வடக்கு மாகாண பேருந்து சேவை மீதான முறைப்பாடுகள் விரைவில் நிவர்த்திக்கப்படும்

வடக்கு மாகாணத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையினால் (இ.போ.ச.) முன்னெடுக்கப்படும் சில பேருந்து சேவைகளில் நிலவும் சீரின்மை மற்றும் காலதாமதங்கள் குறித்துப் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து, அவற்றை நிவர்த்திப்பதற்கான காத்திரமான நடவடிக்கைகள் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முன்வைக்கப்பட்ட குறைபாடுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு இலங்கை போக்குவரத்துச் சபையின் வடக்கு பிராந்தியப் பொது முகாமையாளருக்கு எழுத்துமூலமான கோரிக்கைகளை அதிகார சபையின் தலைவர் முன்வைத்திருந்தார்.

இதனடிப்படையில், இலங்கை போக்குவரத்துச் சபையால் சம்பந்தப்பட்ட சாலை முகாமையாளர்களுக்குக் கடும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மன்னார் – தோட்டவெளி வழித்தடத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையால் முன்னெடுக்கப்படும் பேருந்து சேவைகள் சீரற்றுக் காணப்படுவதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து, குறித்த சேவையைத் தடையின்றித் தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறு மன்னார் சாலை முகாமையாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை சீராக நடைபெறத் தவறும் பட்சத்தில், மக்களின் போக்குவரத்துத் தேவையைப் பூர்த்தி செய்யத் தனியார் துறையினருக்கு பிரவேசிக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவிலிருந்து ஓமந்தை நோக்கிச் செல்லும் பேருந்துகள் காலதாமதமாகச் செல்வதால், மாணவர்கள் முதலாவது பாடவேளையைத் தவறவிடும் நிலை காணப்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் நலன் கருதி குறித்த பேருந்து காலை 7.25 மணிக்குள் பாடசாலையை வந்தடைவதை உறுதி செய்யுமாறு சாலை முகாமையாளருக்குப் பிராந்திய முகாமையாளரால் அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குப்பிளானிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் பேருந்து சேவைகளில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் ஏழாலை மேற்கு மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சாலை முகாமையாளருக்குப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமக்கான போக்குவரத்துச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை நீக்கி, வினைத்திறனான மற்றும் முறையான போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்துவதில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும்.

எனவே, போக்குவரத்துச் சேவைகள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் ஆலோசனைகளைத் பொதுமக்கள் எமது அதிகார சபையின் கவனத்துக்குக் கொண்டுவர முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

TRUMP OVAL

விட்காஃப் மற்றும் குஷ்னரின் இஸ்லாமாபாத் பயணத்தை ட்ரம்ப் ரத்து செய்தார் –

April 25, 2026

தூதுவர்களான ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) மற்றும் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) இனி பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் செல்லமாட்டார்கள் என்று

thyity

தையிட்டியில்_சட்டவிரோத திஸ்ஸவிகாரைக்காக நில அபகரிப்பு முயற்சி? அரசாங்க அதிபருக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவசர கடிதம்!

April 25, 2026

தையிட்டி பகுதியில் இராணுவத்தினரால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள மக்களின் காணிகளை ‘காணி உரித்து

5K2OIUJ5TZHGBPE23E4PGQTOUI

உலகப் புகைப்படக் கிண்ணத்தில் கனடாவுக்குத் தங்கம்:

April 25, 2026

ஐஸ்லாந்தில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான உலகப் புகைப்படக் கிண்ணப் போட்டியில், வனவிலங்குப் பிரிவில் (Wildlife category) மிச்செல் வால்பெர்க் தங்கப்

2ZECXWEPX5EXFBJ4EFHSLCBJD4

சீக்கிய முதியவர் மீது இனவெறித் தாக்குதல்: வுட்ஸ்டாக் இளைஞர் மீது வழக்குப்பதிவு

April 25, 2026

கனடாவின் ஒண்டாரியோ மாகாணம், வுட்ஸ்டாக் பகுதியில் முதியவர் ஒருவரைத் தள்ளிவிட்டு, இனவெறி கருத்துக்களைக் கூறி மிரட்டிய இளைஞர் ஒருவர் மீது

C2KBHBHB3JFXZPJT3JH462QNDA

பிராம்ப்டன் விபத்து: பாதசாரி ஒருவருக்கு கவலைக்கிடமான காயம்

April 25, 2026

பிராம்ப்டன் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் பாதசாரி ஒருவர் பலத்த காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது

kasy

கஸ்ஸப தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் – சுமந்திரன்

April 25, 2026

யாழ். நாவற்குழி விகாரைக்குக் குடிதண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி மீது துஷ்பிரயோக முயற்சி மேற்கொண்டதாக கூறப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப தேரருக்கு

canada police26

பேருந்து தரிப்பிடத்தில் நின்றிருந்த பாதசாரி மீது மோதிய வாகனம்: பெண் ஒருவர் பலத்த காயம்

April 25, 2026

டொராண்டோவின் எட்டோபிகோக் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை பேருந்து தரிப்பிடம் (Bus Shelter) ஒன்றிற்குள் வாகனம் புகுந்ததில் 53 வயது பெண்

6JMOXKLTHJCKLBVUSEY43I76XE

டொராண்டோ துப்பாக்கிச் சூடு: 30 வயது நபர் பலி; மூன்று சந்தேக நபர்களைத் தேடும் காவல்துறை

April 25, 2026

டொராண்டோவின் மேற்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு அரங்கேறிய துப்பாக்கிச் சூட்டில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது

vima

வடக்கு மாகாண பேருந்து சேவை மீதான முறைப்பாடுகள் விரைவில் நிவர்த்திக்கப்படும்

April 25, 2026

வடக்கு மாகாணத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையினால் (இ.போ.ச.) முன்னெடுக்கப்படும் சில பேருந்து சேவைகளில் நிலவும் சீரின்மை மற்றும் காலதாமதங்கள் குறித்துப்

KJE3Q6LK5UYAXTBIES3VGNIG24

பர்னபி இளைஞன் கொலை வழக்கு: 4 கொள்ளையர்களில் இரண்டாவது நபருக்கு சிறைத்தண்டனை

April 25, 2026

2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவின் பர்னபியில் (Burnaby) வசித்த 19 வயது இளைஞன் ரியான் நாகி

MEQXKJMDPG7FYCUATJCSGZDBQA

இந்தோ-பசிபிக் பாதுகாப்பு: பிலிப்பைன்ஸ் போர் பயிற்சியில் முதன்முறையாக கனடா பங்கேற்பு

April 25, 2026

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தனது ஈடுபாட்டை அதிகரிக்கும் ஒரு “முக்கியமான நடவடிக்கையாக”, பிலிப்பைன்ஸில் நடைபெறும் ‘பாலிகாட்டன்’ (Balikatan) கூட்டுப் போர் பயிற்சியில்

it cyber jobs

திறைசேரி மீதான சைபர் தாக்குதலைத் தடுத்திருக்க முடியும் – நிபுணர் கருத்து

April 25, 2026

அண்மையில் திறைசேரியின் 2.5 மில்லியன் டாலர் நிதி திருடப்பட்ட சம்பவம், ‘பிசினஸ் ஈமெயில் காம்ப்ரமைஸ்’ (Business Email Compromise –