நோவா ஸ்கோடியா (Nova Scotia) மாகாணத்தின் வடகிழக்கு கிராமப்புறத்தில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து காணாமல் போன ஆறு வயது லில்லி சல்லிவன் மற்றும் நான்கு வயது ஜாக் சல்லிவன் ஆகிய உடன்பிறப்புகளைத் தேடும் பணி, அவர்கள் காணாமல் போய் ஓராண்டு நிறைவடையும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் லான்ஸ்டவுன் ஸ்டேஷன் (Lansdowne Station) காடுகளில் தொடர்ந்தது.
சுமார் 50 பேர் கொண்ட குழுவினர் காடுகளில் லில்லி மற்றும் ஜாக் குறித்த ஏதேனும் தடயங்கள் கிடைக்கிறதா என்று தீவிரமாகத் தேடினர். இந்தத் தேடுதல் வேட்டையில் சடலங்களைக் கண்டறியும் சிறப்புப் பயிற்சியளிக்கப்பட்ட நாய் (cadaver dog) ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டது.
சல்லிவன் குழந்தைகள் இருவரும் மே 2, 2025 அன்று காலை கெய்ர்லோக் சாலை (Gairloch Road) வீட்டிலிருந்து காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறை மற்றும் தேடுதல் மீட்புக் குழுவினர் வான்வழி, நிலம் மற்றும் நீர் நிலைகளில் பலமுறை தேடுதல் நடத்தியும் குழந்தைகள் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்த வார இறுதியில், ஒன்டாரியோவைச் சேர்ந்த “Please Bring Me Home” என்ற தன்னார்வக் குழு இந்தத் தேடுதல் பணியை முன்னெடுத்தது. இக்குழுவினர் நவம்பர் 2025 முதல் குழந்தைகளைக் கண்டறியும் முயற்சியில் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
லில்லி மற்றும் ஜாக் சல்லிவன் மறைவு குறித்த தகவல்களை வழங்குவோருக்கு நோவா ஸ்கோடியா மாகாண அரசு $150,000 (சுமார் 1.5 லட்சம் டாலர்கள்) வரை வெகுமதி அறிவித்துள்ளது