வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் அரச நிலங்களின் மொத்த அளவு மாவட்ட ரீதியாக எவ்வளவு? – சாணக்கியன்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முப்படைகளினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரச நிலங்களின் மொத்த அளவு மாவட்ட ரீதியாக எவ்வளவு? தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலங்களின் அளவு, இடங்கள் மற்றும் திகதிகள் எவை? இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள நிலங்களின் அளவு எவ்வளவு? மற்றும் எஞ்சியுள்ள நிலங்களை விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் காலவகாசம் என்ன என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) நடைபெற்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டில் ஆயுத மோதல் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள பின்னணியிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள கணிசமான அளவிலான பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் நிலங்கள் இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளன. பொதுமக்களின் காணிகள் இன்றளவில் விடுவிக்கப்படவில்லை.

தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் தேர்தல் விஞ்ஞாபனத்தில், இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பதை விரைவுபடுத்துவதாகவும், பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீள்குடியேற்றத்திற்கு வசதி செய்வதாகவும் உறுதியளித்திருந்தது. எமது மக்களும் அந்த வாக்குறுதி மீது நம்பிக்கை கொண்டார்கள்.

பொதுமக்களின் நிலங்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதும், பொதுமக்கள் வாழும் பகுதிகளில் நீண்டகாலமாக இராணுவம் நிலைகொண்டிருப்பதும், சாதாரண சிவில் நிர்வாகத்தைத் தாமதப்படுத்துவதுடன், நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் முயற்சிகளையும் பலவீனப்படுத்துகிறது. உண்மையான தேசிய பாதுகாப்புத் தேவைகள் தவிர, இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு நிகரான அளவிற்கு இராணுவப் பரவலாக்கம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்படுவதும், இராணுவமயமாக்கல் நீக்கப்படுவதும் நல்லிணக்கம், மீள்குடியேற்றம் மற்றும் பொருளாதார மீட்சி ஆகியவற்றிற்கு அவசியமானவையாகும்.

பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற ஆலோசனைக் குழுவில் நான் முன்வைத்த கோரிக்கைகளைத் தொடர்ந்து, மட்டக்களப்பில் இரண்டு இராணுவ முகாம்கள் விடுவிக்கப்பட்டதை நான் வரவேற்கிறேன். ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இருப்பினும் நிலங்கள் விடுவிக்கப்படும் வேகம் மந்தமாக இருப்பதற்கு எதிராகப் பாதிக்கப்பட்ட பல சமூகங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முப்படைகளினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரச நிலங்களின் மொத்த அளவு மாவட்ட ரீதியாக எவ்வளவு? தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலங்களின் அளவு, இடங்கள் மற்றும் தேதிகள் எவை? இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள நிலங்களின் அளவு எவ்வளவு? மற்றும் எஞ்சியுள்ள நிலங்களை விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் காலவகாசம் என்ன?

16 கிராம சேவகர் பிரிவுகள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படாமலும், மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முற்றிலுமாக விடுவிக்கப்படாமலும் உள்ள வலிகாமம் வடக்கில், பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பதை நிறைவு செய்வதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மயிலிட்டி மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் நடைபெறும் போராட்டங்கள் தொடர்பாகவும், மயிலிட்டி கணிக்கமாதா கோவில், வசந்தபுரம் மணம்பிராய் பிள்ளையார் கோவில், புனித செபஸ்தியான் தேவாலயம், மயிலிட்டி ரோமன் கத்தோலிக்க பாடசாலை மற்றும் வஸாவிலான் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாலயம் ஆகியவற்றுக்கான அணுகுமுறையை மீண்டும் வழங்குவதற்கும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச சபை விரிவாக்கத்திற்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள், 551வது பிரிவு பகுதியில் உள்ள நிலங்கள், மற்றும் இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயம், இரணைமடு சந்தி மற்றும் விவசாயத் திணைக்களம் ஆகியவற்றை பாதிக்கும் வகையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவிப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிலவில் எஞ்சியுள்ள 59 ஏக்கர் பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மயிலிட்டித் துறை பகுதியில் 700 குடும்பங்களுக்குச் சொந்தமான 556 ஏக்கர் காணிகள் இன்றளவில் விடுவிக்கப்படவில்லை. கலைமகள் பாடசாலைக்கு சொந்தமான மைதானம் விடுவிக்கப்படவில்லை. பலாலி தெற்கு, கிழக்கு, வடக்கு, மேற்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் 300 குடும்பங்களுக்குச் சொந்தமான 556 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவில்லை.

கரைச்சி நூலகம் விஸ்தரிப்புக்கும் காணி விடுவிக்கப்படவில்லை. இரணைமடு விவசாய ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சொந்தமான காணி கேப்பாபிளவு பகுதியில் 59.5 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவில்லை.

கேப்பாப்பிலவு பகுதியில் உள்ளவர்களுக்கு மாற்று காணி வழங்கப்பட்டதாக குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. சீனியாமோட்டை பகுதியில் 44 பேருக்கு தற்காலிக காணிகளே வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் குரும்பைச்சிட்டி பகுதியில் இந்து மயானத்துக்குரிய காணி விடுவிக்கப்படவில்லை. ஆகவே இந்த கேள்விகளுக்கு விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சரிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறேன் என்றார்.

2

ரூ.1,34,166 மதிப்புள்ள செயற்கைக்கோள் தொலைபேசியை 74 மீனவர்களுக்கு வழங்கிய அமைச்சர் ஸ்ரீநாத்!

July 27, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 74 ஆழ்கடல் மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசிகள்

Ravikaran

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டேன் ; இனி எப்படிக் கேட்பது எனத் தெரியவில்லை – ரவிகரன் ஆதங்கம்!

July 27, 2026

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டோம்,

1

மேகதாதுவில் ஒரு செங்கலை கூட கர்நாடகா வைக்க முடியாது: அமைச்சர் செங்கோட்டையன்!

July 27, 2026

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அளுக்குளி பகுதியில் நடைபெற்ற ‘உங்களை தேடி நாங்கள்’ திட்ட முகாமை வருவாய்த்துறை மற்றும்

SHOOTING

தீவிரமடையும் பாதாள உலக வன்முறைகள்

July 27, 2026

இவ்வருடத்தில் இதுவரை இலங்கையில் 22 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும்

45925fe0-d767-44cd-9b26-f62575fc384f.jpg

சீயட்ல் சென்டர் துப்பாக்கிச் சூடு: சிறுவன் உட்பட இருவர் பலி, குறைந்தது ஐவர் காயம்

July 27, 2026

ஞாயிற்றுக்கிழமை இரவு சீயட்ல் சென்டரில் (Seattle Center) முக்கிய உணவுத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்

BGWK6B54S5E3PJ37A4S5J7SH7Y

‘இங்கே ஒரு குழப்பமான சூழல் நிலவியது’: வாட்டர்லூ பல்கலைக்கழகப் பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விசாரணை; நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

July 27, 2026

வாட்டர்லூவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 31 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இது நடப்பாண்டில் அப்பகுதியில் பதிவான

XRIJV6PPMZA57CCRZJQHBIDLBY

ஸ்கார்பரோவில் சாஸ் தெளித்து கவனம் சிதறடித்துத் திருடிய சந்தேக நபர்களின் புதிய புகைப்படங்களை பொலிஸார் வெளியீடு

July 27, 2026

ரொறன்ரோ பொலிஸார், கவனம் சிதறடிக்கும் திருட்டுச் சம்பவத்தின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டவரின் மீது சந்தேக நபர் ஒருவர் ‘கெட்சப்’ (Ketch-up

XHFAYQV4L5FSHADV33MY3MBVHY

மின்சார ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம், சாட்சிகளைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்

July 27, 2026

11 வயது சிறுவன் ஒருவன் தனது மின்சார ஸ்கூட்டரின் (e-scooter) கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதில்

LNUXYUAULNCK7GSPUXGXBRCQKM

இது கவலையளிக்கிறது’: வெறுப்புணர்வு சார்ந்த தாக்குதல்கள் எனச் சந்தேகிக்கப்படும் சம்பவங்களில் ரொறன்ரோவிலுள்ள யூதர்களுக்குச் சொந்தமான 2 பேக்கரி கிளைகள் இலக்கு வைப்பு

July 27, 2026

பெருமளவிலான ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த (GTA) பல யூத தொழுகைக்கூடங்கள் (synagogues) மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார்

death

குளியலறையில் உருக்குலைந்த நிலையில் சடலம்

July 27, 2026

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

kava

காவடி நடனத்தை நீக்க பரிந்துரை

July 27, 2026

தேவேந்திரமுனை ஸ்ரீ உத்பலவர்ண மகா தேவாலயத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருந்த பெரஹரவில் ஊர்வலத்தில் காவடி நடனத்தை நீக்குவதற்கு பொலிஸார்

wate

இளம் பிக்கு நீரில் மூழ்கி உயிரிழப்பு

July 27, 2026

மொனராகலை- வெல்லவாய, தெலுல்ல பகுதியில் உள்ள கிரிந்தி ஓயாவில் நீராடச் சென்ற இளம் பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்