அமெரிக்க தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் பயணித்த வாகனம் 140 கி.மீ வேகத்தைத் தொட்டதால் பொலிஸார் துரத்துவதைக் கைவிட்டனர்

திங்கட்கிழமை அதிகாலை அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகநபரின் வாகனத்தைப் பொலிஸார் டான் வேலி பார்க்வேயில் (Don Valley Parkway) அதிவேகமாகத் துரத்திச் சென்றதாகவும், பின்னர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாகத் துரத்துவதைக் கைவிட்டதாகவும் டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். யூனிவர்சிட்டி அவென்யூவிலுள்ள (University Avenue) கட்டிடத்தில் அதிகாலை 4:45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவமானது, கடந்த மார்ச் 10 அன்று இதே கட்டிடம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு நான்கு மாதங்களின் பின்னர் நிகழ்துள்ளது. அந்தத் […]

தனியார் வகுப்பு நிலைய உரிமையாளர் போதைப்பொருளுடன் கைது

ஹொரணை நகரிலுள்ள பிரபல தனியார் வகுப்பு நிலையமொன்றின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரணை, நர்த்தனகல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 15 கிராம் 250 மில்லிகிராம் ஐஸ், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு கையடக்கத் தொலைபேசி மற்றும் சிம் அட்டை, இலத்திரனியல் தராசு என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேகநபர் ஹொரணைப் பகுதியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் எனத் தெரியவந்துள்ளது. […]

ஜி.டி.ஏ (GTA) பகுதியில் 50 மி.மீ வரை மழை பெய்யக்கூடும் என்பதால் வெள்ளப்பெருக்கு அபாயம்

டொராண்டோ நகரில் இன்று இரவு கனமழையும் இடியுடன் கூடிய புயலும் வீசக்கூடும் என்பதால், ‘டொராண்டோ மற்றும் பிராந்திய பாதுகாப்பு அதிகாரசபை’ (TRCA) நகருக்கான வெள்ள எச்சரிக்கை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வானிலை மாற்றம் திங்கட்கிழமை இரவு தொடங்கி, இரவு முழுதும் நீடித்து அதிகாலை நேரம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொராண்டோவில் இன்று பிற்பகல் 40 சதவீத மழைக்கான வாய்ப்பும் இடியுடன் கூடிய மழைக்கான அபாயமும் உள்ளதாக கனடா சுற்றாடல் திணைக்களம் (Environment Canada) தெரிவித்துள்ளது. நகரில் […]