போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்களக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!

போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்களக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக கட்சிகளை இதற்கு சம்பந்தப்படுத்தக்கூடாது. தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த பலரும் கடந்த காலங்களில் போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டமைக்காக கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் என்பதை ஜனாதிபதிக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டில் போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரம் அதிகரித்துள்ளது. கடந்த காலங்களிலும் இவ்வாறான நிலை இருந்துவந்தது. அதனால் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளதுபோன்று கடந்த காலங்களிலும் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் அப்போது இருந்த அரசாங்கங்கள் எடுத்துள்ளன. அதனால் போதைப்பொருளுக்கு எதிராக கட்சி போதமின்றி அனைவரும் இணைந்து செயற்பட்டிருக்கின்றனர்.

என்றாலும் நாட்டு மக்கள் இன்று பாரிய பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார்கள். விவசாயிகள் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டு வருகிறார்கள். இவ்வாறான பிரச்சினைகள் தலைதூக்கி இருக்கும்நிலையில் ஜனாதிபதி அந்த போராட்டங்களை மறைக்கும்வகையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை மேல் எழுப்பி இருக்கிறார். அதேநேரம் போதைப்பொருள் கைப்பற்றிய தொகையைும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

ஆனால் நல்லாட்சி அரசாங்க காலத்தில் 2019ல் நாங்கள் கைப்பற்றிய போதைப்பொருள் தொகையை விட குறைவாகவே இந்த அரசாங்கம் இரண்டு வருட காலத்தில் கைப்பற்றி இருக்கிறது. அரசாங்கம் இந்த வேலைத்திட்டத்தை சத்தம் போட்டுக்கொண்டு செய்கிறது. ஆனால் நாங்கள் எந்த பிரசாரமும் மேற்கொள்ளாமல் செய்துவந்தோம்.

அதேநேரம் கடந்த காலங்களில் கொலை செய்யப்பட்ட கீத்நொயார், லசன்த் விக்ரமதுங்க பாேன்ற பட்டியை ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

அதேநேரம் 88, 89 காலப்பகுதியில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர், ரூபவாஹினி கூட்டுத்தாபளத்தின் செய்தி தயாரிப்பாளர் கொலை செய்யப்பட்டார். இவ்வாறு பலர் இந்த காலப்பகுதியில் கொலை செய்யப்பட்டார்கள். இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அதேபோன்று எமது கட்சி அமைப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பில் நீதி அமைச்சர் தெரிவித்திருந்தார். அவர் தவறு செய்திருந்தால், அவருக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். ஆனால் பேலியகொடை நகரசபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவரின் மகன் போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யபட்டிருந்தார்.

அவரது கணவரும் பாேதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார். அதேபோன்று இவ்வாறு தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதனால் இந்த விடயத்தில் கட்சிகளின்பால் கை நீட்ட வேண்டாம் என்றே நாங்கள் தெரிவிக்கிறோம்.

அதேபோன்று இந்த காலப்பகுதியில் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்ட எண்ணிக்கையை ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் அதனையும் விட அதிக எண்ணிக்கையிலான துப்பாக்கிகள் 2014 காலப்பகுதியில் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. அதனால் ஜனாதிபதி ஒரு புதிய விடயம்போல் இதனை தெரிவிக்க முயற்சிக்கிறார். அத்துடன் இந்த நாட்டில் துப்பாக்கியால் கொலை செய்வதை பிரபாகரனுக்கு கற்பித்துக்கொடுத்ததும் உங்களது கட்சி தலைவர் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

எனவே போதைப்பொருள் ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுபோன்று, போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளவர்களை புனர்வாழ்வளிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

CWY7Q7QYY5DLXEWDI2XETVXMWU

முக்கிய ஆதாரங்கள்’ பறிமுதல்: கேப் பிரெட்டன் நபர் மீது பாலியல் கடத்தல் குற்றச்சாட்டு

June 26, 2026

இந்த வார தொடக்கத்தில் வீடு ஒன்றிலிருந்து “முக்கிய ஆதாரங்களை” பறிமுதல் செய்துள்ளதாகக் கூறியுள்ள காவல்துறையினர், அதனைத் தொடர்ந்து கேப் பிரெட்டன்

police rcmp

நியூ பிரன்சுவிக் (N.B.) பால்மோரல் அருகே விபத்தில் ஒருவர் பலி: இரண்டு வாகனங்களைத் தேடும் முக்கிய குற்றப் புலனாய்வுப் பிரிவு

June 26, 2026

கனடாவின் நியூ பிரன்சுவிக் (New Brunswick) மாகாணத்தில் உள்ள பால்மோரல் அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

hamilton police1

ஹாமில்டனில் வாகன நிறுத்துமிடத் தகராறு: பெண்ணை தலைமுடியைப் பிடித்து இழுத்துத் தாக்கிய இரு பெண்கள் கைது

June 26, 2026

ஒன்டாரியோவின் ஹாமில்டன் (Hamilton, Ont.) நகரில் கடந்த வார இறுதியில் வாகனத்தை நிறுத்தும் இடம் (Parking spot) தொடர்பாக ஏற்பட்ட

10_thirumavalavan-expresses-anguish-over-criticisms-26-06-2026

இழிவாக விமர்சித்து வருகிறார்கள்; வீடியோ வெளியிட்டு திருமாவளவன் ஆதங்கம்!

June 26, 2026

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் தனது அரசியல் பயணம் மற்றும் எதிர்கொண்டு வரும் விமர்சனங்கள் குறித்து வீடியோ வாயிலாக விரிவான

9

எ.வ.வேலு வீட்டில் நடத்தப்பட்ட சோதனை பழிவாங்கும் நடவடிக்கை இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்

June 26, 2026

ஈரோடு: சத்தியமங்கலத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில்

8

பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் -மதிமுக எம்எல்ஏ செந்தில்செல்வன் திட்டவட்டம்

June 26, 2026

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்த அறிகுறிகளை வெளிப்படுத்திய நிலையில், அக்கட்சியின் சீர்காழி சட்டமன்ற

732081906_1056317700399332_4953181948006225811_n

வின்சர் நகரில் $30,000 மதிப்பிலான அரிய வகை பறவைகள் திருட்டு: ஒருவர் கைது, இருவருக்கு வலைவீச்சு

June 26, 2026

வின்சர் (Windsor) நகரின் குடியிருப்புப் பகுதி ஒன்றிலிருந்து சுமார் 30,000 டாலர் மதிப்பிலான 30 அரிய வகை (Exotic) பறவைகள்

7

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? – அவரே அளித்த பதில்

June 26, 2026

சென்னை: தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியில்,

6

இடைத்தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமானை பொது வேட்பாளராக நிறுத்த முடிவு?

June 26, 2026

சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதி இடைத்தேர்தல்கள் அரசியல் களத்தை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக, அம்பாசமுத்திரம் தொகுதியில் நாம்

PEOPLE ACT

உரிமைப்பந்தம்” அணையா விளக்கு போராட்டத்தின் ஆறு அம்சக் கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தும் அமைதிவழி மக்கள் எழுச்சி

June 26, 2026

செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வுகள் தொடர்ந்து வெளிப்படுத்திவரும் உண்மைகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நீதி கோரும் குரலை மேலும் வலுப்படுத்தியுள்ளன. இந்த

LFD5GM35XRC7XA4LQ5POAXKYLA

வோன் மாளிகையைச் சாம்பலாக்கிய தீ விபத்தின் பின்னணியில் தீவைப்புச் சதி என சந்தேகம்: பொலிஸ்

June 26, 2026

வோன் (Vaughan) நகரில் உள்ள ஒரு மாளிகையில் ஏற்பட்ட தீ விபத்து, திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு தீவைப்புச் சதி (Arson)

sar

சரித் அபேசிங்கவின் உறுப்பினர் நீக்கியது ஐக்கிய மக்கள் சக்தி

June 26, 2026

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு ஒன்றின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, ஹொரனை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி