மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை கொலை தொடர்பில் வௌியான பல தகவல்கள்

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் பெண் ஒருவரை வீசிச்சென்ற சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் சந்தேகநபர்கள் குற்றச்செயல்களுக்காக பயன்படுத்திய இரண்டு முச்சக்கர வண்டிகள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைதானவர்கள் மட்டக்களப்பில் நடைபெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடனும் தொடர்புபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு மூன்று வயது குழந்தையுடன் இளம் தாய் ஒருவர் சென்றிருந்த நிலையில் காணாமல் போனார்.

மறுநாள் வெள்ளிக்கிழமை குறித்த தாய் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டதுடன், அவரது குழந்தை வயல் பகுதி ஒன்றில் தனித்துவிடப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த தாய் மீட்கப்பட்ட கிணற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் மற்றுமொரு பெண்ணின் சடலமும் இதன்போது மீட்கப்பட்டிருந்தது.

குறித்த சம்பம் தொடர்பில் சிசிரிவி காட்சிகளைக் கொண்டு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி அடையாளப்படுத்தப்பட்டு அதன் உரிமையாளர் இனங்காணப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா, வேர்க்கண்டசேனை பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து கணவன் மனைவி, கணவனின் சகோதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட கணவன், மனைவி சம்பவ தினமான வியாழக்கிழமை வவுணதீவு பகுதியில் குழந்தையுடன் பேருந்துக்காக காத்திருந்த இளம் தாயைக் கண்டு, முச்சக்கர வண்டியை நிறுத்தி மட்டக்களப்பு நகருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது தாம் அடகு வைத்த குழந்தையின் தங்க ஆபரணத்தை மீட்கப் போவதாகத் குறித்த தாயிடம் இருந்து சந்தேகநபர்கள் தகவல்களை பெற்றுக் கொண்டுள்ளனர்.

பின்னர் மட்டக்களப்பு நகருக்கு சென்று தாம் மீண்டும் இதே வழியில் வருவதாகவும், அதற்கு குறைந்தளவான கட்டணத்தை தருமாறும் கோரியுள்ளனர்.

இதற்கு குறித்த தாயும் இணக்கம் வௌியிட்டுள்ள நிலையில், சந்தேகநபரான பெண் ஒருவர் நகை அடகு நிலையத்திற்கும் அந்த தாயுடன் சென்று திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது.

மீண்டும் அவர்களை தமது முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்ற நிலையில், வலையிறவு பாலத்தை அண்மித்த போது, அவருக்கு மயக்க மருந்து கலந்த பழச்சாறு போத்தலைக் அருந்தக் கொடுத்துள்ளனர்.

அவர் அதனை வாங்கி அருந்திய பின்னர் மயக்கமடைந்துள்ளார்.

இதன்போது கொத்தியாபுலை பகுதியில் உள்ள வயல்பகுதியில் குழந்தையினை எரிந்துவிட்டு குறித்த முச்சரக்கவண்டி காஞ்சிரங்குடா சென்று அங்கு மயக்கமடைந்த பெண்ணின் சுமார் நான்கரை பவுன் தாலிக்கொடியை கழட்டியுள்ளனர்.

பின்னர் அதனை சந்தேகநபரின் மனைவி எடுத்துக் கொண்டு முச்சக்கரவண்டியில் இருந்து வீட்டில் இறங்கியுள்ளார்.

இதனையடுத்து வீட்டிலிருந்த தனது காரில் மயக்கமுற்ற பெண்ணை ஏற்றிக்கொண்டு தமது சகோதரனையும் அழைத்து சென்ற சந்தேகநபர் நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றில் வீசிச் சென்றுள்ளனர்.

சந்தேகநபர்கள் இதேபோன்ற கொள்ளைச் சம்பவங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மேற்கொண்டுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை விற்று பெற்றுக் கொண்ட பணத்தில் காரை கொள்வனவு செய்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

கொள்ளையிடப்பட்ட நகைகள் விற்பனை செய்த மற்றும் அடகுவைக்கப்பட்ட நகைக்கடை உரிமையாளர்கள் இருவரும் இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

arrest

ஐஸ் போதைப்பொருளுடன் யுவதி கைது!

March 22, 2026

களனி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த

schoo

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு; பாடசாலைகளை மூடத் தீர்மானமில்லை!

March 22, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக, எரிபொருள் நுகர்வைக் குறைக்கும் நோக்கில் பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம்

Accident

இரத்தினபுரி பிரதான வீதியில் விபத்து: ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்!

March 22, 2026

ஹொரணை – இரத்தினபுரி பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Harshana rushan

எரிபொருள் விலை உயர்வைக் காரணம் காட்டி உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம்!

March 22, 2026

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வைக் காரணம் காட்டி, உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளை எக்காரணம் கொண்டும்

air

பொன்கொரண்டி தாவரத்துடன் சீனப் பயணி ஒருவர் கைது

March 22, 2026

25 கிலோ கிராம் பொன்கொரண்டி மூலிகைத் தாவரத்தை சட்டவிரோதமாகச் சீனாவுக்குக் கடத்த முயன்ற 37 வயதுடைய சீனப் பிரஜை ஒருவர்

hil

தெற்கு லெபனானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி கொலை

March 22, 2026

தெற்கு லெபனானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி ஒருவரும் மேலும் இருவரும் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய

post

எரிபொருள் நெருக்கடி; தபால் திணைக்களம் முக்கிய அறிவுறுத்தல்

March 22, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக, தபால் திணைக்களத்தின் கடிதப் போக்குவரத்து சேவைகளை ஒருநாள்

fazi

பாகிஸ்தானின் அணு சக்தி வளங்களை அமெரிக்கா தாக்கினால் இந்தியாவை குறிவைப்போம்

March 22, 2026

பாகிஸ்தானின் அணு சக்தி வளங்களை அமெரிக்கா தாக்கினால் இந்தியாவின் டெல்லி மற்றும் மும்பையை நாங்கள் தாக்குவோம் என இந்தியாவுக்கான பாகிஸ்தானின்

kokk

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை கொலை தொடர்பில் வௌியான பல தகவல்கள்

March 22, 2026

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் பெண் ஒருவரை வீசிச்சென்ற சம்பவம் தொடர்பில்

hu

ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்தால் ​ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படும்!

March 22, 2026

அமெரிக்கா ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்தால், ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடிவிடுவோம் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை

d

ஊரெழுவில் பதுக்கி வைத்த எரிபொருள் மீட்பு

March 22, 2026

யாழ்ப்பாணம், ஊரெழு பகுதியில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் களஞ்சியசாலையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான எரிபொருட்கள், யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப்

dd

செம்பியன்பற்று வடக்கு பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

March 22, 2026

வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஆணின் சடலம் நேற்று (21) மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில்