ரி20 உலகக் கிண்ணம்; இந்தியாவும் நியூஸிலாந்தும் மோதுகின்றன!

உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான அஹமதாபாத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் 90,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு மின்னொளியில் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் இந்தியாவை நியூஸிலாந்து எதிர்த்தாடவுள்ளது.

இந்த இரண்டு அணிகளும் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் வரலாற்று வெற்றியை ஈட்டும் குறிக்கோளுடன் களம் இறங்கவுள்ளன.

ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் சொந்த மண்ணில் சம்பியனான முதலாவது அணி, சம்பியன் பட்டத்தை தக்கவைத்த முதலாவது அணி, மூன்று தடவைகள் சம்பியனான முதலாவது அணி என்ற வரலாற்றுச் சாதனைகளை நிலைநாட்டும் குறிக்கோளுடன் இறுதிப் போட்டியை சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா எதிர்கொள்ளவுள்ளது.

தென் ஆபிரிக்காவில் 2007இல் நடைபெற்ற அங்குரார்ப்பண ரி20 உலகக் கிண்ணப் போட்டியிலும் கடைசியாக ஐக்கிய அமெரிக்கா மற்றும் கரிபியன் தீவுகளில் கூட்டாக நடத்தப்பட்ட 9ஆவது உலகக் கிண்ண அத்தியாயத்திலும் சம்பியனான இந்தியா 4ஆவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.

அதேவேளை, ரி20 உலகக் கிண்ணத்தை முதல் தடவையாக வென்றெடுக்கும் குறிக்கோளுடன் மிச்செல் சென்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து களம் இறங்கவுள்ளது.

துபாயில் 2021இல் நடைபெற்ற 7ஆவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் அவுஸ்திரேலியாவிடம் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த நியூஸிலாந்து, இரண்டாவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.

ரி20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவை எதிர்த்தாடிய 3 சந்தர்ப்பங்களிலும் நியூஸிலாந்து வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்திவந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இந்தியாவை தென் ஆபிரிக்காவில் 2007இல் 10 ஓட்டங்களாலும் இந்தியாவில் 2016இல் 47 ஓட்டங்களாலும் துபாயில் 2021இல் 8 விக்கெட்களாலும் நியூஸிலாந்து வெற்றிகொண்டிருந்தது.

இந்த இரண்டு அணிகளும் ரி20 உலகக் கிண்ணத்தில் நான்காவது தடவையாக சந்திக்கும் போது நியூஸிலாந்து வெற்றி அலையைத் தொடரவும் இந்தியா தனது தோல்விகளுக்கு பதலடி கொடுக்கவும் முயற்சிக்கும் என்பது திண்ணம்.

இந்த இரண்டு அணிகளும் அரை இறுதிகளில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன.

தோல்வி அடையாத அணியாக அரை இறுதியில் விளையாடிய தென் அபிரிக்காவை, ஃபின் அலன் குவித்த ரி20 உலகக் கிண்ண சாதனைமிகு அதிவேக சதத்தின் உதவியுடன் நியூஸிலாந்து 9 விக்கெட்களால் நொக் அவுட் செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

பரபரப்பை ஏற்படுத்திய மற்றைய அரை இறுதிப் போட்டியில் துடுப்பாட்டத்திலும் களத்தடுப்பிலும் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்தி இங்கிலாந்தை 7 ஓட்டங்களால் இந்தியா வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

இந்த இரண்டு அணிகளும் உலகக் கிண்ணத்துக்கு முன்னர் விளையாடிய 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 தொடரில் இந்தியா 4 – 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது.

மேலும் இந்தியாவும் நியூஸிலாந்தும் சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட 30 சந்தர்ப்பங்களில் 16 – 11 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. 3 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்தன.

இம்முறை இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட சம பலம் கொண்ட அணிகளாக தென்படுவதால் இறுதிப் போட்டி இறுக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்றாலும் தனது சொந்த மண்ணில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் இந்தியா விளையாடுவதால் அந்த அணி சம்பியனாவதற்கு அனுகூலமான அணி என கருதப்படுகிறது.

‘வெற்றிபெறுவதற்கு நாங்கள் அனுகூலமான அணி அல்ல என்பதை ஒவ்வொருவரும் அறிந்திருக்கலாம். ஆனால் வெற்றிக் கிண்ணத்தை ஒரு தடவை சுமப்பதற்கு சிலரின் இதயங்கள் நொறுங்குவது பரவாயில்லை என நான் கருதுகிறேன்’ என இறுதிப் போட்டிக்கு முன்னர் நியூஸிலாந்து அணித் தலைவர் மிச்செல் சென்ட்னர் கூறினார்.

இதேவேளை, ‘அவர்கள் நல்ல திட்டத்தோடு வருகை தந்துள்ளார்கள். நாங்களும் நல்ல திட்டங்களைக் கொண்டுள்ளோம். இந்தப் பெரிய இறுதி ஆட்ட மேடைக்கு நாங்கள் தயாராகிவிட்டோம். மற்றையவர்கள் எம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை விட நாங்கள் திறமையாக என்ன செய்யவேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்’ என இந்திய அணித் தலைவர் சூரியகுமார் யாதவ் தெரிவித்தார்.

இந்தியா: அபிஷேக் ஷர்மா, சஞ்சு செம்சன், இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ் (தலைவர்), திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ஷிவம் டுபே, அக்சார் பட்டேல், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரிட் பும்ரா.

நியூஸிலாந்து: டிம் சீஃபேர்ட், ஃபின் அலன், ரச்சின் ரவிந்த்ரா, க்லென் ஃபிலிப்ஸ், மார்க் சப்மன், டெரில் மிச்செல், மிச்செல் சென்ட்னர் (தலைவர்), கோல் மெக்கொன்ச்சி, மெட் ஹென்றிஃ, இஷ் சோதி, லொக்கி ஃபேர்கசன்.

i

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிப்பு

March 11, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்திலுள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் மற்றும் ஏனைய இலக்குகள் மீது ஈரான் புதிய தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

did

9 மாவட்டங்களில் நன்னீர் மீன்பிடிப் படகுகளின் திருத்தப் பணிகள் நிறைவு!

March 11, 2026

திட்வா புயலால் நாடு முழுவதிலும் உள்ள மீனவ சமூகத்தின் மீன்பிடிக் கலன்கள் மற்றும் உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதங்களை ஆறு (06)

CEB

12,000 இற்கும் அதிகமான மின் தடைகள்!

March 11, 2026

கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, பேருவளை, புத்தளம் மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் நேற்று (10) பிற்பகல் மற்றும் இரவு

cru

கச்சா எண்ணெய் விலை சரிவு

March 11, 2026

உலகச் சந்தையில் மிக வேகமாக அதிகரித்து வந்த கச்சா எண்ணெய் விலையானது தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

he

ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம்

March 11, 2026

ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் உணவுப் பொருட்களின் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்றும், அது “வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை தீவிரப்படுத்தும்” என்றும் ஐக்கிய

is

இலங்கைத் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

March 11, 2026

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள், சமூக வலைதளங்கள் மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தும்போது அறிமுகமில்லாத செய்திகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு அங்குள்ள இலங்கைத்

d

பராமரிப்பு நிலையத்தில் 18 மாதக் குழந்தை குளத்தில் விழுந்து உயிரிழப்பு

March 11, 2026

பகல்நேர பராமரிப்பு நிலையம் ஒன்றில் இருந்த 18 மாதக் குழந்தை ஒன்று, அங்கிருந்த குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ள சோகமான சம்பவம்

WhatsApp Image 2026-03-11 at 10.43.39

பிராம்டனில் வாகனங்களை திருடிய இளைஞர் கைது

March 11, 2026

பீல் பிராந்தியத்தின் மத்திய கொள்ளைத் தடுப்பு பிரிவு (Central Robbery Bureau) விசாரணையாளர்கள், பிராம்டனில் இடம்பெற்ற இரண்டு தனித்தனி ரைடு-ஷேர்

lo

அரசாங்கம் மக்களின் சுமையை மேலும் அதிகரித்திருக்கிறது – யுக்திய கூட்டமைப்பு

March 11, 2026

அரசாங்கம் நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியதன் மூலம், ஏற்கனவே மக்கள் முகங்கொடுத்திருக்கும் தாங்கமுடியாத சுமையை

man

தோட்டத் தொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய், கோதுமை மாவை மானிய விலையில் வழங்குக

March 11, 2026

மத்திய கிழக்கு போர்ச் சூழல் தீவிரமடைவதற்கு முன்னரே இலங்கையில் மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு குறித்து எச்சரிக்கப்பட்டிருந்த

tra_An

இ.போ.சபைக்கு புதிய கலாசாரத்தைக் கொண்டு வர பாடுபடுவோம்

March 11, 2026

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, வினைத்திறனான,தொடர்ச்சியான மற்றும் ஒரு பலமான பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை நிறுவுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், அதற்காக

wash

140 அமெரிக்க வீரர்கள் காயம் – பென்டகன்

March 11, 2026

ஈரான் மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் ஆரம்பத்திலிருந்து இதுவரை சுமார் 140 அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் எட்டு பேர்