ரொட்டவெவ – புளியங்குளம் வயல் காணிகளை மீட்டுத் தருமாறு விவசாயிகள் அவசர கோரிக்கை!

திருகோணமலை – மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ புளியங்குளம் வயல் காணிகளை தமக்கு மீண்டும் மீட்டுத் தருமாறு அந்தப் பகுதி விவசாயிகள் அரசாங்கத்திடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

​தமது வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, கவலை கலந்த விசனம் வெளியிட்டுள்ளனர்.​

​இது குறித்துப் பாதிக்கப்பட்ட விவசாய சங்கத்தினர் கருத்துத் தெரிவிக்கையில்,​எமது மூதாதையர்கள் கடந்த 1977ஆம் ஆண்டு தொடக்கம் 1990ஆம் ஆண்டு வரை இந்தப் புளியங்குளம் வயல் காணிகளில் மிகச் செழிப்பான முறையில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

எனினும், 1990ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக, நாம் எமது சொந்த வீடுகளையும், விளைநிலங்களையும் கைவிட்டு, உயிராபத்துக்களுக்கு மத்தியில் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் தஞ்சம் புக வேண்டியேற்பட்டது என குறிப்பிட்டுள்ளனர்.​

நீண்ட காலத்திற்குப் பின்னரே தாம் மீண்டும் தமது சொந்தக் கிராமங்களுக்குத் திரும்பியதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.​

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், ‘மகநெகும’ மற்றும் ‘கமநெகும’ ஆகிய திட்டங்களின் கீழ் இந்தப் பகுதியிலுள்ள சின்ன புளியங்குளம் மற்றும் பெரிய புளியங்குளம் ஆகிய இரண்டு குளங்களும் பல இலட்சம் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன.

குளங்கள் புனரமைக்கப்பட்ட போதிலும், அதன்கீழ் உள்ள விவசாய நிலங்களைப் பயன்படுத்துவதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என விவசாயிகள் சாடுகின்றனர்.​

தமது கிராமத்தை சூழவுள்ள குபுக்வெவ – கெமராவ மற்றும் மெதவெவ போன்ற பகுதிகளில் ஏனைய விவசாயிகள் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு அரச அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

ஆனால், பாரம்பரியமாக தமக்குச் சொந்தமான புளியங்குளம் பகுதியிலுள்ள விவசாயக் காணிகள் மட்டும் இன்னும் விடுவிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.​

எமது பாரம்பரியக் காணிகளை விவசாய நடவடிக்கைகளுக்காக மீண்டும் விடுவித்துத் தருமாறு பல அரசியல்வாதிகளிடமும், உயர் அரச அதிகாரிகளிடமும் நாம் நேரில் சென்று பலமுறை கோரிக்கை விடுத்தோம்.ஆனால், இன்றுவரை எமது நியாயமான கோரிக்கைக்கு எவ்விதமான தீர்வும் கிடைக்கவில்லை.

வெறும் வாக்குறுதிகள் மட்டுமே மிஞ்சியுள்ளன என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.​

எனவே, தற்போதைய அரசாங்கமாவது தலையிட்டு, பல வருடங்களாக முடங்கிக் கிடக்கும் ரொட்டவெவ புளியங்குளம் வயல் காணிகளை உடனடியாக மீட்டெடுத்து, தமது விவசாய நடவடிக்கைகளைத் தொடர வழிவகை செய்ய வேண்டும் என அந்தப் பகுதி தமிழ், முஸ்லிம் விவசாயிகள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

doug-ford-ontario-premiere-february-7-2023

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்

August 24, 2026

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்எதிர்வரும் புத்தாண்டு முதல் கனடாவின் அனைத்து

trump carney

வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை 50% ஆக உயர்த்த ட்ரம்ப் திட்டம்

August 24, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடாவுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்வரும் புத்தாண்டு முதல் “அனைத்து வகையான பெரிய

au

அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி

August 24, 2026

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட்

fif

பிஃபா தலைவரை சிறுவர் கால்பந்து தொடரில் பங்கேற்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

August 24, 2026

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை இந்த வார இறுதியில் டொமினிகன் குடியரசில் நடைபெறவுள்ள சிறுவர் கால்பந்து தொடரில்

jud

வவுனியாவில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை

August 24, 2026

2013 ஆம் ஆண்டு வவுனியாவில் தனது 14 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய

26-6a8afc6b4e102

மஞ்சள் காவிக்கு சிறப்பு சலுகை?

August 24, 2026

அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற

NAMAL

மக்கள் பிரச்சினைகளை விடுத்து அநுர தரப்பு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளில் தலையிடுகின்றது!

August 24, 2026

தற்போதைய அநுர அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை விடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை துரிதப்படுத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்புவதற்குமே விசேட கவனம்

dailythanthi_2026-08-24_vrhb80pa_protest

“பணி நிரந்தரம் கோரி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் மறியல்; 250 பேர் கைது!”

August 24, 2026

சென்னை சென்னை பாரிமுனையில் பணி நிரந்தரம் செய்யக் கோரித் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய திடீர் சாலை மறியலும், அதனைத்

dailythanthi_2026-08-23_qs9w3fhj_13 (1)

“புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வரத் தயங்கும்!” – பரந்தூர் விமான நிலையத் திட்ட ரத்து குறித்து உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக த.வெ.க அரசு அறிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இதற்குத்

maalai-malar_2026-08-24_06gims2h_Anbumani

“புதிய விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விரைந்து அறிவிக்க வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடத்தை அரசு

1200-675-24217931-755-24217931-1747840878798

“அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: ஒரே காரணத்திற்காக அடுத்தடுத்து மனுவா?” – பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

August 24, 2026

சென்னை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவைச் சென்னை

collage-1700827110

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி!” – வேல்முருகன் வரவேற்பு மற்றும் கோரிக்கைகள்

August 24, 2026

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வரவேற்றுள்ளார். அவரது