ஹொரணை, கொபவகவத்தை களுகங்கை மோதரப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த பாரிய அளவிலான மாணிக்கக்கல் அகழ்வு மோசடி ஒன்றை வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது, 3 மாணிக்கக்கல் வியாபாரிகள் உட்பட 25 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த முற்றுகையின் போது, 11 படகுகள், 5 மோட்டார்கள் உட்பட மாணிக்கக்கல் அகழ்விற்குப் பயன்படுத்தப்பட்ட 7 கோடி ரூபா பெறுமதியான உபகரணங்கள் வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.