உணவு பாதுகாப்பு மற்றும் முதலீடுகள் குறித்து விசேட கலந்துரையாடல்

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

வர்த்தக அமைச்சில் நேற்று (27) நடைபெற்ற இச்சந்திப்பில், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அபிவிருத்தி ஒத்துழைப்பு ஆலோசகர் மைத்ரேய் குல்கர்னி உள்ளிட்ட குழுவினரும், வர்த்தக அமைச்சின் சார்பில் அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திரராஜா, கலாநிதி சாந்த ஜயரத்ன மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனைப் பொதுச்சபையின் (CWE) தலைவர் கோசல வில்பாவ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகப் பரிமாற்றங்களை மேலும் விரிவுபடுத்துதல், முதலீட்டுத் தொடர்புகளை மேம்படுத்துதல், புதிய முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிந்து ஊக்குவித்தல், இரு நாடுகளினதும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒத்துழைப்புடன் செயற்படுதல் மற்றும் கூட்டுறவுத் துறையின் வளர்ச்சிக்காகப் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

இலங்கை உற்பத்திகளை இந்தியச் சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்காகக் கண்காட்சிகள் மற்றும் சந்தை வாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்ப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்தார். குறிப்பாக தேயிலை மற்றும் ஆடைத் தொழில்துறை குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் என்றும், இலங்கையின் உயர்தர ஆடைகளுக்கு இந்தியாவில் பெரும் தேவை நிலவுவதால் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள ஏற்றுமதியாளர்களுக்கு வழிகாட்டுவதே தனது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது, இலங்கையின் கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம் மற்றும் இந்தியாவின் NCL நிறுவனம் ஆகியவற்றிற்கு இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டது. இது ஒரு நேரடி விநியோகப் பிணைப்பை விடவும் விரிவான ஒத்துழைப்பாக அமையும் என இந்தியப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

இலங்கையின் அரிசிச் சந்தை நிலவரம் மற்றும் விலைக் கட்டுப்பாடு குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. அரிசி விலை கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், சம்பா போன்ற விசேட அரிசி வகைகளுக்குச் சந்தையில் தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இலங்கை அரசாங்கத்தினால் சுமார் 300,000 மெட்ரிக் தொன் அரிசியை முகாமைத்துவம் செய்ய முடிந்தால், நிச்சயமாக விலையைக் கட்டுப்படுத்த முடியும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

இந்திய விவசாயிகளின் வருமானத்தைப் பாதுகாப்பதற்காக இந்திய அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச உறுதிமொழி விலையின் கீழ் நெல் கொள்வனவு செய்யப்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சுட்டிக்காட்டினார்.

அத்துடன், அங்கு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் அதிகாரங்களைப் பயன்படுத்தி வரம்பற்ற முறையில் இருப்புக்களைச் சேமிப்பதைத் தடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்தியாவின் ‘இந்திய உணவுக் கழகம்’ வசம் உள்ள பாரிய களஞ்சியத் தொகுதிகள் குறித்தும் உயர்ஸ்தானிகர் இதன்போது அமைச்சர் வசந்த சமரசிங்கவிற்கு விளக்கமளித்தார்.

photo-collage.png (1)

கனடாவில் ‘புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி 2026’

June 13, 2026

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான நடைப்பயணமொன்றை Behind Me Media, JMFOA Canada மற்றும் Behind Me Foundation ஆகியவை இணைந்து

sr

வடக்கு மாகாண விளையாட்டுத்துறை தேவைகளை விரைவாக முன்வைக்க வேண்டும்!

June 13, 2026

விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு

s

முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு யாழ்.பல்கலைக்கழகத்தில்…

June 13, 2026

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம்(13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இன்றைய

Legents

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 13, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

arrestt

சிறுவர் துஷ்பிரயோகம்-வான்கூவரில் பெண் ஒருவர் போலீஸாரால் கைது!

June 13, 2026

குழந்தை சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் (Child Exploitation Offences) தொடர்பான விரிவான விசாரணைக்குப் பின்னர், பெண் ஒருவரை போலீஸார்

723904451_1420449476781494_4012668450373987547_n

மிசிசாகா பாலியல் வன்கொடுமை: சந்தேக நபரைக் கண்டுபிடிக்க போலீஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

June 13, 2026

மிசிசாகா (Mississauga) பகுதியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் சந்தேக நபரின் புதிய புகைப்படம் ஒன்றை

namal raja

தமிழ் கலைஞர் ‘’ விடுதலை: நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

June 13, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட 24 வயதான தமிழ் ஹிப்ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார்

7HUTJBLLLJCM3JECARQGPUSJAY

வஸாகா பீச் கொடூரத் தாக்குதல்: டொராண்டோ இளைஞருக்கு ஆயுள் தண்டைனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

June 13, 2026

பாரி (ஒன்டாரியோ), ஜூன் 12: கடந்த 2022-ஆம் ஆண்டு வஸாகா பீச் (Wasaga Beach) பகுதியில் நபர் ஒருவரைத் திட்டமிட்டு

fifa

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: ‘மக்களை ஏமாற்ற மோசடி கும்பல் தீவிரம்’ – சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 13: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் (FIFA World Cup 2026) தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைனில்

37KGPQJU55HWFGHEKUHQ7243K4

டொராண்டோவில் 6 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து: 3 பேர் காயம், ஒருவர் கைது!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 14: கனடாவின் டொராண்டோ நகரில் திருடப்பட்ட வாகனம் உட்பட 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட பயங்கர விபத்தில்

8

“மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே வில்லன்; கர்நாடகாவுக்கு மறைமுக ஆதரவு!” – வைகோ அசுர வேக உக்கிரம் நிறைந்த குற்றச்சாட்டு!

June 13, 2026

சென்னை: “மேகதாது அணை விவகாரத்தில் மத்திய பாஜ அரசே ஒட்டுமொத்த வில்லனாகச் செயல்படுகிறது; வெளிப்படையாக அனுமதி வழங்க மாட்டோம் என்று

7

“தவெக அரசு பாஜகவின் ஜெராக்ஸ் காப்பி; அடுத்த முறை எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்றுவது உறுதி!” – முதல்வர் விஜயை அசுர வேகத்தில் கிழித்தெடுத்த மு.க.ஸ்டாலின்!

June 13, 2026

சென்னை: “மாநிலத்தில் தற்பொழுது நடந்து வரும் முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசு என்பது அப்பட்டமாக மத்திய பாஜக அரசின் ஒரு