எதிர்வரும் 3 ஆம் திகதி ஜனாதிபதியை சந்திக்கும் தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் – தமிழ்பேசும் மக்களின் நலன் சார்ந்த விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்படும்

இம்மாதத் தொடக்கத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த 6 தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் வேண்டுகோளுக்கு அமைவாக, அக்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 3 ஆம் திகதி (திங்கட்கிழமை) கொழும்பில் நடைபெறவுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய 6 தமிழ் பேசும் அரசியல் கட்சிகளும் தமது சுயாதீனத்துவத்தையும் கொள்கைகளையும் அரசியல் நிலைப்பாடுகளையும் பேணிக்கொண்டு, பொது இணக்கப்பாடு எட்டப்படும் விடயங்களில் தமிழ்பேசும் மக்களின் நலனை முன்னிறுத்தி ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்படுவதற்கு உடன்பட்டிருந்தன.

அதன் நீட்சியாக, தமிழ்பேசும் மக்களைப் பாதிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியை சந்திப்பதற்கு நேரமொன்றை வழங்குமாறு அக்கட்சிகளின் பிரதிநிதிகள் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி மேற்படி 6 தமிழ் பேசும் அரசியல் கட்சிகளினதும் பிரதிநிதிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்திப்பதற்கு நேரம் வழங்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின்போது அரசியல் கைதிகளை விடுவித்தல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவித்தல், மலையக தமிழ் மக்களுக்கான வீடமைப்பு மற்றும் வாழ்வாதாரத் தேவைகளை நிறைவேற்றல், நீண்டகாலமாக நடாத்தப்படாமல் நிலுவையில் உள்ள மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குதல், அரசியலமைப்பின் உறுப்புரை 16(ஏ) மற்றும் அரசகரும மொழிகள் கொள்கையுடன் தொடர்புடைய சகல அரசியலமைப்பு விதிகளையும் நடைமுறைப்படுத்தல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கலை முடிவுக்குக்கொண்டுவரல், வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் என்பன உள்ளடங்கலாக தமிழ் பேசும் மக்கள் எதிர்கொண்டுவரும் முக்கியமான பிரச்சினைகள் மற்றும் அவர்களது அக்கறைக்குரிய விடயங்கள் என்பன தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, சர்க்கரை பாக்கெட்டில் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு!

July 29, 2026

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள நியாயவிலைக் கடைகளில் (ரேஷன் கடைகள்) குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும் துவரம் பருப்பு மற்றும் சர்க்கரை ஆகிய அத்தியாவசியப்

fue

எரிபொருள் விலை அதிகரிக்கலாம்?

July 29, 2026

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலக

THAI

தையிட்டி காணிகளை மீளக் கையளியுங்கள்!

July 29, 2026

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த விகாரை

3

யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம் – ஆளுநருக்கு தவெக கடும் கண்டனம்!

July 29, 2026

சென்னை: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மூன்றாமிடத்திற்குத் தள்ளப்பட்டதற்கு ஆளும் தவெக

dead'

போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் உயிரிழப்பு: யாழில் சம்பவம்

July 29, 2026

யாழில் போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது நேற்றையதினம்(28) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – சிராம்பியடியை சேர்ந்த 26 வயதுடைய

Arrest

இலங்கைக் குற்றவாளிகள் மூவர் மலேசியாவில் கைது

July 29, 2026

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் நபரான “ரத்மலானை சைமா” உட்பட மூவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர் திட்டமிட்ட குற்றச்

759849590_1568950914630156_596272536240665203_n

யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

July 29, 2026

யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து உப ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான

2

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை: 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் அதிரடி!

July 29, 2026

கரூர்: திமுக முன்னாள் அமைச்சரும், முக்கிய அரசியல் பிரமுகருமான செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் இன்று

1

தமிழ்த்தாய் வாழ்த்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலேயே 3-ம் இடத்திற்குத் தள்ளுவதா? – சீமான் கண்டனம்!

July 29, 2026

சென்னை: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மூன்றாமிடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதற்கு, நாம் தமிழர் கட்சியின்

758037446_1045398538354019_6141625928540443025_n

தமிழக இழுவைப் படகுகளின் அத்துமீறலுக்கு எதிராகக் கடலில் பிரமாண்ட படகுப் பேரணி

July 29, 2026

இலங்கை கடல் எல்லைக்குள் புகுந்து வடபகுதி மீனவர்களின் வலைகளையும் வாழ்வாதாரத்தையும் நாசம் செய்யும் தமிழக இழுவைப் படகுகளின் சட்டவிரோத நடவடிக்கைகளைக்

anura may 26

எதிர்வரும் 3 ஆம் திகதி ஜனாதிபதியை சந்திக்கும் தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் – தமிழ்பேசும் மக்களின் நலன் சார்ந்த விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்படும்

July 29, 2026

இம்மாதத் தொடக்கத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த 6 தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் வேண்டுகோளுக்கு அமைவாக, அக்கட்சிகளின்

759390981_1072436365239046_9209066260461902919_n

பருத்தித்துறை நகரசபை, இலங்கை இராணுவ முகாம்களை அகற்றக் கோரி மீண்டும் போராட்டத்தை நடத்தவுள்ளது.

July 29, 2026

ஓராண்டுக்கு முன்பு இதேபோன்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்ட போதிலும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டி, சபையின் நிர்வாக எல்லைக்குள்