அமெரிக்கா – ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை திடீர் இரத்து

பிராந்தியத்தில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட ஆரம்பகட்ட உடன்படிக்கையைச் செயல்படுத்துவது தொடர்பாக, சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் ஏரிக்கு அருகிலுள்ள பர்கன்ஸ்டாக் மலை உச்சி ரிசார்ட்டில் இன்று வெள்ளிக்கிழமை இப்பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கான தனது சுவிஸ் பயணத்தை திடீரென இரத்து செய்துள்ளதாக வெள்ளை மாளிகை ஊடகப்பிரிவுமூ நள்ளிரவில் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்றையதினம் திட்டமிடப்பட்டிருந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறாது என்பதை சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சகமும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த 17 ஆம் திகதி பிரான்ஸின் வெர்சாய்ஸ் நகரில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் தரப்புக்கு இடையே போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளுக்கும் இடையே அடுத்தகட்ட இறுதி உடன்பாட்டை எட்ட 60 நாட்கள் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான முதற்கட்ட அமர்வாகவே இந்த பர்கன்ஸ்டாக் சந்திப்பு திட்டமிடப்பட்டிருந்தது.

ஈரானிய துறைமுகங்கள் மீதான கடல்சார் தடைகளை அமெரிக்கா நீக்குவது, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் கப்பல் போக்குவரத்திற்காகத் திறப்பது மற்றும் ஈரானுக்கு பொருளாதார மறுசீரமைப்புத் திட்டங்களை வழங்குவது போன்றவை இந்த 14 அம்ச வரைவு ஒப்பந்தத்தில் அடங்கும்.

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் இப்பேச்சுவார்த்தையை முற்றிலுமாக கைவிடவில்லை எனவும், தற்காலிகமாக மட்டுமே தனது பயணத்தைத் தாமதப்படுத்தியுள்ளார் எனவும் வெள்ளை மாளிகை தரப்பு விளக்கியுள்ளது. “இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தைகளின் தளவாட மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் (Logistics) ஒருபோதும் எளிமையானதாகவோ அல்லது எளிதில் கணிக்கக்கூடியதாகவோ இருப்பதில்லை” என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த உடன்படிக்கை ஏதேனும் ஒரு தரப்பால் மீறப்பட்டால், ஈரானின் பதில் “மிகவும் தீர்க்கமானதாக” இருக்கும் என்று ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாஃப் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இருப்பினும், கத்தார் மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் மத்தியஸ்தத்துடன் சுவிஸ் அரசு ஏற்பாடு செய்துள்ள இந்த அமைதிப் பேச்சுவார்த்தை, அடுத்த சில நாட்களில் மாற்றுத் தேதிகளில் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

726405909_1750482232973646_2220582764764604601_n

நீதி அமைச்சர் வருகை: செம்மணி புதைகுழி முன் “OMP அலுவலகம் வேண்டாம்” என உறவுகள் அதிரடிப் போராட்டம்!

June 19, 2026

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட வருகை தந்த நீதி அமைச்சர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான

726717948_1315682237340097_3613316531790611472_n

செம்மணி ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை

June 19, 2026

செம்மணி ஆர்ப்பாட்டத்திற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் தடை விதித்து கட்டளையிட்டுள்ளது

court-judge-hammer-gavel-696x398

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் கிருஷாந்திக்கு எதிராக பொய்ப் பிரசாரம் செய்த டாக்டர் அர்ச்சுனா! வீடியோக்களை உடனே தூக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

June 19, 2026

ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் பரப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா இராமநாதனுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் இன்று கடுமையான சாட்டையடி

728195759_27644703031792012_903873584557734534_n

நெடுந்தீவில் மக்களின் காணியைக் சிறீலங்கா கடற்படைக்கு வழங்க வேண்டுமென ஒற்றைக் காலில் நிற்கும்அமைச்சர் சந்திரசேகர்

June 19, 2026

நெடுந்தீவில் பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணி கடற்படைக்கு வழங்கப்பட்டமைக்குத் தமிழ்த்தேசியப் பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று

728195759_27644703031792012_903873584557734534_n

நெடுந்தீவில் மக்களின் காணியைக் சிறீலங்கா கடற்படைக்கு வழங்க வேண்டுமென ஒற்றைக் காலில் நிற்கும்அமைச்சர் சந்திரசேகர்

June 19, 2026

நெடுந்தீவில் பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணி கடற்படைக்கு வழங்கப்பட்டமைக்குத் தமிழ்த்தேசியப் பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று

acci main

கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் வீதி விபத்துகளால் 1,297 பேர் பலி

June 19, 2026

2026ஆம் ஆண்டின் கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் மாத்திரம் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் 1,297 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம்

d

36வது தியாகிகள் தின நினைவேந்தல்!

June 19, 2026

ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னனியின் செயலாளர் பத்மநாபா மற்றும் போராளிகளின் 36வது தியாகிகள் தினம் வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை (19) காலை

chemmani

செம்மணி புதைகுழியில் 387 என்புக்கூடுகள் நேற்று வரை அடையாளம்

June 19, 2026

செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்று 18ஆம் திகதி வியாழக்கிழமை ஒரு குழந்தையின் என்புக்கூடு உட்பட 5 என்புக்கூடுகள் அகழ்ந்து

us

அமெரிக்கா – ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை திடீர் இரத்து

June 19, 2026

பிராந்தியத்தில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட ஆரம்பகட்ட உடன்படிக்கையைச் செயல்படுத்துவது தொடர்பாக, சுவிட்சர்லாந்தின்

Cont

புதிய இறக்குமதி ஒழுங்குமுறை – வௌியானது வர்த்தமானி

June 19, 2026

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக் கண்காணிப்பதற்காக, அரசாங்கம் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தி வர்த்தமானி

ca

உலக கிண்ண கால்பந்தாட்டம்; கனடா ஆதிக்கம்

June 19, 2026

உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் ‘பி’ பிரிவு போட்டியில், கட்டார் அணியை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கனடா

727322968_2861356607530672_2715840258650210241_n

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்டேன் (LANTERN – Land and Trust-Building Engagement) செயற்றிட்டம் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் வரப்பிரசாதம்-ஆளுநர் நா.வேதநாயகன்

June 19, 2026

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்டேன் (LANTERN – Land