பௌத்த பிக்கு ஒருவருக்கு மனித உரிமைகள் என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை – ஓமல்பே சோபித தேரர்

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு பிக்குவுக்கும் தனது துறவற ஆடையைக் களைந்துச் செல்லும் உரிமை உண்டு. அதற்கு எவராலும் தடைகளை விதிக்க முடியாது. பௌத்த பிக்கு ஒருவருக்கு மனித உரிமைகள் என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை என ஸ்ரீபோதிராஜ அறக்கட்டளையின் ஸ்தாபகரும், எம்பிலிபிட்டிய இங்குரஆர ஸ்ரீபோதிராஜ பிக்கு பயிற்சி மையத்தின் ஆன்மீகப் பணிப்பாளருமான ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பௌத்த பிக்கு ஒருவருக்கு மனித உரிமைகள் என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை. ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போது ஜனநாயக உரிமைகளையும் மனித உரிமைகளையும் சுமந்துதான் இவ்வுலகத்துக்கு வருகிறான். ஆனால், பிக்கு ஒரு நிலைப்பாட்டில் அந்த அனைத்து உரிமைகளையும் தியாகம் செய்துவிட்டுத்தான் சாசனக் கோட்பாட்டுக்குள்ளே நுழைகிறார். தனது சுய விருப்பத்தின் பேரில் தனக்கிருந்த மனித உரிமைகளை நிராகரித்துவிட்டுத்தான் அவர் துறவறத்தை ஏற்கிறார்.

அவ்வாறு துறவறம் பூணும் ஒரு பிக்கு, அன்று முதல் மூன்று விதமான சட்ட அமைப்புகளுக்குக் கட்டுப்படுகிறார். முதலாவது, விநய பிடகத்தில் புத்த பெருமானால் விதிக்கப்பட்டுள்ள பிராதிமோட்ச விதிகள். இரண்டாவது, நாட்டின் இராஜ நீதி எனப்படும் அரச சட்டம். தான் ஒரு பிக்கு என்பதற்காக நாட்டின் சட்டத்திலிருந்து விலகிவிட முடியாது. பிக்குகள் அரச சட்டத்துக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பது தர்ம நூல்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மூன்றாவது, சமூக ஒழுக்க விழுமியங்கள் தொடர்பான விதிகள். இந்த மூன்று சட்டப் பிரிவுகளுக்கும் பிக்குகள் அடிபணிய வேண்டும்.

மனித உரிமைகளை நிராகரித்துவிட்டு துறவறத்துக்குள் நுழைந்த பிக்குவுக்கு இருப்பது சாதாரண மனித உரிமைகள் அல்ல, அது விடுதலை குறித்த உன்னதமான உரிமையாகும். தர்மத்தின் கோட்பாடுகளைப் பின்பற்ற முடியாத ஒருவருக்கு, எந்த நேரத்திலும் துறவிக்கோலத்தை நீக்கிவிட்டுச் செல்லும் சுதந்திரம் உண்டு. ஏனைய மத நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, பௌத்த பிக்குவுக்கு இருக்கும் விசேட வரப்பிரசாதம் இதுவாகும். எனவே தனது ஆடையைக் களைந்து இல்லறத்துக்குத் திரும்புவதற்கு எவராலும் தடை விதிக்க முடியாது.

பிக்குவானவர் தனக்கு விருப்பமானதைச் செய்துகொண்டு காவி உடையில் தங்கியிருக்க மனித உரிமைகளைப் பயன்படுத்த முடியாது. அவர் தான் சுயமாக ஏற்றுக்கொண்ட பொறுப்புகளுக்கும் விதிகளுக்கும் உட்பட்டே வாழ வேண்டும். வரலாற்றில் தர்ம சங்காயனைகளின் போது, தர்மத்தைப் பாதுகாப்பதற்காகத் தகுதியற்ற ஆயிரக்கணக்கானோர் சாசனத்திலிருந்து நீக்கப்பட்டனர். தர்மசோக மன்னன், வோஹாரிக திஸ்ஸ மன்னன் மற்றும் மகா பராக்கிரமபாகு மன்னன் போன்றோரின் ஆட்சிக் காலத்தில் இவ்வாறான சாசனச் சீர்திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன.

தற்போது இவ்வாறான நடைமுறைகள் சரியாகச் செயற்படாத காரணத்தினாலேயே பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன. அரசாங்கம் தலையிட்டு, மகாநாயக்க தேரர்களின் ஆலோசனையுடன் சாசனச் சீர்திருத்தங்களை அடிக்கடி முன்னெடுக்க வேண்டும். அதுவே சாசனத்தின் அசிவிருத்திக்கு வழியாகும். மனித உரிமைகளைப் பற்றிப் பேசிக்கொண்டு, தமக்குத் தேவையானவற்றைச் செய்துகொண்டு துறவற ஆடையில் தங்கியிருக்க எவருக்கும் உரிமை இல்லை. இந்த விதிகளைப் பின்பற்ற முடியாதவர்கள் கௌரவமாக அதனை நீக்கிவிட்டு சாதாரண இல்லற வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். அதை விடுத்து, மனித உரிமைக் கதைகளைக் கூறிக்கொண்டு தவறான செயல்களில் ஈடுபடுவது சாசனத்தின் வீழ்ச்சிக்குத்தான் வழிவகுக்கும் என்றார்.

namal

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சி – நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு

July 27, 2026

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிக்கும் தார்மீக

756724618_1047290304383453_223524354740937400_n

திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியில் வாகன விபத்து ஒருவர் பலி சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்.

July 27, 2026

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் விநாயகபுரம் 01 பிரதான வீதியில் திருக்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இன்று

suresh11

சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு; நாளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்

July 27, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு

SPHU2A42SZGE7MVH4PDL2ITFMY

காணாமல் போன கால்கரி சிறுவன் பார்க்கர் வெல்ஸ் கடத்தப்படவில்லை; காவல்துறை தகவல்

July 27, 2026

11 வயதான பார்க்கர் வெல்ஸைக் கண்டறிவதற்கு வேறு என்னென்ன வழிமுறைகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்பது குறித்து கனடாவின் காணாமல் போன குழந்தைகளுக்கான

NJBRXZLYK5F3BKA4TRRZ2H2UBA

பிஃபா உலகக் கோப்பை போட்டிகளைத் தொடர்ந்து கனடாவில்  பலர்அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பம்

July 27, 2026

2026 பிஃபா (FIFA) உலகக் கோப்பை போட்டிகளுக்காக கனடாவுக்குப் பயணம் செய்த பலர் நபர்கள், போட்டிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அந்நாட்டில்

8

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு ‘சிக்கல்’ – லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

July 27, 2026

சென்னை: கடந்த 2015-2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்த வைத்திலிங்கம், அடுக்குமாடி வீடு

55OGDDGBRNDMDLRPGLCJT6AH5Q

கேப் பிரெட்டன் (Cape Breton) தீ விபத்து நடந்த இடத்தில் சடலம் மீட்பு; காவல்துறையினர் தீவிர விசாரணை

July 27, 2026

மெக்ஆடம்ஸ் ஏரி பகுதியில் நடந்த உயிரிழப்பை ஏற்படுத்திய தீ விபத்து குறித்து கேப் பிரெட்டன் பிராந்திய போலீசார் விசாரணை நடத்தி

7

அடையாளம் தெரியாத நபர் தொல்லை: மேயர் பிரியா பரபரப்பு புகார்!

July 27, 2026

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி மேயராக பதவி வகித்து வரும் பிரியா, தனக்கு சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம்

6

ஆட்சிக்கு வந்த இரண்டரை மாதங்களில் ரூ.20,881 கோடி கடன்- தவெக அரசை விளாசிய கீதாஜீவன்!

July 27, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்

ED5JQPYN5NF6XDCAHMETPYHFMM

காணாமல் போன 23 வயது டொராண்டோ பெண்ணைத் தேட கட்டளை மையம் (Command Post) அமைப்பு

July 27, 2026

டிக்சன் மற்றும் மார்ட்டின் குரோவ் வீதிகளுக்கு அருகே கடைசியாகக் காணப்பட்ட 23 வயது பெண்ணை டொராண்டோ போலீசார் தேடி வருகின்றனர்.

AAFNGBSIVY7P5CLUU3MZCILP4M

ஆஜாக்ஸ் பூங்காவில் சிறுவர்கள் நிறைந்திருந்த விளையாட்டுப் பகுதியில் காரை ஓட்டிச் சென்றதாக நபர் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்குப்பதிவு

July 27, 2026

இம்மாத தொடக்கத்தில், ஆஜாக்ஸ் (Ajax) பகுதியிலுள்ள பூங்கா ஒன்றில் சிறுவர்கள் நிறைந்திருந்த விளையாட்டுப் பகுதியிலும் நடைபாதைகளிலும் காரை ஆபத்தான முறையில்

XUP2KI6NKFC6BB6QNVCW5Y4UCQ

அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு; அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

July 27, 2026

அமெரிக்க தூதரகத்திற்கு அருகே அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை திங்கட்கிழமை அதிகாலை அமெரிக்க தூதரகத்திற்கு