ழ விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாகத் திகழும் வட்டுவாகல் பாலம் தற்போது இரகசியமாக உருக்குலைக்கப்பட்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
வட்டுவாகல் பாலத்தின் நிலைமைகள் தொடர்பில் நேற்றையதினம் (29.04.2026) பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டதிலே காணப்படும் எமது அடையாளங்கள் இரகசியமாக அழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.
இந்த விடயங்களிலே அக்கறை கொள்வதற்கு கூட எமது கட்சியினர் முன்வருவதில்லை. தமிழரசுக்கட்சி இன்று துரோகக் கூட்டத்தின் கையில் சிக்கி இருக்கின்றது.
வட்டுவாகல் பாலத்தின் நிலைமைகளை ஆராயாத தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் சிறீதரனுக்கு கட்சியை வழிநடத்த என்ன தகுதி இருக்கின்றது.
உடனடியாக அவர்கள் கட்சியில் இருந்து வெளிறேி ஜனநாயக ரீதியில் அதனை இயங்க விட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.