வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் முதலிடம்

ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் வீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் முதலிடம் பிடித்துள்ளது.

இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில்:- “வடக்கு மாகாணத்தின் கல்விச் சாதனைகள் கடந்த ஆண்டுகளை விட இம்முறை மிகச்சிறந்த நிலையை எட்டியுள்ளன.

இம்முறை ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்கு வடக்கு மாகாணத்திலிருந்து தோற்றிய மொத்தப் பரீட்சார்த்திகளில் (பாடசாலை மாணவர்கள் மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள்) 9 ஆயிரத்து 191 மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்துக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இது பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 65.19 சதவீதமாகும். இதன்மூலம் மாகாணங்களுக்கு இடையிலான தரவரிசையில் வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

மேலும், உயிரியல் பிரிவு மற்றும் கலைப் பிரிவுகளிலிருந்து பல்கலைக்கழகப் பிரவேசத்துக்குத் தகுதி பெற்ற மாணவர்களின் சதவீதத்தில் தேசிய ரீதியில் முதலிடத்தையும், பௌதீக விஞ்ஞானம் மற்றும் வர்த்தகப் பிரிவுகளிலிருந்து பல்கலைக்கழகப் பிரவேசத்துக்குத் தகுதிபெற்ற மாணவர்களின் சதவீதத்தில் தேசிய ரீதியில் ஐந்தாம் இடத்தையும் வடக்கு மாகாணம் பெற்றுள்ளது.

2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையில் பல்கலைக்கழகத் தகுதியைப் பெற்றவர்களின் வீதத்தில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்த வடக்கு மாகாணம், இம்முறை தனது அடைவுமட்டத்தை மேலும் உயர்த்தி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

அதேவேளை, பாடசாலைப் பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஒப்பிடுகையில் வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.

இம்முறை வடக்கு மாகாண ரீதியாக 534 மாணவர்கள் சகல பாடங்களிலும் 3 ஏ பெறுபேற்றைப் பெற்றுள்ளனர். இது தோற்றிய மொத்தப் பரீட்சார்த்திகளில் 3.79 சதவீதமாகும்.

3 ஏ சித்திகளைப் பெற்ற மாணவர்களின் வீதத்தின் அடிப்படையிலான தரவரிசையிலும் வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பிடித்து மேலுமொரு சாதனையைத் தனதாக்கியுள்ளது.” – என்றுள்ளது.

mano

வட-கிழக்கு தமிழர்களை அவமதிக்கும் விதத்தில் டில்வின் சில்வாவின் கருத்து உள்ளது – மனோ கணேசன்

May 31, 2026

மாகாண சபை தேர்தல் குறித்து டில்வின் சில்வா வெளியிட்டுள்ள கருத்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களை அவர்

cs

சிரியாவில் இருந்து திரும்பிய ISIS தொடர்புடைய பெண்ணுக்கு எதிராக அவுஸ்திரேலியா தீவிர விசாரணை

May 31, 2026

சிரியாவில் உள்ள முகாம்களில் பல ஆண்டுகளாக எவ்வித விசாரணையும் இன்றி அடைக்கப்பட்டிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை அவுஸ்திரேலிய அரசு சமீபத்தில்

Judment

தையிட்டி விகாரைக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இளைஞர்களுக்கு அபராதம்

May 31, 2026

தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களையும்

kana

காணாமல் போன நான்கு கடற்றொழிலாளர்களை தேடும் பணி தீவிரம்

May 31, 2026

வடமராட்சி கடலிலிருந்து கடந்த 27 ஆம் திகதி கடலுக்குச் சென்று காணாமல் போன கடற்றொழிலாளர்கள் நால்வர் தொடர்பில் விசேட அனுமதியுடன்

sl

இலங்கைத் தமிழ் பெண் சென்னையில் கொலை

May 31, 2026

சென்னையில் இடம்பெற்ற மோதலில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேட்டில் நேற்றிரவு (30)

lav

லாவோஸில் 1000 அடி ஆழமான குகைக்குள் சிக்கியவர்களில் நால்வர் மீட்பு

May 31, 2026

லாவோஸின் மத்திய ஷைசோம்போன் மாகாணத்தில் உள்ள நிலத்தடி குகையொன்றில் சுமார் 10 நாட்களாகச் சிக்கியிருந்தவர்களில் நால்வரை மீட்பதற்கு லாவோஸ் மற்றும்

dailythanthi_2026-05-31_rsoq9wd2_rupees

“காகித நோட்டுகளுக்குப் பாய்ந்தது குட்பை!” – கிழிவதைத் தடுக்க பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி அசுர வேகத் தீவிர ஆலோசனை!

May 31, 2026

சென்னை: “இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, நீண்ட ஆயுள் கொண்ட அதிநவீன பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது

262-2026-05-30-17-14-21

“திமுக கூட்டணியில் தொடரலாமா? வேண்டாமா?” – எடப்பாடியை முதலமைச்சராக்க திமுக முயன்றதாகக் கூறி காதர் மொய்தீன் அசுர வேகப் பரபரப்புப் பேட்டி!

May 31, 2026

கடலூர்: “தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு ஏற்பட்டுள்ள அசாதாரண அரசியல் சூழலில், திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது வேண்டாமா

minister-maria-wilson

“மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்!” – வேளாங்கண்ணியில் நிதி அமைச்சர் மரிய வில்சன் அசுர வேக அதிரடி அறிவிப்பு!

May 31, 2026

நாகப்பட்டினம்: “தமிழகப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் உன்னதமான மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 2500 ஆக உயர்த்தி வழங்குவது குறித்த

maalai-malar_2026-05-30_ingb99wd_ramesh

“தவறிழைத்த அர்ச்சகரைத் தண்டித்தால் உங்களுக்கு ஏன் கொந்தளிப்பு?” – திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அசுர வேகப் பதிலடி!

May 31, 2026

தூத்துக்குடி: “ஆன்மீகப் பூமி திருச்செந்தூர் கோயிலில் மாஸ்க் அணிந்து நடத்திய அதிரடி ஆய்வில், பக்தர்களைச் சுரண்டி லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்

leema-rose-martin-interview-admk-split-controversy-sp-velumani-group-coimbatore-2026-05-15-16-50-35

“எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா?” – தன்னை விமர்சித்த வாடகை பேச்சாளர்களை அசுர வேகத்தில் வெளுத்து வாங்கிய லீமா ரோஸ் மார்ட்டின்!

May 31, 2026

சென்னை: “அதிமுக-வுக்குள் நிலவிய உள்கட்சிப் பூசல்கள் அனைத்திற்கும் நான்தான் காரணம் என எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றிச் சொல்லிய கட்டுக்கதைகள்

Inbathurai

“ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்!” – ‘நிழல் முதல்வர்’ என அதிரடியாக கிண்டலடித்த அதிமுக எம்பி இன்பதுரை!

May 31, 2026

சென்னை: “தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அசுர வேகத் தூணாக வலம் வரும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது வாழ்நாளில்