வெலிக்கடை சிறைச்சாலை பற்றி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை

வெலிக்கடை சிறைச்சாலையைப் பரிசோதிப்பதற்காகச் சென்ற தங்களது அதிகாரிகளை சிறைச்சாலைக்குள் அனுமதிக்காமை குறித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கடுமையான கவலையையும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூலை 7ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று வெலிக்கடை சிறைச்சாலையைப் பரிசோதிப்பதற்காகச் சென்றிருந்த போதிலும், அவர்களுக்கு சிறைச்சாலைக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை.

முன்அறிவித்தல் இன்றி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தடுப்புக் காவலில் உள்ள இடங்களுக்குள் நுழைவதற்கு ஆணைக்குழுவிற்கு அதிகாரம் அளிக்கும் 1996ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தை, சிறைச்சாலை அதிகாரிகள் இதன் மூலம் மீறியுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் எல்.டி.பி. தெஹிதெனியவின் தலைமையில் கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலின் போது, அந்தச் சந்தர்ப்பத்தில் சிறைச்சாலைக்குள் நிலவிய ஸ்திரமற்ற பாதுகாப்புச் சூழ்நிலை காரணமாகவே ஆணைக்குழுவின் அதிகாரிகளை உள்ளே அனுமதிக்கவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அச்சந்தர்ப்பத்தில் நிலவிய உண்மையான சூழ்நிலையை ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்குச் சரியாகத் தெரிவிக்கத் தவறியமை குறித்து சிறைச்சாலை அதிகாரிகள் அங்கு வருத்தம் தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடக்காது எனவும் உறுதியளித்துள்ளனர்.

இருப்பினும், சிறைச்சாலை அதிகாரிகள் வழங்கிய இந்த விளக்கத்தில் தமக்குத் திருப்தி இல்லை என மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இதைத் தவிர, நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின் பின்னர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிகள் மீது பழிவாங்கும் நோக்கில் சித்திரவதைகளை மேற்கொள்ளல், மருத்துவ சிகிச்சைகளை மறுத்தல், கைதிகள் இருக்கும் இடங்களை அவர்களது குடும்பத்தினருக்கு அறிவிக்கத் தாமதித்தல் மற்றும் தண்டனைக் காலம் முடிந்த கைதிகளையும் தொடர்ந்தும் தடுத்து வைத்திருத்தல் போன்ற பல கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்தும் ஆணைக்குழு இதன்போது கேள்வி எழுப்பியுள்ளது.

சிறைச்சாலைக் காவலில் உள்ளவர்களுக்கு இடம்பெற்ற சித்திரவதைகள், மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டமை மற்றும் மரணங்கள் குறித்து தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு, வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவத்தைக் கருத்திற்கொண்டு, மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சிறைச்சாலை அதிகாரிகளுக்குப் பின்வரும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தடுப்புக் காவலிலுள்ள இடங்களைப் பரிசோதிப்பதற்கு ஆணைக்குழுவிற்கு சட்டப்பூர்வமாக உள்ள உரிமையை உடனடியாக வழங்குதல்.

இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பழிவாங்கல்களை உடனடியாக நிறுத்துதல்.

கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்து அவர்களது குடும்பத்தினருக்கு உடனடியாக அறிவித்தல்.

விதிக்கப்பட்ட தண்டனைக் காலத்தை நிறைவு செய்துள்ள கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தல்.

Untitled-5

தொடர் விடுமுறை: 2,354 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் – விதிகளை மீறிய 400 ஆம்னி பேருந்துகள் மீது அதிரடி நடவடிக்கை!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையையொட்டிப் பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காகக் கிளாம்பாக்கத்திலிருந்து 2,354 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில்,

2

பரந்தூரைப் போல பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக விவகாரத்திலும் முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார்: எம்.பி. துரை வைகோ நம்பிக்கை!

September 13, 2026

திருச்சி: திருச்சி மாவட்டம் கே.கள்ளிக்குடி ஊராட்சியில், தனது தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ. 17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய

725c2e6d9fca0dc4aada0ee563cfb1b495b36e3eddff80882083ace68426ca4f

மலேசியப் பிரதமரைச் சந்திக்க முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தைத் தள்ளிவைக்க ஆளுநர் மாளிகை கோரிக்கை: பரபரப்புத் தகவல்!

September 13, 2026

சென்னை: புதுடெல்லிக்கு வருகை தந்துள்ள மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமைச் சந்திப்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தைத் தள்ளிவைக்குமாறு

1200-675-26766517-thumbnail-16x9-trichy2-aspera

“ஆபாசமாகப் பேசுவதுதான் திமுகவின் அரசியல்!” – சேகர்பாவுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!

September 13, 2026

சென்னை: அரசியல் என்ற பெயரில் ஆபாசத்தையும், அவதூறையும் பேசுவதையே திமுகவினர் வாடிக்கையாக வைத்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்

1200-675-27622338-thumbnail-16x9-ministersrinath

தூத்துக்குடி கப்பல் கட்டும் தள எதிர்ப்பு: செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளிக்காமல் நழுவிய அமைச்சர் ஸ்ரீநாத்!

September 13, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடியில் அமையவுள்ள புதிய கப்பல் கட்டும் தளத் திட்டத்திற்கு உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து

HSBts-6bwAAGySO

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற சர்வதேசக் கார் பந்தயம்: இங்கிலாந்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

September 13, 2026

லண்டன் / சென்னை: தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த “மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்” அமைப்பதற்கான முன்னோட்டமாக, இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

b

குற்றக் கும்பல்களுக்குக் கைக்குண்டு கிடைத்தது எப்படி?

September 13, 2026

தெஹிவளை வீடொன்று மீது அண்மையில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பல முக்கியமான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

bom

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6 குண்டுத் தாக்குதல்கள்

September 13, 2026

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களினால் 6 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று தாக்குதல்கள் கல்கிஸ்ஸை பொலிஸ்

pa

காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை

September 13, 2026

இலங்கைச் சுங்கத் திணைக்களத்தினால் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை” குறித்து

thal

தலைமன்னார் கடலில் மணல்மேட்டில் வழிதவறியவரை மீட்ட கடற்படையினர்

September 13, 2026

இலங்கை கடற்படையினர் தலைமன்னாருக்கு அப்பால் உள்ள கடலில் மணல்மேட்டில் வழிதவறிய நபர் ஒருவரை மீட்டதுடன், அந்த நபருக்கு தேவையான மனிதநேய

dailythanthi_2026-09-12_o3yec9f7_Chennai-mayor

“என் தலைவரைச் சீண்டினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” – முதலமைச்சர் விஜய்க்கு மேயர் பிரியா ஆவேச எச்சரிக்கை

September 12, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மிசா சட்டம் மற்றும் மு.க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற திமுக

1693_12_3_2021_19_53_17_1_MALLAI_SATHYA_MDMK_MADURANTAGAM

இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா அறிவிப்பு!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகத் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா