இன்று கூடியது பருத்தித்துறை நகர சபை!

பருத்தித்துறை நகர சபை அமர்வு, தவிசாளர் விந்சென்ட் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் இன்று(30) காலை 9.00 மணியளவில் ஆரம்பமானது.

முதலில் கடந்த கூட்டத்தின் அறிக்கை பரிசீலிக்கப்பட்டு, அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சபைக்கு அறிவிக்கப்பட்டதுடன், அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து சபை உறுப்பினர் சிவலிங்கம் பொன்னம்பலத்தால் முன்வைக்கப்பட்ட பல்வேறு முன்மொழிவுகள் விவாதிக்கப்பட்டன.

நகர சபை எல்லைக்குட்பட்ட கழிவுநீர் வாய்க்கால்களில் கழிவுநீரை மட்டும் அகற்ற வேண்டும் என்றும், பிற கழிவுப்பொருட்களை வெளியேற்றுவோருக்கு தடை விதித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

மேலும் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் ஒதுக்கப்பட்ட விடயங்கள், மரக்கறி சந்தை துவிச்சக்கர வண்டி குத்தகை, நகரில் கேமரா கண்காணிப்பு அமைப்புக்கான கேமரா கொள்வனவு, திண்மக்கழிவகற்றல் சேவைக்கான பருத்தித்துறை பிரதேச சபையுடனான ஒப்பந்த புதுப்பிப்பு உள்ளிட்ட விடயங்களும் பரிசீலிக்கப்பட்டன.

அதேபோல், அவசர பராமரிப்பு பணிகளுக்கான பெறுகை நடைமுறைகளால் ஏற்படும் காலதாமதத்தை குறைக்கும் வகையில், தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களை நாட்கூலி அடிப்படையில் பயன்படுத்துவது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டது.

“பிரஜாசக்தி” திட்டத்தின் கீழ் சமூக அபிவிருத்தி சபையால் முன்னுரிமைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி முன்மொழிவுகள், நகர சபை எல்லைக்குட்பட்ட வீட்டு திட்டங்களுக்கான கட்டிட அனுமதிகள், கோரியடி கடற்கரையில் நடமாடும் கடைகள் அமைப்பது உள்ளிட்ட விடயங்களும் அங்கீகரிக்கப்பட்டன.

மேலும் நவீன சந்தை தொகுதியில் வாடகை ஒப்பந்த பெயர் மாற்றம், பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 160 பயனாளிகளுக்கு இலவச நீர் இணைப்பு வழங்குதல், 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட முத்திரை தீர்வு நிதியில் இருந்து பொருட்கள் கொள்வனவு செய்வதற்கான அனுமதி ஆகியவையும் வழங்கப்பட்டன.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பன்னங்கண்டி வீதி மற்றும் கண்ணை அம்மன் கோவில் வீதி அபிவிருத்தி பணிகளுக்கான ஒதுக்கீடு மற்றும் தழுவல் அனுமதியும் வழங்கப்பட்டது.

இதேவேளை, தேசிய கணக்கு ஆய்வு திணைக்களத்தின் அறிக்கையை தவிசாளர் சபைக்கு வாசித்தார். அதில், நிறுவனத்தில் பல மில்லியன் ரூபாய் அளவிலான நிதி கையாளல் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

21

“வெற்றி பெற்றவுடன் வேறு எங்கும் செல்லாதீர்கள், பனையூர் வந்துவிடுங்கள்” – தவெக வேட்பாளர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு!

April 30, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது

death

வவுனியாவில் கனடா பிரஜை திடீர் மரணம்: பொலிஸார் விசாரணை

April 30, 2026

வவுனியாவிற்கு வருகை தந்து தற்காலிகமாக வசித்து வந்த கனடா நாட்டுப் பிரஜை ஒருவர், சிகிச்சை பலனின்றி தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

rcmp1

கஞ்சா விற்பனை நிலைய சோதனைக்கு எதிர்ப்பு: பொலிஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டமை தொடர்பில் நால்வர் மீது வழக்கு

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 – நோவா ஸ்கோடியாவின் பொட்லோடெக் (Potlotek) பகுதியில் உள்ள முதற்குடி மக்கள் (First Nations) வசிக்கும்

doug-ford-ontario-premiere-february-7-2023

தனியார் விமான கொள்வனவு சர்ச்சை: டக் ஃபோர்டின் செல்வாக்கு சரிவு – லிபரல் கட்சியுடன் கடும் போட்டி

April 30, 2026

28.9 மில்லியன் டொலர் செலவில் தனியார் ஜெட் விமானம் ஒன்றை கொள்வனவு செய்த விவகாரத்தில் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பு மற்றும்

Thish-Web-Thumb-35-1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த புலனாய்வுத் தகவல்கள் முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவுக்குத் தெரிந்திருந்தது: முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் நீதிமன்றில் தெரிவிப்பு

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 – 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதில் கடமை

1291252

“இருநாட்டுத் தமிழ் மீனவர்களும் ஒன்றுபட வேண்டும்” – இலங்கை அரசின் சதியை முறியடிக்க சீமான் அறைகூவல்!

April 30, 2026

சென்னை: நாகை மற்றும் ஈழத்துத் தமிழ் மீனவர்களிடையே அண்மையில் ஏற்பட்ட மோதல் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்

deccanherald_2025-03-12_d00voed2_F8mAdg4WMAA4o57

ஐடி துறையில் ஏஐ (AI) அதிரடி: காக்னிசன்ட் நிறுவனத்தில் 4,000 ஊழியர்கள் பணிநீக்கம் – ‘ப்ராஜெக்ட் லீப்’ திட்டத்தால் அதிர்ச்சி!

April 30, 2026

சென்னை: செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஐடி துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைத் தொடர்ந்து, முன்னணி ஐடி நிறுவனமான

c69c8b147d0d5d078abc023c0ff8632e

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஜாமீனில் வெளிவந்த அஸ்வத்தாமன் வெளிநாடு தப்ப முயன்றபோது பெங்களூரு விமான நிலையத்தில் கைது!

April 30, 2026

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஜாமீனில் வெளியே வந்த முக்கிய குற்றவாளி

3e586c045ab0f90c81787c9b5cee4d6017742641998201179_original

“தமிழகமே உற்றுநோக்கும் வழக்கு” – சாத்தான்குளம் கொலையாளிகளின் தூக்கு தண்டனை மேல்முறையீடு ஜூன் 4 முதல் தினசரி விசாரணை!

April 30, 2026

மதுரை: நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில், 9 போலீசாருக்கு விதிக்கப்பட்ட

(c)PragMatrix

திருப்பத்தூர் தொகுதியில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

April 30, 2026

சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 3 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைச் சென்னை

7

“உழைப்பால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு தரும்” – எடப்பாடி பழனிசாமி மே தின வாழ்த்து!

April 30, 2026

சென்னை: உழைப்பின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றும் மே தினத் திருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி

chemmani

இன்றைய அகழ்வுடன் சேர்த்து மொத்தமாக 241 எலும்புத் தொகுதிகள் செம்மணியில் அடையாளம்…

April 30, 2026

யாழ்ப்பாணம் – சிந்துப்பாத்தி செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் நான்காம் நாள் இன்று (30) யாழ்ப்பாண