பொருளாதார நெருக்கடியைக் காரணம்காட்டி பொசன் பௌர்ணமி உற்சவத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது – வலவாஹாங்குனவெவே தம்மரத்ன தேரர்

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளையும் எரிபொருள் விலையேற்றத்தையும் சாட்டாகக் கொண்டு, பௌத்த வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பொசன் பௌர்ணமி உற்சவத்தைக் குறைத்து மதிப்பிடவோ அல்லது முடக்கிவிடவோ முடியாது என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹாங்குனவெவே தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

மிஹிந்தலை ரஜமஹா விகாரை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சர்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்பண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இம்முறை பொசன் வாரமானது ஜூன் 26 ஆம் திகதி முதல் ஜூலை 02 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜூன் 29 ஆம் திகதி பொசன் பௌர்ணமி தினத்தில், மிஹிந்து மகா ரஹதனார் இலங்கைக்கு வருகை தந்து 2334 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

எரிபொருள் விலை உயர்வு, பொருளாதாரச் சுமை எனப் பல்வேறு சவால்கள் நாட்டைச் சூழ்ந்திருக்கலாம். ஆனால், இவற்றை ஒரு காரணமாகக் கூறி, எமது வரலாற்றுச் சிறப்புமிக்க பொசன் பௌர்ணமி நிகழ்வைத் தள்ளிப்போடவோ அல்லது அதன் முக்கியத்துவத்தைக் குறைக்கவோ கூடாது.

மத ரீதியான சடங்குகள் மற்றும் கலாசார விழுமியங்களைப் பேணுவது எமது கடமை. இவ்வாறான கடினமான காலங்களிலும், மிஹிந்து மகா ரஹதனாரின் வருகையை நினைவு கூரும் இந்த உன்னத நிகழ்வை மிகவும் அர்த்தமுள்ளதாகவும், பக்தர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையிலும் நாம் அனைவரும் இணைந்து முன்னெடுக்க வேண்டும்

இம்முறை பொசன் காலப்பகுதியில் பக்தர்களின் வருகையைச் சீர்செய்யவும், போக்குவரத்து அமைச்சு மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் வழிகாட்டலில், அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை இடையில் விசேட பேருந்து சேவைகளும், ரயில் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் அநுராதபுரத்திலிருந்து மிஹிந்தலைக்கு இலவசத் தொடருந்து சேவைகளும் வழங்கப்படவுள்ளன. இம்முறை பொசன் சேவைகளுக்காக மாத்திரம் 400 இற்கும் மேற்பட்ட பேருந்துகள் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், மேலதிக தேவைகளுக்காக நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்தும் பேருந்துகள் வரவழைக்கப்படவுள்ளன.

பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். அன்னதான சாலைகள் சுகாதார அதிகாரிகளிடம் கண்டிப்பாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.

பதிவு செய்யப்படாத மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறும் தான சாலைகள் உடனடியாக அகற்றப்படும். பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையைத் தவிர்த்து, சூழலைப் பாதுகாக்கும் வகையில் பொசோன் உற்சவத்தை முன்னெடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

பொசன் வாரத்தில் மிஹிந்தலைக்கு வருகை தரும் இளைஞர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் மிகுந்த ஒழுக்கத்துடனும், பொறுப்புடனும் செயற்பட வேண்டும் எனப் பொலிஸார் அறிவுறுத்தினர். ஆபாசமான சத்தங்களை எழுப்புவது அல்லது சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

நாட்டின் தற்போதைய சூழலுக்கு மத்தியிலும், மதம் மற்றும் கலாசார விழுமியங்களுக்கு முன்னுரிமை அளித்து, மிஹிந்து மகா ரஹதனார் ஆற்றிய தொண்டிற்கு மதிப்பளிக்கும் வகையில், ஒட்டுமொத்த தேசமும் ஒன்றிணைந்து பொசன் உற்சவத்தை மிகவும் பாதுகாப்பானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் கொண்டாடப் பங்களிப்பு வழங்க வேண்டும் என்றார்.

kasthuri-1-2024-11-0308395fba104cc334646f143d18f661-4x3

இடைத்தேர்தலில் த.வெ.க. வென்றால் காங்கிரஸ் கூட்டணி முறிய வாய்ப்பு: பா.ஜ.க. நிர்வாகி கஸ்தூரி

August 25, 2026

கும்பகோணம்: கஸ்தூரியின் கோயில் தரிசனமும் செய்தியாளர் சந்திப்பும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு வந்த பா.ஜ.க. மூத்த நிர்வாகி கஸ்தூரி, அங்குள்ள

U2-1024x620

“தைரியம் இருந்தால் அந்த மூன்று கோப்புகளை ஓபன் பண்ணுங்க!” – முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி சவால்

August 25, 2026

சென்னை: நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில், ‘போராளி ஓய்வதில்லை’ என்ற தலைப்பில் தி.மு.க.

1200-675-27473574-thumbnail-16x9-megamalai

மேகமலை விவகாரம்: தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை மனு!

August 25, 2026

தேனி: ஆட்சியரின் உத்தரவும் மக்களின் அதிர்ச்சியும் தேனி மாவட்டம், வருஷநாடு, மேகமலை உள்ளிட்ட 98 மலை கிராம மக்களை வெளியேற்றும்

hindutamil-prod_2026-08-24_3sbtyc61_IMGTRBRAJAA210ED3RG16

“விஜய்யின் ஈகோவுக்காகவே பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து!” – டி.ஆர்.பி.ராஜா கடும் விமர்சனம்

August 25, 2026

சென்னை: பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தைத் த.வெ.க. அரசு கைவிட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சென்னை அண்ணா

Eb2zWUlU0AE67ID

சாத்தான்குளம் வழக்கு: தூக்குத் தண்டனை கைதிக்கு 2 நாள் அவசர கால விடுப்பு வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு!

August 25, 2026

மதுரை: ரகு கணேஷுக்கு அவசர கால விடுப்பு சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று சிறையில்

cham

சமிந்த விஜேசிறிக்கு பிணை

August 25, 2026

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள்

Parliame

22ஐ சவாலுக்கு உட்படுத்தி 21 மனுக்கள் தாக்கல்

August 25, 2026

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்தை சவால் செய்து இதுவரை உயர் நீதிமன்றத்தில் 21 மனுக்கள்

can

மாணவியின் மனிதநேயப் பண்பு!

August 25, 2026

அக்கரப்பத்தனை பகுதியில் ஏ.டி.எம். இயந்திரத்தில் விட்டுச் செல்லப்பட்டிருந்த 15,000 ரூபாய் பணத்தை கண்டெடுத்த உயர்தர மாணவி ஒருவர், அதனைத் தாமதிக்காமல்

dd

117ம் பிறந்தநாளைக் கொண்டாடிய உலகின் மிக வயதான பெண்!

August 25, 2026

உலகின் மிக வயதான வாழ்ந்துகொண்டிருக்கும் நபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரித்தானியப் பெண்மணி எதேல் கேட்டர்ஹாம், தனது 117-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

doug-ford-ontario-premiere-february-7-2023

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்

August 24, 2026

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்எதிர்வரும் புத்தாண்டு முதல் கனடாவின் அனைத்து

trump carney

வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை 50% ஆக உயர்த்த ட்ரம்ப் திட்டம்

August 24, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடாவுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்வரும் புத்தாண்டு முதல் “அனைத்து வகையான பெரிய

au

அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி

August 24, 2026

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட்