பொருளாதாரத் தடையிலிருந்து புத்தகத் தடை வரை: தமிழ் இனத்தின் மீதான தொடரும் அடக்குமுறைகளை நிறுத்து – கிளிநொச்சி ஊடக அமையம்

இலங்கையில் சிறுபான்மை தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான அடக்குமுறைகளின் ஒரு அங்கமாக, தற்போது தமிழ்
எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் நூல்கள் மீது இலங்கை அரசு விதித்து வரும் தடைகளை கிளிநொச்சி ஊடக அமையம் வன்மையாகக் கண்டிக்கிறது. இது மிக
மோசமான ஜனநாயக மறுப்பு மாத்திரமன்றி, தமிழ் இனத்தின் சிந்தனைச் சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள பண்பாட்டு யுத்தமாகும். எனகிளிநொச்சி ஊடக அமையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்த காலத்தில் தமிழ் மக்கள் மீது பொருளாதாரத் தடை, மருந்துத் தடை, விவசாயத் தடை என வாழ்வாதாரத்தின் மீது தாக்குதல் நடத்திய பேரினவாத அரசு, யுத்தம் முடிவடைந்த பின்னரும் தடைகளைத்
தொடர்ந்த வண்ணமே உள்ளது. தமிழ் மக்கள் தமது இறந்த உறவுகளை நினைவுகூரத் தடை, ஜனநாயக ரீதியாகப் போராடத் தடை, சொந்த நிலங்களில் வாழ்வதற்குத் தடை என நீண்டு செல்லும் இந்த வரிசையில், இப்போது தமிழ் எழுத்தாளர்களின்
‘எழுத்துச் சுதந்திரமும்’ நசுக்கப்படுகின்றது.
கிளிநொச்சி எழுத்தாளர் தீபச்செல்வனின் பயங்கரவாதி, சயனைட் ‘எழுத்தால்
நான் யுத்தம் செய்கின்றேன்’ நூல்கள் தடுத்து வைக்கப்பட்டன, பின்னர் பயங்கரவாதி, சயனைட் நூல்கள் விடுவிக்கப்பட்டு எழுத்தால் நான் யுத்தம்
செய்கின்றேன்’ நூல் இன்றுவரை சுங்கப் பிரிவினால் விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், எழுத்தாளர் சோபாசக்தியின் ‘லைடன்தீவு-மண்டைதீவு படுகொலைகளும் புதைகுழிகளும்’, பி. இரயாகரனின் ‘அரசியல் அநாதைகள்’, ம. மதிவண்ணனின் ‘நெரிந்து’, டிலுக்சன் மோகனின் ‘படுபட்சி’ உள்ளிட்ட மிக முக்கியமான
நூல்கள் அரசினால் தடுத்து வைக்கப்பட்டிருப்பது தமிழ் மக்களின் வரலாற்றுப் பதிவுகளை அழிக்கும் முயற்சியாகும்.
எழுத்துச் சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் உயிர்நாடி: சர்வதேச ரீதியில் கருத்துச் சுதந்திரம் மற்றும் பேச்சுச் சுதந்திரம் குறித்துப் பேசுகின்ற இலங்கை அரசு, உள்நாட்டில் தமிழ் எழுத்தாளர்களின் பேனா முனைகளை முறிக்க முயல்வது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். வரலாற்றின் வலிகளைப் பதிவு
செய்வதும், சமூகத்தின் அவலங்களை எழுதுவதும் ஒரு எழுத்தாளனின் கடமையாகும். அத்தகைய படைப்புகளைப் ‘பயங்கரவாதம்’ என்ற முலாம் பூசித் தடுப்பது, ஒரு இனத்தின் ஆன்மாவைச் சிதைப்பதற்குச் சமமானது.எனத் தெரிவித்துள்ள கிளிநொச்சி ஊடக அமையம்
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் நூல்களையும் நிபந்தனையின்றி
உடனடியாக விடுவிக்க வேண்டும்.
தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அச்சமின்றித் தமது கருத்துகளைப் பதிவு செய்வதற்கான சூழலை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடக மற்றும் எழுத்துச் சுதந்திரத்தை நசுக்கும் செயற்பாடுகளை அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.எனவும்
கோரிக்கை விடுத்துள்ளதோடு
எந்தவொரு அடக்குமுறைச் சட்டங்களாலும் உண்மையை மறைத்துவிட முடியாது. பேனா
முனைகளை முறிப்பதன் மூலம் வரலாற்றைத் துடைத்துவிட முடியாது என்பதை அரசுக்கு வலியுறுத்திக் கூறுகிறோம். தமிழ் எழுத்தாளர்களின்
உரிமைக்காகவும், கருத்துச் சுதந்திரத்திற்காகவும் கிளிநொச்சி ஊடக அமையம் என்றும் முன்னிற்கும் குரல் கொடுக்கும் என அவ்வறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
719852590_10242235868731525_4126836530523673060_n

சொல்லிசை பாடகரை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

June 10, 2026

சொல்லிசைப் பாடகர் கணேஸ்குமார் சங்கீத்சன்னை உடனடியாக விடுதலை விடுதலை செய்யுமாறு கோரியும் பயங்கரவாதச் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும் இன்று

5XLYI5BEFJCEVNM63BGIUWFOPU

பி.சி (B.C.) பகுதியில் வாகனம் கவிழ்ந்ததில் 2 குழந்தைகள் பலி, 3 பேர் காயம்

June 10, 2026

வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) பகுதியில், ஏழு வயது சிறுமி ஓட்டிய ‘ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்side-by-side vehicle

canada bank gover

பொருளாதார மந்தநிலை (Recession) என்ற வார்த்தையை நான் பயன்படுத்த மாட்டேன்’: கனடா வங்கி ஆளுநர்

June 10, 2026

கனடா வங்கியின் (Bank of Canada) ஆளுநர் டிஃப் மேக்லம் (Tiff Macklem), இதுவரை தாம் பார்த்த தரவுகளின்படி, நாட்டின்

4CLOLKCC2FG3RAQOW6ITDCPJGY

வடக்கு ஒன்டாரியோவில் கொல்லப்பட்ட பிராம்ப்டன் OPP அதிகாரி தருண் பாலி: நாம் அறிந்தவை

June 10, 2026

செவ்வாய்க்கிழமை மதியம் வடக்கு ஒன்டாரியோவில் பணியின் போது கொல்லப்பட்ட ஒன்டாரியோ மாகாண காவல்துறை (OPP) அதிகாரி தருண் பாலி, பிராம்ப்டனைச்

court-judge-hammer-gavel-696x398

அரசு வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த விவகாரம்: விமல் வீரவன்சவின் சகோதரருக்கு வெளிநாட்டு பயணத்தடை

June 10, 2026

அரசாங்க வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு அமைவாக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத்

Screenshot_20260610_143451_Instagram

போலி கனடா கடவுச்சீட்டு மூலம் லண்டன் செல்ல முயற்சி: தாய்லாந்து விமான நிலையத்தில் இலங்கை நாட்டவர் கைது

June 10, 2026

தாய்லாந்து தலைநகர் பேங்காக் அருகே உள்ள சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில், போலி கனடா நாட்டு கடவுச்சீட்டைப் (Passport) பயன்படுத்தி

721089767_10242010452096412_6680718909023026465_n

மண்டை தீவு படுகொலையின் 40 ஆவது ஆண்டு நினைவு இன்று(10) குருநகர் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது

June 10, 2026

குருநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன நினைவு தூவியில் குருநகர் மக்கள் அஞ்சலி செலுத்தினர். குரு நகர் ஆலய பங்குத்தந்தை அவர்கள் திருப்பலி

dailythanthi_2026-06-10_7scngxem_Untitled-11

“10, 12-ம் வகுப்பில் மாஸ் காட்டிய மாணவர்களுக்கு ரூ.72 லட்சம் ஊக்கத்தொகை!” – அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி!

June 10, 2026

சென்னை ‘சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 2,090 பேருக்கு ரூ.72.03 லட்சம்

kizhakkunews_2025-10-29_bqqnv4dz_CTR-NirmalKumar (1)

“மின்தடையை ஏற்படுத்தி தவெக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த இமாலய சதி!” – 125 அதிரடி ரோந்து வாகனங்களைத் தொடங்கி வைத்து அமைச்சர் நிர்மல்குமார் பகிரங்கக் குற்றச்சாட்டு!

June 10, 2026

சென்னை: “தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் எவ்வித மின்சாரத் தட்டுப்பாடும் துளியும் இல்லை; ஆனால், ஆங்காங்கே வேண்டுமென்றே செயற்கையான மின்தடையை ஏற்படுத்திப்

che

21ஆம் நாள்; செம்மணி மனிதப் புதைகுழியில் 12 என்புத் தொகுதி புதிதாக அடையாளம்

June 10, 2026

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது 12 என்புத் தொகுதி புதிதாக அடையாளம் காணப்பட்டது. 7

image_a55b9f0e51

முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா ஜூன் 12 வரை விளக்கமறியலில்

June 10, 2026

கொழும்பு: தென் மாகாண முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷான் விஜயலால் டி சில்வா, கொழும்பு பிரதம நீதவான்

doctor11

பெர்த்தில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை: இலங்கை மருத்துவர் குற்றவாளி எனத் தீர்ப்பு

June 10, 2026

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், அக்குபஞ்சர் (Acupuncture) சிகிச்சையின் போது பெண் நோயாளி ஒருவருக்கு பாலியல் தொல்லை