இணையத்தள மோசடி ஒழிப்பு நடவடிக்கைகளில் இலங்கையுடன் இணைந்து செயல்பட சீனா தயார்

தொலைத்தொடர்பு மற்றும் இணையத்தள மோசடிகளை ஒழிக்கும் நடவடிக்கைகளில் சீனா உறுதியுடன் செயல்பட்டு வருவதுடன், அதனை கட்டுப்படுத்துவதற்காக இலங்கையுடன் சட்ட அமுலாக்க ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த தயாராக இருப்பதாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் சட்ட அமுலாக்க அமைப்புகள் அண்மையில் இணையவழி மோசடிகளில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டு சந்தேக நபர்களை கைதுசெய்திருந்த அதேவேளை, குறித்த நபர்களில் சீனப் பிரஜைகளும் அடங்குவது குறித்து சீனா கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய குற்றச்செயல்கள் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதுடன், சட்டத்தின் அடிப்படையில் குற்றவாளிகளை கடுமையாக எதிர்கொள்வதற்கான இலங்கை அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இன்றைய உலகில் தொலைத்தொடர்பு மற்றும் இணைய வழி மோசடிகள் வேகமாக வளர்ந்து பல நாடுகளுக்கு பரவி வரும் நிலையில், அது ஒரு உலகளாவிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்தச் சூழலில், சீனா, மியான்மர், கம்போடியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து மோசடிகளை எதிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், பல குற்றக் குழுக்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த நடவடிக்கைகளின் பின்னர் சில குற்றவாளி குழுக்கள் தென்கிழக்காசியாவின் பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் மேம்பட்ட தொலைத்தொடர்பு அமைப்பு, சாதகமான புவியியல் அமைவு, மற்றும் விசா விதிமுறைகளின் தளர்வு போன்ற காரணங்களால் சில மோசடி கும்பல்கள் இலங்கையை தங்களின் செயல்பாட்டு மையமாக பயன்படுத்தி வருவதாக சீனத் தரப்பு தெரிவித்துள்ளது. இதன் விளைவாக சீனப் பிரஜைகளை குறிவைத்து நடத்தப்படும் மோசடிகள் அண்மைக்காலங்களில் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு, சீன அரசு இலங்கை சட்ட அமுலாக்க அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, இணைந்த விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

2024 ஆம் ஆண்டில் மோசடிகளில் ஈடுபட்டிருந்த பல சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டதுடன், 2025 ஆம் ஆண்டில் அவர்களை கட்டம் கட்டமாக சீனா நோக்கி நாடுகடத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஒத்துழைப்புகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சீனா மற்றும் இலங்கை நீண்டகால நட்பு உறவை கொண்ட நாடுகளாக இருப்பதுடன், இரு நாடுகளும் பரஸ்பரம் ஆதரவு வழங்கி வருகின்றன.

எதிர்காலத்திலும் எல்லைத் தாண்டிய குற்றச்செயல்களை, குறிப்பாக தொலைத்தொடர்பு மற்றும் இணையவழி மோசடிகளை எதிர்க்க இணைந்த நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

இந்த ஒத்துழைப்பு முயற்சிகள், இரு நாடுகளின் மக்களின் பாதுகாப்பையும் சொத்துக்களையும் காக்கும் விதமாகவும், இருநாட்டு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் சூழலை உருவாக்கும் வகையிலும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது என சீனத்தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Iran

வளைகுடா நாடுகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் ஈரான் தாக்குதல்!

March 18, 2026

ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை தலைவர் அலி லாரிஜானி மற்றும் பாசிஜ் படைத் தளபதி கோலம்ரேசா சொலைமானி ஆகியோர் இஸ்ரேலியத்

Mars

செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் பிரமிட்டுகள்!

March 18, 2026

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எகிப்திய பிரமிட்டுகளைப் போன்ற ஒரு மர்மமான அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆர்வலர்களிடையே

jr

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். இஸ்ரேல் உளவுப்பிரிவிடம் 10 இலட்சம் டொலர் கோரினாரா?

March 18, 2026

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, 1987ஆம் ஆண்டு தனது தேர்தல் பிரசாரத்திற்காக இஸ்ரேலின் உளவு அமைப்பான ‘மொசாட்’ இடமிருந்து

Sanjeeva ethiri

விசாரணையின் சுயாதீனத்தன்மையை பாதிக்கும் விதத்தில் ஜனாதிபதி நடக்கின்றார்?

March 18, 2026

நிலக்கரி கொள்முதல் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், அதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என ஜனாதிபதி அண்மையில் ஊடகங்கள்

arres

வெள்ளவத்தையில் சட்டத்தரணியொருவரின் ஆவணத்தைப் பயன்படுத்தி பண மோசடி; இருவர் கைது

March 18, 2026

சட்டத்தரணியொருவரின் ஆவணமொன்றை பயன்படுத்தி வங்கி கணக்கொன்றிலிருந்து 48,805,275.00 ரூபாயை மோசடி செய்த சம்பவம் தொடர்பாக இருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால்

namal

மாறிவரும் தற்போதைய சூழலில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியமானது உலக அரசியலின் மையப்புள்ளியாக மாறியுள்ளது

March 18, 2026

உலகளாவிய அதிகாரப் பகிர்வு மற்றும் வர்த்தகப் பாதைகள் மாறிவரும் தற்போதைய சூழலில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியமானது உலக அரசியலின் மையப்புள்ளியாக

kava

மலையக மக்களின் மீள்கட்டமைப்பு: கோரிக்கை ஆவணக் கையொப்பமிடல்!

March 18, 2026

‘டித்வா’ பேரிடரினால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான விசேட ஒன்றுகூடலும், முக்கிய கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தில் கையொப்பமிடும் நிகழ்வும்

vav

நெல் கொள்வனவு தொடர்பில் வவுனியா விவசாயிகள் முறைப்பாடு

March 18, 2026

வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு சொந்தமான களஞ்சியசாலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனம் செய்வதில் பல்வேறான இடர்பாடுகளும்

hurm

மாபெரும் குண்டு வீச்சுக்களால் பதற்றத்தை அதிகரிக்கும் அமெரிக்காவின் நகர்வுகள்

March 18, 2026

ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகில் உள்ள ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதுங்கு குழிகளை ஊடுருவும்

har

நெருக்கடிகளை மறைத்து ஜனாதிபதி கற்பனைக் கதைகளைக் கூறி வருவதால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை – ஹரீன்

March 18, 2026

உண்மையான நெருக்கடிகளை மறைத்து, ஜனாதிபதி அழகிய கற்பனைக் கதைகளைக் கூறி வருவதால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை என ஐக்கிய

pra

பண்டாரவளை வீட்டுத்திட்டப் பகுதிக்கு பிரதி அமைச்சர் பிரதீப் கண்காணிப்பு விஜயம்

March 18, 2026

பண்டாரவளை பூணாகலை கபரகலையில் நிர்மாணிக்கப்படுகின்ற வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர்

rav

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு காணி விடுவிப்பு விவகாரம் : ரவிகரன் ஜனாதிபதிக்கு கடிதம்

March 18, 2026

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை (14) வன்னி