கனடாவின் அல்பர்ட்டா மாகாணம், மொரின்வில் (Morinville) பகுதியில் ‘ஸ்னாப்சாட்’ (Snapchat) சமூக வலைத்தளம் ஊடாக 15 வயது மைனரை ஏமாற்றி, பாலியல் சுரண்டல்களுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் எட்மன்டன் நகரைச் சேர்ந்த 34 வயதுடைய ஜஸ்விந்திரா நாத் (Jaswindra Nath) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரச குதிரைப்படைப் பொலிஸாரால் (RCMP) கைது செய்யப்பட்ட இவருக்கு எதிராகப் பின்வரும் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன:
-
மைனர் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்தல் (Two counts of sexual interference)
-
சிறுவர்களைப் பாலியல் நோக்கங்களுக்காக ஏமாற்றி அழைத்தல் (Child luring)
-
சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றமொன்றைத் திட்டமிடுதல்
-
18 வயதிற்கு உட்பட்ட ஒருவரிடமிருந்து பாலியல் சேவைகளைப் பெற்றுக்கொள்ளுதல்
நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபருக்குப் பல கடுமையான நிருவாக நிபந்தனைகளுடன் கூடிய தற்காலிகப் பிணை (Released on conditions) வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கான அவசர வேண்டுகோள்: சந்தேகநபர் ஸ்னாப்சாட் சமூக வலைத்தளத்தில் “yegnut” மற்றும் “yegnutn” ஆகிய பயனர் கணக்குகளையும் (Snapchat handles), அத்துடன் “Jash” என்ற போலிப் பெயரையும் பயன்படுத்திச் சிறுவர்களுடன் தொடர்புகொண்டுள்ளதால், மேலும் பல சிறுவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது குறித்த விபரங்களை அறிந்தவர்கள் உடனடியாகப் பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.