உணவு பாதுகாப்பு மற்றும் முதலீடுகள் குறித்து விசேட கலந்துரையாடல்

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

வர்த்தக அமைச்சில் நேற்று (27) நடைபெற்ற இச்சந்திப்பில், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அபிவிருத்தி ஒத்துழைப்பு ஆலோசகர் மைத்ரேய் குல்கர்னி உள்ளிட்ட குழுவினரும், வர்த்தக அமைச்சின் சார்பில் அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திரராஜா, கலாநிதி சாந்த ஜயரத்ன மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனைப் பொதுச்சபையின் (CWE) தலைவர் கோசல வில்பாவ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகப் பரிமாற்றங்களை மேலும் விரிவுபடுத்துதல், முதலீட்டுத் தொடர்புகளை மேம்படுத்துதல், புதிய முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிந்து ஊக்குவித்தல், இரு நாடுகளினதும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒத்துழைப்புடன் செயற்படுதல் மற்றும் கூட்டுறவுத் துறையின் வளர்ச்சிக்காகப் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

இலங்கை உற்பத்திகளை இந்தியச் சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்காகக் கண்காட்சிகள் மற்றும் சந்தை வாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்ப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்தார். குறிப்பாக தேயிலை மற்றும் ஆடைத் தொழில்துறை குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் என்றும், இலங்கையின் உயர்தர ஆடைகளுக்கு இந்தியாவில் பெரும் தேவை நிலவுவதால் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள ஏற்றுமதியாளர்களுக்கு வழிகாட்டுவதே தனது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது, இலங்கையின் கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம் மற்றும் இந்தியாவின் NCL நிறுவனம் ஆகியவற்றிற்கு இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டது. இது ஒரு நேரடி விநியோகப் பிணைப்பை விடவும் விரிவான ஒத்துழைப்பாக அமையும் என இந்தியப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

இலங்கையின் அரிசிச் சந்தை நிலவரம் மற்றும் விலைக் கட்டுப்பாடு குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. அரிசி விலை கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், சம்பா போன்ற விசேட அரிசி வகைகளுக்குச் சந்தையில் தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இலங்கை அரசாங்கத்தினால் சுமார் 300,000 மெட்ரிக் தொன் அரிசியை முகாமைத்துவம் செய்ய முடிந்தால், நிச்சயமாக விலையைக் கட்டுப்படுத்த முடியும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

இந்திய விவசாயிகளின் வருமானத்தைப் பாதுகாப்பதற்காக இந்திய அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச உறுதிமொழி விலையின் கீழ் நெல் கொள்வனவு செய்யப்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சுட்டிக்காட்டினார்.

அத்துடன், அங்கு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் அதிகாரங்களைப் பயன்படுத்தி வரம்பற்ற முறையில் இருப்புக்களைச் சேமிப்பதைத் தடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்தியாவின் ‘இந்திய உணவுக் கழகம்’ வசம் உள்ள பாரிய களஞ்சியத் தொகுதிகள் குறித்தும் உயர்ஸ்தானிகர் இதன்போது அமைச்சர் வசந்த சமரசிங்கவிற்கு விளக்கமளித்தார்.

cacv

கனடாவில் பல பெண்களைத் திருமணம் செய்துகொண்ட நபர் குறித்து பொலிஸார் விசாரணை

April 17, 2026

முன்னாள் அமெரிக்க கடற்படை வீரரும், MMA தற்காப்புக் கலை வீரருமான ஜேசன் வாஷிங்டன் (Jason Washington) என்பவர், தனது முந்தைய

5

இலங்கையின் பொருளாதார மீட்சிக்குத் தொடர்ந்தும் ஆதரவு

April 17, 2026

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையிலான தூதுக்குழுவினர், 2026 வசந்தகாலக் கூட்டத்தின் (Spring Meetings) போது

litr

மே மாதத்திலும் எரிவாயு விநியோகம் தொடரும் – லிட்ரோ

April 17, 2026

இலங்கையில் எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி மே மாதத்திலும் எரிவாயு விநியோகம் தொடரும்

ve

தவிசாளர் வேலு யோகராஜின் பிணை மனு நிராகரிப்பு

April 17, 2026

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜின் பிணை கோரிக்கையை

Gamini

கத்தோலிக்க திருச்சபையினர் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் குறித்து திருப்தி!

April 17, 2026

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்ட வருவதாக கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ

iran

கைதான இந்திய கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்

April 17, 2026

கிளிநொச்சி – இரணைதீவு கடற்பரப்பிற்குள் கடந்த 9ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கைதான

srines

இனப்பிரச்சினைக்கு பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது!

April 17, 2026

பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால் இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்று இவர்கள் நினைக்கின்றார்கள், அப்படியல்ல. நிச்சயமாகப் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்படுமாக இருந்தால்

kap

ஸ்ரீலங்கன் முன்னாள் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரின் பிணை மனு நிராகரிப்பு

April 17, 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்த

i

இலங்கை வருகிறார் இந்தியத் துணை குடியரசுத் தலைவர்

April 17, 2026

இந்தியத் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், 2026 ஏப்ரல் 19 முதல் 20 வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வப் பயணம்

qr

நாளை நள்ளிரவு முதல் மீண்டும் QR முறைமை

April 17, 2026

நாளை (18) நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்காக மீண்டும் QR முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

jail

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகம் செய்த மூவர் கைது

April 17, 2026

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துஸ்பிரயோகத்திற்கு உள்ளன இரு

tv

த.வெ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

April 17, 2026

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யுனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பன