யாழ்ப்பாண கல்விச் சமூகம் கல்வி மறுசீரமைப்புக்கு ஆதரவு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய மீதான விமர்சன தாக்குதல்களைக் கண்டிக்கும் அதேவேளை அவரினால் மேற்கொள்ளப்படவுள்ள கல்வி மறுசீரமைப்பு முயற்சிகளை முழுமையா ஆதரிப்பதாக யாழ்ப்பாண கல்விச் சமூகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல முன்னாள் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கலாநிதிகள், பேராசிரியர்கள், சட்டத்தரணிகள், மருத்துவ நிபுணர்கள். பொறியியலாளர்கள் வங்கியலாளர்கள், பொருளியலாளர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்கள் என 55 க்கும் மேற்பட்டவர்கள் கையொப்பமிட்டுள்ள அந்த அறிக்கையின் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி. ஹரிணி அமரசூரியவை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படும் அருவருப்பான, பெண் விரோதமான, அவதூறான தனிப்பட்ட தாக்குதல்கள் குறித்து எங்களது ஆழ்ந்த கவலையும் கடும் கண்டனத்தையும் பதிவு செய்கிறோம்.

கலாநிதி. ஹரிணி அமரசூரிய ஒரு அரசியல் தலைவி மட்டுமல்ல; அவர் ஒரு அறிஞர், புத்தி ஜீவி, சமூக நீதி, சமத்துவம் மற்றும் கல்விக்காக உழைப்பவர் . கொள்கை விவாதங்களினை விடுத்து, தனிப்பட்ட அவதூறுகள் மூலம் அவரை இழிவுபடுத்தமுயற்சிப்பது, அவரை மட்டுமல்ல, ஜனநாயக மதிப்புகள், பெண்களின் அரசியல் தலைமை,மற்றும் பொது வாழ்வில் அறிவுசார் நேர்மை ஆகிய அனைத்தையும் அவமதிப்பதாகும்.

இத்தகைய தாக்குதல்கள் அநியாயமானவையும், ஒழுக்கமற்றவையும் மட்டுமல்ல, அவை ஜனநாயக உரையாடலையே இல்லாமல் ஆக்குகின்றன. தர்க்கப்பூர்வமான, ஆதாரமுள்ள, விவாதங்களை மேற்கொள்ளாமல், சில அரசியல் சக்திகளும் அவர்களின் ஆதரவாளர்களும் திரிவுபடுத்தப்பட்ட மற்றும் தவறான தகவல்கள் மூலம் உணர்ச்சிகளைத் தூண்டும் யுக்திகள் மீது தொடர்ந்து நம்பிக்கை வைப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

இனவாதம் மற்றும் உணர்ச்சி பூர்வ அரசியலுக்காக இலங்கை கடந்த தசாப்தங்களில் மிகப் பெரிய விலையைச் செலுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதார வீழ்ச்சியும் சமூக சீர்கேடும் இத்தகைய தோல்வியடைந்த அரசியல் முறைகளின் நேரடி விளைவுகளாகும்.
மக்கள் இத்தகைய அரசியலை ‘அரகலய’ போராட்டம் வழியாக தெளிவாக நிராகரித்தனர். இன்று இலங்கை ஒரு வரலாற்றுத் திருப்புமுனையில் நிற்கிறது. ஊழல், இனவாதச் சுரண்டல் மற்றும் கொள்கை முடக்க நிலை ஆகியவற்றால் சபிக்கப்பட்டிருந்த பல தசாப்தங்களுக்குப் பிறகு, மக்கள் கட்டமைப்பு சார்ந்த மாற்றங்களுக்கான தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர்.

இந்த முக்கியமான தருணத்தில், இலங்கைக்கு முறையான மறுசீரமைப்புகள் அவசியம்;அதில் குறிப்பாக, கல்வி மறுசீரமைப்பு மிக முக்கியமானது. கல்வியே நீண்டகால தேசிய வளர்ச்சி, சமூக உயர்வு மற்றும் உலகளாவிய போட்டித்திறன் ஆகியவற்றின் அடித்தளம். ஆனால், நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணமான அமைந்த அதே சக்திகள், மீண்டும் ஒருமுறைமத, கலாசார மற்றும் உணர்ச்சி சார்ந்த விவகாரங்களைப் பயன்படுத்தி இந்த மறு சீரமைப்புகளைத் தடுக்க அல்லது திசைதிருப்ப முயற்சிப்பதை நாம் காண்கிறோம்.

வெறுப்பு, பயம், மற்றும் பிளவுகளால் எந்த நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்ப முடியாது என்பதைக் தீர்மானமாக வலியுறுத்துகிறோம். கல்வி மறுசீரமைப்பு ஒரு அரசியல் அச்சுறுத்தல் அல்ல, அது ஒரு தேசிய அவசியம். தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் உண்மையினை திரிவுபடுத்துவதன் மூலம் உருவாக்கப்படும் அவசியமற்ற சர்ச்சைகள் வழியாக மறுசீரமைப்புகளைத் தகர்க்க முயல்வது, நாட்டை பலவீனமாகவும் பிளவுபட்டதாகவும் வைத்திருந்து, அதன் மூலம் மீள அதிகாரத்திற்கு வர முயலும் சிலரின் அதிகார ஆசைகளுக்கே உதவும்.

இன்று கலாநிதி. ஹரிணி அமரசூரிய அவர்களை தாக்குவோர் கலாசாரத்தையோஒழுக்கத்தையோ பாதுகாப்பவர்கள் அல்ல. அவர்கள் பாதுகாக்க முயல்வது தமக்கான சலுகைகளையும் தங்களது அரசியல் உயிர்வாழ்தலையும் தான். கடந்த 75 ஆண்டுகளாக இனவாதம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அறிவு விரோத அரசியல் மூலம் நாட்டை தோல்வியடையச் செய்தவர்கள், இன்று சிந்திக்கத் தெரிந்த, கல்வியறிவு பெற்ற, புதியதலைமுறை உருவாகிவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர்.

அதனால்தான் அவர்கள் இலக்காக்குவது:
ஒரு மாற்றத்தை முன்னெடுக்கும் சீர்திருத்தவாதியை.எனவே, நாம் தெளிவாகத் தெரிவிக்க விரும்புவது, ஒரு அறிஞரை, ஒரு பெண்ணை, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சருக்கு எதிரான அனைத்து வகையான அவதூறுகள்,பாலின அடிப்படையிலான தாக்குதல்கள் மற்றும் வெறுப்பு பிரச்சாரங்களை கடுமையாக கண்டிக்கிறோம்.

இலங்கையின் கல்வி மறுசீரமைப்புகளை வழிநடத்தும் கலாநிதி. ஹரிணி அமரசூரியஅவர்களின் தலைமையினை முழுமையாக ஆதரிக்கிறோம்.

மக்களின் ஆணையினையும், தேசியக் கொள்கையினையும், அடிப்படையாகக்கொண்டு, அரசு தயக்கமின்றி கல்வி மறுசீரமைப்புகளை உறுதியாக முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

தவறான தகவல்கள் மூலம் மக்களை அச்சமூட்டி மறுசீரமைப்புகளைத் தடுக்க முயலும் பிற்போக்குச் சக்திகளுக்கு எதிராக, கல்வியாளர்கள், தொழில்முனைவோர், ஆசிரியர்கள், பெற்றோர், குடிமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என அழைக்கிறோம்.

நாட்டை அழித்தவர்களால் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது.கல்வி சீர்திருத்தம் குறித்தது அஞ்சுபவர்களால் எதிர்காலத்தை உருவாக்க முடியாது. சிலரின் அதிகார ஆசைகளுக்காக இலங்கையின் எதிர்காலம் பலியிடப்படக் கூடாது.கல்வி அறிவு, மரியாதை மற்றும் தைரியத்துடன் இலங்கை முன்னேற வேண்டும்.

Vasantha Athukorala

ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

March 4, 2026

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின்

Nalin

ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு உருவாக்கம் – சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

March 4, 2026

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அனைத்து ஊடக

Sl E

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறே எந்தவொரு சட்டமும் இலங்கையில் அமையவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

March 4, 2026

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு

kumara

அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது

March 4, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது. எரிபொருள் விநியோக

Andreas

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மாகாணசபைத்தேர்தல்கள் குறித்து இன்று அரசிடம் பேசுவதாக நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

March 4, 2026

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல் என்பவற்றில் தொடரும் காலதாமதம் உள்ளடங்கலாக தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வெளிப்படுத்திய மனித உரிமைகள்சார்

Nish

இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளர்களும் ஆத்திரமடைந்துள்ளார்கள் – நிசாம் காரியப்பர்

March 4, 2026

ரானுக்கு எதிராக செயற்பட்ட தரப்பினருக்கு எதிராக ஜனாதிபதி ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்காததையிட்டு இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம்

eu

உலகப் பொருளாதார பாதிப்பு: ஐரோப்பிய ஒன்றியம் – வளைகுடா கவுன்சில் அவசர பேச்சுவார்த்தை

March 4, 2026

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் விசேட காணொளி மாநாடு (EU) மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) வெளியுறவு

Chavitha

டெக்சாஸ் ஆஸ்டினில் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவளித் தமிழ் மாணவி பலி!

March 4, 2026

அமெரிக்காவின் டெக்சாஸ் ஆஸ்டினில், மார்ச் 2, 2026 அன்று பார் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சவிதா சண்முகசுந்தரம் (21) உயிரிழந்த

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்