பௌத்த பிக்கு ஒருவருக்கு மனித உரிமைகள் என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை – ஓமல்பே சோபித தேரர்

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு பிக்குவுக்கும் தனது துறவற ஆடையைக் களைந்துச் செல்லும் உரிமை உண்டு. அதற்கு எவராலும் தடைகளை விதிக்க முடியாது. பௌத்த பிக்கு ஒருவருக்கு மனித உரிமைகள் என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை என ஸ்ரீபோதிராஜ அறக்கட்டளையின் ஸ்தாபகரும், எம்பிலிபிட்டிய இங்குரஆர ஸ்ரீபோதிராஜ பிக்கு பயிற்சி மையத்தின் ஆன்மீகப் பணிப்பாளருமான ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பௌத்த பிக்கு ஒருவருக்கு மனித உரிமைகள் என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை. ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போது ஜனநாயக உரிமைகளையும் மனித உரிமைகளையும் சுமந்துதான் இவ்வுலகத்துக்கு வருகிறான். ஆனால், பிக்கு ஒரு நிலைப்பாட்டில் அந்த அனைத்து உரிமைகளையும் தியாகம் செய்துவிட்டுத்தான் சாசனக் கோட்பாட்டுக்குள்ளே நுழைகிறார். தனது சுய விருப்பத்தின் பேரில் தனக்கிருந்த மனித உரிமைகளை நிராகரித்துவிட்டுத்தான் அவர் துறவறத்தை ஏற்கிறார்.

அவ்வாறு துறவறம் பூணும் ஒரு பிக்கு, அன்று முதல் மூன்று விதமான சட்ட அமைப்புகளுக்குக் கட்டுப்படுகிறார். முதலாவது, விநய பிடகத்தில் புத்த பெருமானால் விதிக்கப்பட்டுள்ள பிராதிமோட்ச விதிகள். இரண்டாவது, நாட்டின் இராஜ நீதி எனப்படும் அரச சட்டம். தான் ஒரு பிக்கு என்பதற்காக நாட்டின் சட்டத்திலிருந்து விலகிவிட முடியாது. பிக்குகள் அரச சட்டத்துக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பது தர்ம நூல்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மூன்றாவது, சமூக ஒழுக்க விழுமியங்கள் தொடர்பான விதிகள். இந்த மூன்று சட்டப் பிரிவுகளுக்கும் பிக்குகள் அடிபணிய வேண்டும்.

மனித உரிமைகளை நிராகரித்துவிட்டு துறவறத்துக்குள் நுழைந்த பிக்குவுக்கு இருப்பது சாதாரண மனித உரிமைகள் அல்ல, அது விடுதலை குறித்த உன்னதமான உரிமையாகும். தர்மத்தின் கோட்பாடுகளைப் பின்பற்ற முடியாத ஒருவருக்கு, எந்த நேரத்திலும் துறவிக்கோலத்தை நீக்கிவிட்டுச் செல்லும் சுதந்திரம் உண்டு. ஏனைய மத நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, பௌத்த பிக்குவுக்கு இருக்கும் விசேட வரப்பிரசாதம் இதுவாகும். எனவே தனது ஆடையைக் களைந்து இல்லறத்துக்குத் திரும்புவதற்கு எவராலும் தடை விதிக்க முடியாது.

பிக்குவானவர் தனக்கு விருப்பமானதைச் செய்துகொண்டு காவி உடையில் தங்கியிருக்க மனித உரிமைகளைப் பயன்படுத்த முடியாது. அவர் தான் சுயமாக ஏற்றுக்கொண்ட பொறுப்புகளுக்கும் விதிகளுக்கும் உட்பட்டே வாழ வேண்டும். வரலாற்றில் தர்ம சங்காயனைகளின் போது, தர்மத்தைப் பாதுகாப்பதற்காகத் தகுதியற்ற ஆயிரக்கணக்கானோர் சாசனத்திலிருந்து நீக்கப்பட்டனர். தர்மசோக மன்னன், வோஹாரிக திஸ்ஸ மன்னன் மற்றும் மகா பராக்கிரமபாகு மன்னன் போன்றோரின் ஆட்சிக் காலத்தில் இவ்வாறான சாசனச் சீர்திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன.

தற்போது இவ்வாறான நடைமுறைகள் சரியாகச் செயற்படாத காரணத்தினாலேயே பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன. அரசாங்கம் தலையிட்டு, மகாநாயக்க தேரர்களின் ஆலோசனையுடன் சாசனச் சீர்திருத்தங்களை அடிக்கடி முன்னெடுக்க வேண்டும். அதுவே சாசனத்தின் அசிவிருத்திக்கு வழியாகும். மனித உரிமைகளைப் பற்றிப் பேசிக்கொண்டு, தமக்குத் தேவையானவற்றைச் செய்துகொண்டு துறவற ஆடையில் தங்கியிருக்க எவருக்கும் உரிமை இல்லை. இந்த விதிகளைப் பின்பற்ற முடியாதவர்கள் கௌரவமாக அதனை நீக்கிவிட்டு சாதாரண இல்லற வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். அதை விடுத்து, மனித உரிமைக் கதைகளைக் கூறிக்கொண்டு தவறான செயல்களில் ஈடுபடுவது சாசனத்தின் வீழ்ச்சிக்குத்தான் வழிவகுக்கும் என்றார்.

b36f3954a794f9382daecd17359724952bb8ee0389728dfd9ea790750de3a7a2

“இல்லம் தேடி மதுவைக் கொண்டு வந்தவர் ஸ்டாலின்!” – ராமநாதபுரம் திமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி பேச்சால் சலசலப்பு

September 13, 2026

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மகளிர் அணி நிர்வாகி ஒருவர் நாக்கு

eft9J2c8vpDNB_Wg

தாராபுரம் இடைத்தேர்தல்: எனக்காக முதலமைச்சர் விஜய் பிரசாரம் செய்வார் – தவெக வேட்பாளர் சத்தியபாமா தகவல்!

September 13, 2026

தாராபுரம் / சென்னை: நடைபெறவுள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது என்றும்,

768-512-25775621-thumbnail-16x9-madurai-malli

விநாயகர் சதுர்த்தி எதிரொலி: திண்டுக்கல் மார்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 1,500-க்கு விற்பனை!

September 13, 2026

திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் முகூர்த்த நாள்களை முன்னிட்டுத் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைப் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை

Untitled-5

தொடர் விடுமுறை: 2,354 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் – விதிகளை மீறிய 400 ஆம்னி பேருந்துகள் மீது அதிரடி நடவடிக்கை!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையையொட்டிப் பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காகக் கிளாம்பாக்கத்திலிருந்து 2,354 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில்,

2

பரந்தூரைப் போல பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக விவகாரத்திலும் முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார்: எம்.பி. துரை வைகோ நம்பிக்கை!

September 13, 2026

திருச்சி: திருச்சி மாவட்டம் கே.கள்ளிக்குடி ஊராட்சியில், தனது தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ. 17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய

725c2e6d9fca0dc4aada0ee563cfb1b495b36e3eddff80882083ace68426ca4f

மலேசியப் பிரதமரைச் சந்திக்க முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தைத் தள்ளிவைக்க ஆளுநர் மாளிகை கோரிக்கை: பரபரப்புத் தகவல்!

September 13, 2026

சென்னை: புதுடெல்லிக்கு வருகை தந்துள்ள மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமைச் சந்திப்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தைத் தள்ளிவைக்குமாறு

1200-675-26766517-thumbnail-16x9-trichy2-aspera

“ஆபாசமாகப் பேசுவதுதான் திமுகவின் அரசியல்!” – சேகர்பாவுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!

September 13, 2026

சென்னை: அரசியல் என்ற பெயரில் ஆபாசத்தையும், அவதூறையும் பேசுவதையே திமுகவினர் வாடிக்கையாக வைத்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்

1200-675-27622338-thumbnail-16x9-ministersrinath

தூத்துக்குடி கப்பல் கட்டும் தள எதிர்ப்பு: செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளிக்காமல் நழுவிய அமைச்சர் ஸ்ரீநாத்!

September 13, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடியில் அமையவுள்ள புதிய கப்பல் கட்டும் தளத் திட்டத்திற்கு உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து

HSBts-6bwAAGySO

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற சர்வதேசக் கார் பந்தயம்: இங்கிலாந்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

September 13, 2026

லண்டன் / சென்னை: தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த “மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்” அமைப்பதற்கான முன்னோட்டமாக, இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

b

குற்றக் கும்பல்களுக்குக் கைக்குண்டு கிடைத்தது எப்படி?

September 13, 2026

தெஹிவளை வீடொன்று மீது அண்மையில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பல முக்கியமான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

bom

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6 குண்டுத் தாக்குதல்கள்

September 13, 2026

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களினால் 6 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று தாக்குதல்கள் கல்கிஸ்ஸை பொலிஸ்

pa

காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை

September 13, 2026

இலங்கைச் சுங்கத் திணைக்களத்தினால் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை” குறித்து