இலங்கை பொலிஸார் 24 மணிநேரமும் சேவையில் ஈடுபட வேண்டும்!

பொதுமக்களின் பணம், தங்கம் மற்றும் ஏனைய பெறுமதிமிக்க சொத்துக்களைக் கொள்ளையிடுவதற்கும், திருடுவதற்கும் அல்லது பலவந்தமாகப் பறிப்பதற்கும் குற்றவாளிகள் கையாளும் உத்திகள் குறித்து தெளிவுபடுத்தவும், அத்தகைய அச்சுறுத்தல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகாட்டல்களை வழங்கவும் இலங்கை பொலிஸ் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.

இலங்கை பொலிஸார் 24 மணிநேரமும் சேவையில் ஈடுபட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாழவும், நம்பிக்கையுடன் எவ்விடத்திற்கும் சுதந்திரமாக நடமாடவும் கூடிய பாதுகாப்பான சூழலைப் பேணுவதற்குப் பாடுபடுகின்றனர். நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, பொதுப் பாதுகாப்பிற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், கவனக்குறைவு அல்லது விழிப்புணர்வு இன்மையால் மக்கள் இன்னமும் பாரிய குற்றங்களுக்குப் பலியாகி வருவதை அண்மைக்காலச் சம்பவங்கள் காட்டுகின்றன.

இதற்கு அண்மைய உதாரணமாக, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற சம்பவத்தைக் குறிப்பிடலாம். அங்கு இரு வேறு சந்தர்ப்பங்களில் இரு பெண்கள் கடத்தப்பட்டு, அவர்களுக்குப் பலவந்தமாக மயக்கமருந்து கலந்த பானம் புகட்டப்பட்டு, அவர்களது தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இதில் ஒரு பெண் கொல்லப்பட்டதுடன், மற்றவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.

இவ்வாறான சம்பவங்களைக் கருத்திற் கொண்டு, பொதுமக்கள் தமது அன்றாட வாழ்வில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் பின்வரும் விடயங்களைக் கடைப்பிடிக்குமாறும் இலங்கை பொலிஸ் கேட்டுக்கொள்கிறது:

கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்

பொது இடங்களிலோ அல்லது பொதுப் போக்குவரத்துகளிலோ உங்களை அணுகி நட்பாகப் பழக முனையும் அறிமுகமில்லாத நபர்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர் போலவோ அல்லது தெரிந்தவர் போலவோ நடிக்க முயற்சிக்கும் நபர்களை நம்புவதைத் தவிர்க்கவும்.
அந்நிய நபர்களால் வழங்கப்படும் டொபி(Toffees), சொக்லேட் (Chocolates), ஏனைய உணவுப் பொருட்கள், பானங்கள் அல்லது குடிநீரை உட்கொள்ள வேண்டாம். இவற்றில் மயக்கமருந்து அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கலக்கப்பட்டிருக்கலாம்.
நபர்களைக் செயலிழக்கச் செய்யவோ அல்லது தீங்கு விளைவிக்கவோ பயன்படுத்தப்படும் நச்சுத் தெளிப்பான்கள் (Poisonous Sprays) அல்லது மிளகாய்த் தூள் போன்ற பொருட்கள் குறித்து விழிப்புடன் இருக்கவும்.

மேலதிக பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்

நெடுஞ்சாலைகளிலோ அல்லது பொது இடங்களிலோ அறிமுகமில்லாத நபர்களிடம் வாகன உதவிகளைப் (Lift) பெறுவதைத் தவிர்க்கவும்.
எந்தச் சூழ்நிலையிலும் அந்நியர்களால் வழங்கப்படும் உணவு அல்லது பானங்களை உட்கொள்ள வேண்டாம்.
தேவையற்ற முறையில் அறிமுகமில்லாத நபர்களையோ அல்லது குழுக்களையோ அணுக வேண்டாம்.
உங்களிடமுள்ள பணம், நகைகள் மற்றும் ஏனைய பெறுமதிமிக்க பொருட்கள் குறித்து விழிப்புடன் இருக்கவும்.
ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நபர், வாகனம் அல்லது குற்றச்செயல் தொடர்பான நடவடிக்கைகளை அவதானித்தால், உடனடியாக 119, 118 ஆகிய இலக்கங்கள் ஊடாக பொலிஸாரைத் தொடர்பு கொள்ளவும் அல்லது அருகிலுள்ள பொலிஸ் உத்தியோகத்தரிடம் முறையிடவும்.
இவ்வழிகாட்டல்களைப் பின்பற்றி புத்திசாலித்தனமாகவும் விழிப்புணர்வுடனும் செயற்படுவது மிகவும் அவசியமென இலங்கை பொலிஸ் வலியுறுத்துகிறது. இத்தகவல்களை உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அயலவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் சமூக விழிப்புணர்வை வலுப்படுத்தி, இவ்வாறான குற்றங்களைத் தடுக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

இந்த அறிவுறுத்தல்களைப் பொதுமக்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு செல்லுமாறு ஊடக நிறுவனங்களிடம் இலங்கை பொலிஸ் கோரிக்கை விடுக்கின்றது.

keerthana-4-2026-05-14-06-26-38

“நானும் ஒரு மாற்றுத்திறனாளியின் மகள்தான்!” – சர்ச்சைப் பேச்சுக்கு தவெக அமைச்சர் கீர்த்தனா உருக்கமான மன்னிப்பு!

May 14, 2026

சென்னை: மாற்றுத்திறனாளிகள் குறித்துத் தான் பேசிய சர்ச்சைக்குரிய கருத்திற்கு, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ்

amulmilkhike-1778683475

அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு! இன்று முதல் புதிய விலை அமல்; பொதுமக்கள் அதிர்ச்சி!

May 14, 2026

சென்னை: நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அமுல் பால் பாக்கெட்டுகளின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி குஜராத் கூட்டுறவு பால்

arrest-1

நீதிமன்ற வளாகப் படுகொலை: ஆயுதங்களை வழங்கிய சந்தேகநபர் கம்பஹாவில் கைது

May 14, 2026

பாதாள உலகக் குழுத் தலைவர் சஞ்சீவ குமார் சமரரத்ன (Ganemulla Sanjeewa) படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குத் தேவையான ஆயுதங்களை வழங்கியதாகக்

hosp

இலங்கை அரச வைத்தியசாலைகளில் இதய அறுவை சிகிச்சைக்காக 10,000 நோயாளிகள் காத்திருப்பு: மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை

May 14, 2026

இலங்கையின் அரச வைத்தியசாலைகளில் இதய அறுவை சிகிச்சைகள் மற்றும் அது தொடர்பான பரிசோதனைகளுக்காக சுமார் 10,000 நோயாளிகள் காத்திருப்புப் பட்டியலில்

rain

இலங்கையில் சீரற்ற காலநிலை: மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என எச்சரிக்கை

May 14, 2026

இலங்கையில் தற்போது நிலவும் மோசமான காலநிலை காரணமாக இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த நிலைமை மேலும் சில நாட்களுக்கு

vikatan_2026-05-08_0dw9lsvc_Untitled-8

அதிமுகவில் அதிரடி நடவடிக்கை! தவெக-வுக்கு ஆதரவளித்த சி.வி.சண்முகம், வேலுமணி உள்ளிட்டோரின் கட்சிப் பதவிகள் பறிப்பு!

May 14, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக முக்கிய நிர்வாகிகளின் கட்சிப் பதவிகளைப்

arrest

இலஞ்சம் பெற்ற வருமான வரி அலுவலக ஊழியர் கைது

May 14, 2026

காணி ஒன்றின் மதிப்பீட்டு அறிக்கையை குறைந்த பெறுமதியில் தயாரித்துக் கொடுப்பதற்காக 35,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலன்னறுவை மாகாண வருமான

Raj

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் அம்பமாகும் ராஜபக்சர்களின் ஊழல் விவகாரங்கள்…

May 14, 2026

தமிழர்கள் மீதான இனவழிப்பு நடைபெற்று 17 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று இலஞ்சம் ஒழிப்பு

Shani

குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் ஷாணி அபேசேகரவுக்கு பதவி உயர்வு

May 14, 2026

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி அபேசேகரவை, பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தரம்

Omalbe

பௌத்த பிக்கு ஒருவருக்கு மனித உரிமைகள் என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை – ஓமல்பே சோபித தேரர்

May 14, 2026

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு பிக்குவுக்கும் தனது துறவற ஆடையைக் களைந்துச் செல்லும் உரிமை உண்டு. அதற்கு எவராலும் தடைகளை விதிக்க

IJPMI3VQG5GVPFMLGZGLSHBJXA

ரெட் டீர் பகுதியில் 14 வயது சிறுமி மீது கொடூரத் தாக்குதல்: இருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது

May 14, 2026

கனடாவின் ரெட் டீர் (Red Deer) பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரை மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தொடர்பாக

weather

காற்றழுத்த தாழ்வு நிலை: இன்று முதல் படிப்படியாக குறையும்

May 14, 2026

மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்கு திசையில் காணப்படும் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு