தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நடாத்தப்படும் இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டம் கீழ் நேற்று முன்தினம் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்றில் ஆரம்பமானது
இந் நிகழ்வில் புத்தளம் மாவட்டத்திலிருந்து வருகை தந்த இளைஞர், யுவதிகளை வடமராட்சி கிழக்கு செம்பியன் இளைஞர்கள் கழகத்தினர் மற்றும் வடமராட்சி கிழக்கு இளைஞர்கள் வரவேற்றதை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது
அதன் தொடர்ச்சியாக இன்றய தினம் காலை புத்தளத்தில் இருந்து வருகை தந்த இளைஞர் மற்றும் யுவதிகள் இணைந்து வடமராட்சி கிழக்கின் வரலாறு பின்னணியால் பிறப்பிக்கப்படும் கிராமிய விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்தனர்
தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் புத்தள இளைஞர் யுவதிகளுக்கு சமைத்து கொடுக்க அவர்கள் உண்டு மகிழ்ந்தனர். பின்னர் வடமராட்சி கிழக்கு இளைஞர்கள் மற்றும் புத்தளம் இளைஞர்கள் இணைந்து செம்பியன் பற்று வடக்கு கடற்கரையில் தமது மாலைப்பொழுதினை கழித்தனர்
தொடர்ந்து வடமராட்சி கிழக்கு இளைஞர்கள் சம்மேளனத்திற்கு உட்பட்ட இளைஞர்களால் செம்பியன் பொது நோக்கு மண்டபத்தில் கலை நிகழ்வுகள் மிக சிறப்பாக இடம்பெற்றது