அரசாங்கத்தின் நிலக்கரி ஊழல் காரணமாகவே மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது!

அரசாங்கத்தின் நிலக்கரி ஊழல் காரணமாகவே மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

புதன்கிழமை (01) அன்று கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறியதாவது:

“எதிர்வரும் சித்திரை புத்தாண்டு காலம் பொதுமக்களுக்கு அத்தனை சுபமானதாக அமையப் போவதில்லை. இன்று முதல் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கம் 13.5 சதவீத அதிகரிப்பைக் கோரியிருந்தது.

அதேபோல், இலங்கை மின்சார சபையை உத்தியோகபூர்வமாக கலைப்பதற்கான தலைமைத்துவத்தை ஜனாதிபதி அநுர குமாரவே ஏற்றுக்கொண்டார். அந்த நிறுவனங்களில் இருந்து விலகுவதற்கு சுமார் 2,000 ஊழியர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கான ஓய்வூதியத் திட்ட முன்மொழிவை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கவனத்தில் எடுத்துள்ளது. எனினும், அது இம்முறை மின்சாரக் கட்டண அதிகரிப்புடன் சேர்க்கப்படவில்லை. இதன் காரணமாகவே தற்போதைய அதிகரிப்பு 10.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வீட்டுப் பாவனையாளர்களுக்கான மின்சாரக் கட்டணம் 13.5 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவர். அதேபோன்று, தொழிற்சாலைகளுக்கான மின்சாரக் கட்டணம் 8.7 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்துக் கட்டண அதிகரிப்புகளின் ஊடாக கைத்தொழில் துறையில் பாரிய நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.”

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன, முன்னாள் அமைச்சர் லசந்த அழகியவன்ன உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

குண்டுத் தாக்குதல் சதி தொடர்பாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்திகளை பொலிஸார் மறுப்பு

April 21, 2026

கொழும்பு மற்றும் ஏனைய மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்த நபர் ஒருவர் திட்டமிட்டிருந்ததாக

Screenshot 2026-04-21 143137

சென்னை என்றுமே தி.மு.க.வின் கோட்டை! “தமிழ்நாடு வெல்லும்” – பிரசாரத்தின் இறுதி நாளில் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சிப் பதிவு!

April 21, 2026

சென்னை, தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடையும் நிலையில், திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின்

qr

கியூ.ஆர் குறியீட்டு முறைமை தொடர்பில் புதிய அறிவிப்பு

April 21, 2026

இலங்கையில் தற்போதைய கியூ.ஆர் குறியீடு முறையின் கீழேயே எரிபொருள் விநியோகம் தொடரும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.

east 20261

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள்-ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அந்த நாளின் வலி இன்னும் ஆறவில்லை.-.உண்மை நீதியை நிலைநாட்டவேண்டும் – ஐநாவின் பிரதிநிதி

April 21, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் நடந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அந்த நாளின் வடுவை நாடு இன்னும் சுமந்து

easter

உண்மை கண்டறியப்பட்ட பின்னரே மன்னிப்பு சாத்தியம்: வத்திக்கான் தூதுவர் வலியுறுத்தல்

April 21, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னாலுள்ள உண்மை நிலைநாட்டப்பட்ட பின்னரே, அத்தாக்குதல்களை நடத்தியவர்களை மன்னிப்பது குறித்துச் சிந்திக்க முடியும் என இலங்கைக்கான

675177459_1497864805036429_5112534639948039167_n

“பிரேமலதா நமது கூட்டணிக்குத்தான் வேலை செய்கிறார்!” – எடப்பாடியில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!

April 21, 2026

சேலம், சேலம் மாவட்டம் எடப்பாடியில் 2-வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

fa

நெற்பயிர்ச் செய்கை பாதிப்பு; விவசாயிகளுக்கு 1,200 மில்லியன் ரூபா இழப்பீடு!

April 21, 2026

மாத்தறை மாவட்டத்தில் குடிநீருடன் கடல் நீர் கலப்பதைத் தடுப்பதற்காக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் 2019ஆம் ஆண்டு

japp

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படக்கூடும்?

April 21, 2026

ஜப்பானில் மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுனாமி எச்சரிக்கை மீளப் பெறப்பட்டதைத்

prema

பிரேமலால் ஜயசேகர எம்.பி. கைது

April 21, 2026

‘சொக்கா மல்லி’ என அழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

G_Q4Ze7WQAAHCyq

தீயசக்தி திமுக.. பாசிச பாஜக.. அக்குவேறாக பிரித்து எறிவோம்! “விசில்” சின்னத்திற்கு வாக்களிக்க விஜய் உருக்கமான வேண்டுகோள்!

April 21, 2026

சென்னை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் நெருங்கும் வேளையில் தமிழக மக்களுக்கு மிக முக்கியமான மற்றும் உணர்ச்சிகரமான

Malcolm-Cardinal-Ranjith

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை; முட்டுக்கட்டைகள் குறித்து கர்தினால் ரஞ்சித் எச்சரிக்கை

April 21, 2026

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னேற்றமடைந்து வருவதாக கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால்

Mid photos new.00_01_08_07.Still034_

சரித்திரத்தில் சத்தியம் தோற்றதாக செய்தியில்லை! “மாற்றத்திற்கு ஒரே வழி நாம் தான்” – சீமான் உருக்கம்

April 21, 2026

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் உச்சகட்டப் பரப்பை எட்டியுள்ளது. 234