இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகள் சங்கமான (IORA) தினம் மார்ச் 11 ஆம் தேதி இலங்கையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, கடல் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான IORA சிறப்பு மையத்தின் உத்தியோகபூர்வ தொடக்க நிகழ்வும் நடைபெற்றது.
Ministry of Foreign Affairs Sri Lanka மற்றும் Ocean University of Sri Lanka ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் அருண் யேமச்சந்திர கலந்து கொண்டார்.
2026 ஆம் ஆண்டிற்கான IORA தினத்தின் கருப்பொருளான “IORA வாழ்கைத்தரத்தை உயர்த்துகிறது” என்ற கருத்தை பிரதிபலிக்கும் வகையில், கடல் நிர்வாகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதின் முக்கியத்துவம் இந்நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், IORA பொதுச்செயலாளர் சஞ்சீவ் ரஞ்சனின் செய்தியும் இணையவழி மூலம் வழங்கப்பட்டது. நிகழ்வில் IORA உறுப்பு நாடுகளின் தூதரக பிரதிநிதிகள், உரையாடல் கூட்டாளர்கள் மற்றும் பல்வேறு சர்வதேச பங்குதாரர்களும் நேரிலும் இணைய வழியிலும் கலந்து கொண்டனர்.
அத்துடன், கடல் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அறிவியல் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இணையவழி கருத்தரங்குகளும் தொடங்கப்பட்டன. அதில் University of Western Australia பேராசிரியர் சரிதா பட்டியாரச்சி முக்கிய உரை ஆற்றியதைத் தொடர்ந்து, ஊடாடும் கேள்வி பதில் அமர்வொன்று நடைபெற்றது.