பெர்லின் பிரைட் (Berlin Pride) நிகழ்வில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து மொன்றியல் ஃபியர்டே (Fierté Montreal) பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது

கடந்த வார இறுதியில் பெர்லின் பிரைட் நிகழ்வில் ஒரு நபர் கொல்லப்பட்டுப் பல காயமடைந்த தாக்குதலைத் தொடர்ந்து, மொன்றியல் ஃபியர்டே அமைப்பாளர்கள் தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஃபியர்டே மொன்றியல் தனது 20 ஆவது பதிப்பை வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளதுடன், இதன் நிகழ்வுகள் ஆகஸ்ட் 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. “சமீபத்தில் பெர்லினில் நடந்த தாக்குதல் போன்ற சோகமான சம்பவங்களைத் தொடர்ந்தும், இன்னும் ஒரு வாரத்தில் நமது திருவிழா தொடங்கவுள்ள நிலையிலும், பங்கேற்பாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் […]
சிறுவர்களை காரில் வைத்துக்கொண்டு அதிவேகமாக காரைச் செலுத்திய ஓட்டுநருக்கு வழக்கு பதிவு

திங்கட்கிழமை காலை 10 ஆவது வீதியில் (10th Line) மணிக்கு 50 கி.மீ வேகம் அனுமதிக்கப்பட்ட பகுதியில், மணிக்கு 93 கி.மீ வேகத்தில் சென்ற காரை பொலிஸார் வழிமறித்து நிறுத்தினர். காரின் பின்புறத்தில் ஓட்டுநர் இரண்டு சிறு குழந்தைகளை வைத்துக்கொண்டு வாகனத்தைச் செலுத்தியதாக சவுத் சிம்கோ பொலிஸார் (South Simcoe Police) தெரிவித்தனர். மணிக்கு 80 கி.மீக்கும் குறைவான வேகம் அனுமதிக்கப்பட்ட பகுதியில், வரம்பை விட 40 கி.மீக்கும் அதிக வேகத்தில் சென்றதற்காக (Stunt driving – […]
சாவகச்சேரி நகர சபையின் விசேட கூட்டம்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் பதவியிலிருந்தும் நகர சபை உறுப்புரிமையில் இருந்தும் ஞானப்பிரகாசம் கிஷோரை நீக்கி வடக்கு மாகாண ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானியை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் எதிர்வரும் 5ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. எனினும், சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் வெற்றிடத்தை நிரப்ப உள்ளூராட்சி உதவி ஆணையாளரால் திட்டமிடப்பட்டுள்ள சபைக்கூட்டம் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள நிலையில், அதற்கு நீதிமன்றம் தடையேதும் விதிக்கவில்லை. அதனால் சபையின் […]
அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிணை
கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்று (27) ஒரு சட்டத்தரணி மூலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முன்னிலையாகியிருந்தார். கோட்டை பொலிஸ் நிலைய உத்தியோத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோட்டை நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது முன்னிலையாகத் தவறியதன் காரணமாக, கடந்த 24ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றம் […]
நீர்கொழும்பு சிறை கலவரம்;சந்தேக நபர்களாக நால்வர்!

அண்மையில் நடைபெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் தொடர்பில் நான்கு பேர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். கடந்த 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில், 10 சிறை அதிகாரிகளும் 22 கைதிகளும் கொல்லப்பட்டனர். மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (27) நீதிமன்றத்தின் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மேலும் அரசுத் தரப்பு சார்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் முன்னிலையானது. […]
அரச சேவையில் தேசிய நேர்மை வாரம்!

அரச சேவையில் நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய நேர்மை வாரம் (27 ஜூலை 2026 தொடக்கம் 31 ஜூலை 2026 வரை) நேற்று (27) நாடளாவிய ரீதியில் விசேட நிகழ்வுகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. ‘சட்டத்தை மதிக்கும் நேர்மைமிகு அரச சேவை’ எனும் தொனிப்பொருளில் வடமாகாணத்திலும், மன்னார் மாவட்டத்திலும் இதன் தொடக்க நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. வடக்கு மாகாண நேர்மை வார அறிமுக நிகழ்வு, […]
ஓகஸ்ட் 30; சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் குறித்த விசேட சந்திப்பு

எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் சர்வதேச மாநாடு ஒன்றினை நடத்த “வடக்கு கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்” ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாடு தொடர்பான ஆதரவு, பங்களிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்றது. இலங்கை அரசிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தைக் கையாளுவதற்கோ அல்லது நீதியைப் பெற்றுத் […]
அவசர வானிலை எச்சரிக்கை!

பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் கல்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அக்கடற்பரப்புகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் குறித்த கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த அறிவித்தலானது […]
நாட்டை அரசாங்கம் அதலபாதாளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றது…

தற்போது இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ள செயல்திறனற்ற ஜனாதிபதியும், பிரதமரும் மற்றும் வேலை செய்யத் தெரியாத அரசாங்கமும் நமது நாட்டை நாளுக்கு நாள் அதலபாதாளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட அலுவலகத் திறப்பு விழாவில் நேற்று (26) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். தேயிலை, இறப்பர், ஆபரணம் மற்றும் இரத்தினக்கற்கள் போன்ற நமது நாட்டின் வளங்களை மேம்படுத்த […]
மெய்வல்லுநர் தெரிவுக்குழு இராஜினாமா!

இலங்கை மெய்வல்லுநர் போட்டிகளுக்கான தெரிவுக்குழு உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர். பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி, அவர்கள் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த குழு தங்களது இராஜினாமா கடிதத்தை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் நேற்று (27) கையளித்துள்ளது. குறித்த குழுவில் டி.ஏ தயாரட்ன, எம்.கே.பி ஜயசேகர, ரவி வித்யாலங்கார ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 23-வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் நிலையில், இலங்கை மெய்வல்லுநர் போட்டிகளுக்கான தெரிவுக்குழுவின் பதவி விலகல் பாரிய அதிர்வலைகளை […]