுபவர்களின் தகுதி அல்லது பதவி நிலையைக் பொருட்படுத்தாமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாகத் தூதுவர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அளித்த வாக்குறுதிகளுக்கு அமைவாக, நாட்டில் தீவிரவாதம் அல்லது இனப் பிளவுகள் மீண்டும் தலைதூக்குவதற்கு இடம் அளிக்கக்கூடாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

வழக்குகளை விரைவுபடுத்தவும், சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைக்கவும் நீதித்துறை சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இலங்கை தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்த தசநாயக்க, நல்லிணக்கம், நீதி மற்றும் கட்டமைப்புச் சீர்திருத்தங்களை நோக்கிய நாட்டின் முயற்சிகளைச் சீர்குலைக்காமல் ஆதரவளிக்கும் வகையில் பேரவை இலங்கையுடன் இணைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது அமர்வின் தொடக்கத்தில், இலங்கையின் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான பதிவுகள் மீண்டும் சர்வதேச கவனத்தைப் பெற்று வரும் நிலையில், இலங்கை குறித்த OHCHR இன் எழுத்துப்பூர்வ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

WhatsApp Image 2026-09-14 at 07.00.38

தடைகளை நீக்கியருளும் விநாயகர் சதுர்த்தி விரதம் இன்று !

September 14, 2026

பிள்ளையார் பூஜை என்பது ஒருநாள் கொண்டாடும் விழாவாக மட்டுமின்றி, வாழ்க்கை முழுவதும் நமக்கு வளமும் வளமையும் தரும் ஆன்மீக பாதையை

MediaFile_20260913_220352_145

அராலியில் இளைஞர் மீது வாள்வெட்டு – நால்வர் கைது

September 14, 2026

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச் சந்தியில் வைத்து வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்

cas

மீண்டும் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை

September 14, 2026

உலக சந்தையில் மீண்டும் இன்றைய தினம் (14) இரண்டு சதவீதத்திற்கும் அதிகமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. சவூதி அரேபியாவின்

ac

விபத்தில் 4 பிள்ளைகளின் தந்தை பலி!

September 14, 2026

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில், பாலமுனைப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே

ar 2

“தமிழ் ஈழம் வேண்டும்” என்று கேட்க மாட்டேன்; எனக்கு சிங்கள மக்கள் தான் வேண்டும்! – பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்

September 14, 2026

– அனுராதபுரத்தில் நடைபெற்ற ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்.

arr

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது

September 14, 2026

சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நால்வரை மூன்று டிங்கி படகுகளுடன் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம்

u

இரு குழந்தைகளின் உயிரைப் பறித்த கைக்குண்டுத் தாக்குதல் – ஐ.நா கவலை

September 14, 2026

தெஹிவளை பகுதியில் கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது. ஐக்கிய

Gnansa

ஞானசார தேரரைக் கைது செய்ய சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை

September 14, 2026

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலேகொடஅத்தே ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது

aaa

மாணவர்களின் புத்தகப்பை எடை குறைக்கப்படும்

September 13, 2026

பாடசாலை மாணவர்கள் சுமக்கும் புத்தகப்பை எடையை கணிசமாகக் குறைக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு

wat

வறட்சியான வானிலை – 43,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகம்!

September 13, 2026

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட 43,221 குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

photo-collage.png

தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் பேரணி!

September 13, 2026

தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

image-483-edited (1)

“தனித்துப் போட்டியிட்டாலும் தவெக அரசுக்கான ஆதரவு தொடரும்; ஆட்சிக்கு பாதிப்பில்லை!” – பெ. சண்முகம் விளக்கம்

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் இடதுசாரி கட்சிகள் தனித்துக் களமிறங்கினாலும், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து